Latest News
Showing posts with label தமிழ் வளர்ப்போம். Show all posts
Showing posts with label தமிழ் வளர்ப்போம். Show all posts

July 12, 2017

தமிழர் உலகையே ஆண்ட மூத்தகுடி என்பதற்கு மற்றுமொரு ஆதாரம்!
by admin - 0

தமிழர் உலகையே ஆண்ட மூத்தகுடி என்பதற்கு மற்றுமொரு ஆதாரம்!









"டௌமாடாபாகாடானிஹனகொர்வொகோர்டமடெயடுரீபுகபிகிமொங்கஹொரொனுகுபொகயீபெநுவக்கிடனதஹு" இது ஒரு ஊரின் பெயர். 

என்னது.. இது ஒரு பெயரா அதுவும் ஊரின் பெயரா என்று நீங்கள் வியந்து முடிப்பதற்குள் இன்னொரு தகவலும் உங்களுக்காக,  நியூசிலாந்தில் உள்ள இந்த ஊருடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் நமது முன்னோரான தமிழர்கள். 

அந்த ஊரைப்பற்றி அறிந்து  கொள்ள ஆர்வமாக உள்ளதுதானே, தொடர்ந்து படியுங்கள்..

”டௌ-மா-டா-பா-கா-டா-னி-ஹ-ன-கொர்-ஒ-ஒர்-ட-ம-டெ-அ-டு-ரீ-பு-க-பி-கி-மொங்க்-அ-ஹொ-ரொ-னு-கு-பொ-க-ஈ-பெநு-அக்கி-ட-ன-த-ஹு” என்று உச்சரிக்கப்படும் இந்த மலை, நியூசிலாந்தின் தெற்கு “ஹாக்ஸ் பே”-ல் உள்ள வெயுபுகுருவின் தென்பகுதியில், பொரங்காஹூவுக்கு அருகே உள்ள ஒரு மலை.

இந்த மண்ணோடு நெருங்கிய தொடர்புடைய மாவோரி இன மக்களின் நீண்ட நெடும் வரலாற்றை தன் நீண்ட பெயரில் மட்டுமில்லாமல் ஒவ்வொரு  பாறைகளிலும் தாங்கி நிற்கிறது இந்த ஊர்..

இது வெறும் “மாவோரி” என்ற நாம் அறியாத இனத்திற்கான வரலாற்றை மட்டுமல்ல நமது தமிழ் முன்னோர்களையும் இப்பகுதியின்  மாவோரி மக்களோடு அவர்கள் கொண்டிருந்த வணிகத் தொடர்பு வரலாற்றையும்  தாங்கி நிற்கிறது. 

மாவோரிகள் (Māori) எனப்படுபவர் நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்கள். இவர்கள் கிழக்கு பொலினீசியாவிலிருந்து வந்தவர்கள். இவர்கள் மாவோரி என்ற சிறப்புமிக்க மொழியைப் பேசுகிறார்கள், இம் மொழியிலேயே  இம்மலைக்கு இத்தகைய நீண்ட பெயர் சூட்டப்பட்டுள்ளது.

19 நூற்றாண்டில் ஐரோப்பியர்களின் வருகையால் மாவோரி அரசுகள் வீழ்ச்சியடைந்தன. ஐரோப்பியர்கள் வாயிலாகப் பரவிய புதிய வகை நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி இல்லாமையால் மாவோரிகளின் மக்கள்தொகை 1840 இற்குப் பிறகு பெருமளவு குறைந்தது.

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து மீண்டும் மாவோரிகளின் எண்ணிக்கை கூடத்தொடங்கியது. 1960 களிலிருந்து மாவோரி சமூகத்திலும் பண்பாட்டிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டது. மாவோரி இனமக்களின் இந்த சமூக பண்பாட்டுமாற்றமே இன்று உலகம் முழுவதும் இந்த இன மக்கள் பரவ காரணம் 

மாவோரிகள் தங்களது முன்னோர்கள் கடல் கடந்து பல பயணங்கள் மேற்கொண்டதாக கூறுவர். இதே கருத்துக்கள் மற்ற பாலினேசிய பழங்குடிகளுக்கும் உண்டு. இம்மாவோரி மக்கள் தமிழ் மக்களுடனும் தொடர்பில் இருந்தமைக்கு பல்வேறு ஆதாரங்கள் கிடைக்க பெற்றுள்ளன. குறிப்பாக இம்மாவோரிகள் பேசும் மாவோரி மொழிக்கும் தமிழுக்கும் பலவித் தொடர்புகள் உள்ளதாக டெய்லர் என்னும் பாதிரியார் கண்டறிந்துள்ளார். இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வெண்கல மணி ஒன்று நியுசிலாந்து கரியோரா கிராமத்தில் கண்டறியப்பட்டது. இம்மணியைக் கொண்டு வந்த கப்பல் தேக்கு மரத்தால் செய்யப்பட்டது. இதனால் கடல் கடந்து தன் முன்னோர்கள் பயணித்ததாக கூறும் மாவாரிகளுக்கும் தமிழ் மணி நியுசிலாந்தில் கிடைத்துள்ளதால் தமிழருக்கும் அதிக தொடர்புண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

”டௌ-மா-டா-பா-கா-டா-னி-ஹ-ன-கொர்-ஒ-ஒர்-ட-ம-டெ-அ-டு-ரீ-பு-க-பி-கி-மொங்க்-அ-ஹொ-ரொ-னு-கு-பொ-க-ஈ-பெநு-அக்கி-ட-ன-த-ஹு” என்று உச்சரிக்கப்படும் இந்த மலை 305 மீட்டர் (1,001 அடி) உயரம் உடையது .இந்த மலையின் நீண்ட பெயரானது இது சுருக்கமாக “டாமதேயா” என சுருக்கப்படுகின்றது. டாமதேயா என்னும் பெயர்  நில ஆராய்ச்சியாளர் ஒருவரை குறிப்பதாக கூறப்படுகின்றது 

டாமதேயா நியூசிலாந்தின் மிகப்பெரிய ஆராய்ச்சியாளர்களில் ஒருவராக இருந்தார், மேலும் அவர் “மாவோரி மார்கோ போலோ” என்றும் புகழப்படுகிறார்.. அவர் வட மற்றும் தென் தீவுகளை சுற்றிச் சுற்றித் திரிந்தார் எனவும் குறிப்புகள் கிடைகின்றன.

வெஸ்ஸஸ் நியூசிலாந்து கையேடு மற்றும் தி நியூசிலாந்து ஹெரால்டு புத்தகம் ஆகியவற்றின் படி இந்த மலை , உலகில் எந்த ஆங்கில மொழி பேசும் நாட்டிலும், இரண்டாவது மிகப்பெரிய இடத்தின் பெயராக கருதப்படுகிறது.மலையின் பெயர் (ஆங்கிலத்தில் 105 எழுத்துகளுடன்) கின்னஸ் உலக சாதனைகளில் மிக நீண்ட இடமாக பெயரிடப்பட்டுள்ளது.

திரைகடலோடித் திரவியம் தேடிய தமிழர்களின் வேர்கள் உலக நாடுகள் அனைத்திலுமே பரவியிருக்கிறது என்பதற்கான சான்றாகவே இதனைப் பார்க்கலாம். 

நன்றி: FX16TV.COM
Read More

May 08, 2017

கொரிய மக்களின் தெய்வம் ஒரு தமிழிச்சி- மறைக்கப்பட்ட தமிழர்கள் வரலாறு
by admin - 0

தமிழர் வரலாறு எப்படி மறைக்கப்பட்டது, திரிக்கப்பட்டது ...ஒரு உதாரணம்.
 
கொரியநாட்டின் மன்னன் சுரோவை மணந்தவர் நெடுந்தொலைவில் உள்ள ஒரு நாட்டின் இளவரசி. அவர் படகுகள் மூலமாக கொரியாவுக்குச் சென்று மன்னனை மணந்தார். அந்த இளவரசியின் படகு புறப்பட்ட இடம் ஆயுத்த, இதுதான் கிடைத்த தகவல்கள். 

இங்கேதான் டிவிஸ்ட் வைத்தார்கள் நாக்பூர் உருவாக்கிய வரலாற்றாய்வாளர்கள். 

அந்த இளவரசி அயோத்தியாவின் இளவரசி. அவர்தான் கொரிய மன்னனை மணந்தவர் என்று புத்தகம் எழுதியதுடன், கொரியர்களையும் நம்பவைத்து அயோத்தியாவில் நினைவு மண்டபம் வரை எழுப்பிவிட்டார்கள்.

பேராசிரியர் கண்ணன் இதுபற்றிய ஆய்வுகளைத் தொடங்க, கடல்சார் பண்பாட்டாய்வாளர் அய்யா ஒரிஸ்ஸா பாலு அவர்கள்  இதை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்று ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து ஒரு பெருமுயற்சி எடுத்து இதுபற்றி ஆய்வு மேற்கொண்டபோது அயோத்தியாவில் கடலே இல்லை என்பதில் தொடங்கி  அந்த இளவரசி மற்றும் அவரது வழிவந்தவர்கள் ஆகியவர்களைப் பற்றியெல்லாம் ஆய்வு மேற்கொண்டபோது, அந்த இளவரசியின் பெயர் செம்பவளம், அவர் புறப்பட்ட இடம் ஆயுத்த என்று அப்போது அழைக்கப்பட்ட தற்போதைய கன்னியாகுமரிப் பகுதி என்பதையும் நிரூபித்தனர்.

இதற்கேற்றார்போலவே, இரு நாட்டு கலாச்சார, பண்பாடு, மொழிக்கலப்பும் உள்ளதையும் பல தரவுகள் மூலமாக நிரூபித்தனர்.

இதை கொரியர்களும் ஏற்றுக்கொண்டதுடன், கொரிய துணைத் தூதரகம் இதுபற்றிய தெளிவான வரையறையைக் கொண்டுள்ளதுடன், கொரியாவில் பலலட்சம் பேர் வணங்கும் வகையிலான கடவுளுக்கு ஒப்பானவர் செம்பவளம் ஒரு தமிழச்சி என்பதை ஏற்றுக்கொண்டார்கள்.

செம்பவளம், படகு மூலமாகச் செல்லும்போது படகை (Balance) சமநிலை செய்வதற்காகக் கொண்டு சென்ற பவளப்பாறைகளை இன்னமும் வைத்து வணங்கிக்கொண்டிருக்கிறார்கள் கொரியர்கள். 

தமிழின் வேர்கள் மிக ஆழமானவை, அறிவார்ந்தவை....தொடர்ந்து தேடுவோம்.

- விஷ்வா விஸ்வநாத்
Read More

March 21, 2017

தமிழா நீ தமிழா? ஈழத்திலிருந்து தமிழர்களுக்கான ஒரு பாடல்.
by admin - 0

தமிழா நீ தமிழா? ஈழத்திலிருந்து தமிழர்களுக்கான ஒரு பாடல்.

sivakurunathan
தடைகள் பல தாண்டி
படைகள் பல வென்ற
தமிழன் போலவா
இருக்கின்றோம்

சொல்லிசை - கலாமோகன் பகிர்தன்
உரையிசை- த.மதீசன்
வரிகள்-  கலாமோகன் பகிர்தன், தி.தர்மலிங்கம்
ஒலிச்சமப்படுத்தல்-  ரஞ்சன்  கிருஷ்ணா
ஓவியங்கள் - திரோஸ்கி மருது
ஒளித்தொகுப்பு - சசிகரன் யோ
இசை- த.மதீசன்
தயாரிப்பு- பூவன் மீடியா


Read More

January 18, 2017

ஜல்லிக்கட்டு அல்லது ஏறுதழுவுதல். தமிழரின் எழுச்சி.!!
by admin - 0


ஏறுதழுவுதல் தமிழரின் பாரம்பரியத்தின் வெளிப்பாடு. அது ஒரு வீர விளையாட்டு மட்டுமல்ல, எமது ஆரோக்கிய வாழ்வாதாரத்தின் சுழற்சியும் அதில் புதைந்துள்ளது. 
அதை மீட்டெடுப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையும் கூட.! 
இதைத் தமிழன் மீட்பதற்கும், பலம் கொண்டு எழுவதற்கும், தமிழராய் இணைவது மட்டுமே, ஒரே வழி.! 50 வருடங்களாக திராவிடர்களாகவே வாழ்ந்து, தமிழர் எந்த ஆதாயத்தையும் பெறவில்லை.! 



திராவிடமும், அதைச் சுற்றி வட்டமிடும் பணமுதலைகளும், பெருத்து கொளுத்தனவே அன்றி, தமிழர் இற்றைவரை ஒருபிடி சோற்றுக்கு போராடவேண்டியே உள்ளது.!
அந்த நிலை மாறவேண்டும்.! திராவிடனாய் உருமாறியுள்ள தமிழனும், தன்னிலை உணர்ந்து தமிழனாகவேண்டும்.!
இதுவரை திராவிட அரசுகள் தமிழனை, சாதிகளாகவும், சமயங்களாகவும் திட்டமிட்டு பிரித்தாண்டனர்/ஆளுகின்றனர்.! 
இன்று தமிழன் சிதைந்தழிந்து போகும் நிலையிலேயே இருக்கின்றான்.! 
இதிலிருந்து மீள்வதற்கு, இப்போது… தமிழருக்கு இருக்கும் ஒரே தெரிவு, எல்லோரும் “தமிழர் தேசியம்” என்ற ஒற்றைக்குடையின் கீழ் அணிதிரள்வதே ஒரே வழி.! 
இனியும் தமிழர்கள் திராவிடத்தின் பசப்பு வார்த்தைகளை நம்பி, பின் செல்வார்களானார், தமிழரின் இருப்பு அகற்றப்பட்டு, கலப்பு மரபாக்க தமிழ்நாடு உருமாற்றம் பெறும்.! 
இன்றைய மாணவர்களின் எழுச்சி, தமிழர் என்பதன் அடையாளத்துடன் பொங்கி எழுந்துள்ளது. இதை அணைப்பதற்கு (முத்துக்குமாரின் மரணத்தின் போது, மாணவர்களின் எழுச்சியை, திமுக அகற்றியது போல்) திராவிடக் கட்சிகள் முனையும். 
அது முடியாவிட்டால் உங்களுடன் சேர்வது போல் சேர்ந்து, தங்கள் ஊடக வலிமையால் தங்களை முன்னிறுத்தி தமிழனின் உணர்வுகளை, ஓட்டாக மாற்ற முயற்சிப்பார்கள்.! 
முன்னர் போல், அவர்களின் சதிகளுக்கு மாணவர்கள் ஆளாகக்கூடாது.! 
சாதி, மதம் மற்றும் பால் வேறுபாடு கடந்து, எப்படி தமிழராக ஒன்றினைந்தீர்களோ, அங்கேயே உங்கள் வெற்றி ஆரம்பித்து விட்டது.! 
திராவிடக் கட்சிகளின் சூழ்ச்சிவலைகளை அறுத்து, உங்கள் உரிமையை நிலை நாட்டுங்கள்.! 
நாங்களும், என்றும் உங்களோடு பயணிப்போம்.! 
“எங்கள் வரலாறுகள், உங்களை வழிநடத்தும்”.! 
இன்று நீங்கள்,எங்களுக்கு விதைத்த நம்பிக்கையை, அழிந்துபோக விடாதீர்கள்.!
உங்களில் ஒருவன்

-ஈழத்து துரோணர்
Read More

January 07, 2017

ஒன்று, இரண்டல்ல, மொத்தம் 60 பெயர்கள் உள்ளன. இவை எல்லாமே தூய தமிழ்ப் பெயர்கள்.
by admin - 0

 

யானைக்கு மொத்தம் எத்தனை பெயர்கள் இருக்கின்றன தெரியுமா? ஒன்று, இரண்டல்ல, மொத்தம் 60 பெயர்கள் உள்ளன. இவை எல்லாமே தூய தமிழ்ப் பெயர்கள். 

# யானை (கரியது)

# வேழம் (வெள்ளை யானை) 

# களிறு 

# களபம் 

# மாதங்கம் 

# கைம்மா (துதிக்கையுடைய விலங்கு) 

# உம்பர் 

# உம்பல் (உயர்ந்தது) 

# அஞ்சனாவதி 

# அரசுவா 

# அல்லியன் 

# அறுபடை 

# ஆம்பல் 

# ஆனை 

# இபம் 

# இரதி 

# குஞ்சரம் 

# இருள் 

# தும்பு 

# வல்விலங்கு 

# தூங்கல் 

# தோல் 

# கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது) 

# எறும்பி 

# பெருமா (பெரிய விலங்கு) 

# வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது) 

# பூட்கை (துளையுள்ள கையை உடையது) 

# ஒருத்தல் 

# ஓங்கல் (மலைபோ ன்றது) 

# நாக 

# பொங்கடி (பெரிய பாதத்தை உடையது) 

# கும்பி 

# தும்பி 

# நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது) 

# குஞ்சரம் (திரண்டது) 

# கரேணு 

# உவா (திரண்டது) 

# கரி (கரியது) 

# கள்வன் (கரியது) 

# கயம் 

# சிந்துரம் 

# வயமா 

# புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது) 

# தந்தி 

# மதாவளம் 

# தந்தாவளம் 

# கைம்மலை (கையை உடைய மலை போன்றது) 

# வழுவை (உருண்டு திரண்டது) 

# மந்தமா 

# மருண்மா 

# மதகயம் 

# போதகம் 

# விரமலி 

# மதோற்கடம் (மதகயத்தின் பெயர்) 

# கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்) ஆகியவை ஆண் யானைகளின் பெயர்கள். 

# பிடி 

# அதவை 

# வடவை 

# கரிணி 

# அத்தினி ஆகியவை பெண் யனைகளின் பெயர்கள். இரண்டும் சேர்ந்து மொத்தம் 60 பெயர்கள். 


Read More

December 10, 2016

அப்பல்லோவில் டிசம்பர் 5, 11.30 P.M எல்லாமே செட்டப்! அம்பலமாகும் மரண மர்மம்…
by admin - 0

 

அ.தி.மு.க. தொண்டர்களின் அடக்கமுடி யாத கோபத்திலிருந்து தப்பிக்க… சசிகலா தரப்பும் அப்பல்லோவும் பல்வேறு வேலைகளில் இறங்கி யிருக்கின்றன. “முதல் அமைச்சரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துகொண்டிருக்கிறது,… திட உணவுகளை சாப்பிட ஆரம்பித்துவிட்டார்,… உட்கார ஆரம்பித்துவிட்டார்,…எழுந்து நடப்பதற் கான பயிற்சிகளை கொடுத்துக் கொண்டிருக் கிறோம்’…என்றது அப்பல்லோ அறிக்கை. அதைத் தொடர்ந்து சசிகலா தரப்பின் அறிவுறுத்தல்படி அப்பல்லோவும் அ.தி.மு.க நிர்வாகிகளும் பலவிதமாகக் கதையளந்தனர்.


எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் அப்பல்லோ வாசலில் தொடங்கி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பிரார்த்தனை செய்தனர். அவர்கள் நம்பிக்கைக் கேற்றபடியே ஒவ்வொரு நாளும் தகவல்கள் வெளியிடப்பட்டன.

* பூரண நலம்பெற வாழ்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார் ஜெயலலிதா.
*”ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார்’ -சி.ஆர். சரஸ்வதி.

* காவிரி விவகாரம், சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் நடைபெற உள்ள கூட் டத்தில் முதல்வர் ஆற்றவேண்டிய உரையை தலைமைச் செயலாளர் வாசிக்க உள்ளார். இந்த உரையை ஜெ. சொல்ல சொல்ல அதிகாரிகள் தயாரித்தனர்.

* ஜெ. 2 முறை தண்ணீர் வாங்கிக் குடித் தார். வேக வைத்த ஆப்பிள் பழங்களை சாப்பிட்டார்.

* பிசியோதெரபி சிகிச்சையால் ஜெ. நன்றாக பேசுகிறார். சில நாட்களில் வீடு திரும்புவார்.

* எழுவதற்கு பயிற்சி எடுக்கிறார். சாதாரண வார்டுக்கு மாற்றத் திட்டம்.

* எலெக்ட்ரானிக் கருவிகள் மூலம் அரசு அதிகாரிகளுடன் தகவல்களை பரிமாறிக்கொள்கிறார்- அ.தி.மு.க. சீனியர் தலைவர் பொன்னையன்.

* “வழக்கமான உணவை சாப்பிடுகிறார். எப் போது டிஸ்சார்ஜ் ஆகவேண்டும் என்று ஜெய லலிதாவே முடிவு செய்வார்’- அப்பல்லோ ரெட்டி.

* ஓய்வு என்பது நான் அறியாதது. உழைப்பு என்னை விட்டு நீங்காதது. நான் மறுபிறவி எடுத்துள்ளேன்- ஜெ. கையெழுத்திட்ட அறிக்கை.

* அறையில் இருந்தபடி டி.வி. பார்த்து நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்கிறார்.

* மூன்று தொகுதி இடைத்தேர்தல் வெற்றி யால் ஜெயலலிதா உற்சாகம். ஓட்டு எண்ணிக்கை நிலவரத்தை டி.வி.யில் பார்த்தார்.

* “”90 சதவீதம் இயல்பாக சுவாசிக்கிறார். மிகுந்த வலிமை, மனவலிமை படைத்தவர் அவர். எப்போது வீட்டுக்குப் போகவேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார்”. -அப்பல்லோ ரெட்டி

இவையெல்லாம் தொண்டர்களின் நம்பிக்கை யை அதிகரிக்கச் செய்தது. கடந்த செப்டம்பர் 22-ந் தேதி அப்பல்லோவில் ஜெ. அட்மிட் ஆனபோது எந்தத் தொண்டரும் நேரில் பார்க்கவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 74 நாட்களில் ஒருமுறைகூட ஜெ.வின் முகத்தை பார்க்கமுடிய வில்லை. அவரின் குரலையாவது கேட்கமுடியாதா என்கிற ஏக்கம் தொண்டர்கள் மத்தியில் பரவியது.

அப்பல்லோ மற்றும் அ.தி.மு.க. முக்கிய நிர் வாகிகளின் அறிக்கைகள், பத்திரிகை ஊடகங்களின் செய்திகளைப்பார்த்து, “விரைவில் அம்மா குணமாகி இரட்டை விரலை அசைத்து புன்னகையோடு போயஸ்தோட்டம் செல்வார்’ என்று நம்பிக்கை யோடு காத்திருந்த தொண்டர்களுக்கு முகம் தெரியாதபடி அமரர் ஊர்தியில்…

Read More

December 05, 2016

ஜெயலலிதாவுக்கு தொடரும் தீவிர சிகிச்சைகள்.. நம்பிக்கை தரும் அப்பல்லோ அறிக்கை
by admin - 0

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தகவல் கிடைத்ததுமே தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் அப்பல்லோவுக்கு படையெடுத்தனர்


lதொடர் சிகிச்சையின் பலனாக அவர் உடல் தேறி வந்தது. விரைவில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை திடீரென அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வாயிலாக தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார் ஜெயலலிதா. அங்கு அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதனால், அதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்கள் சோகத்தில் மூழ்கி இருந்தனர்.

Read More

July 26, 2016

30 ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் வாழ்ந்த இடம் கண்டுபிடிப்பு..!!
by admin - 0

சென்னையிலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருப்பதாக தமிழக அரசின் தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது.
திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் கொற்றலை ஆற்றுப் படுகையிலிருந்து சிறிது தூரத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இரும்புக் காலத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள்
கடந்த ஆண்டில் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரும்புக் காலத்தைச் சேர்ந்த மட்பாண்ட வகைகளும் கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் கிடைத்ததையடுத்து, இந்த இடம் ஆகழ்வாராய்ச்சி செய்வதற்கான இடமாகத் தேர்வுசெய்யப்பட்டு, இந்த ஆண்டில் அகழ்வாராய்ச்சி நடந்துள்ளது.
பட்டறைப் பெரும்புதூரில் உள்ள ஆனைமேடு, நத்தமேடு, இருளந்தோப்பு ஆகிய இடங்களில் மொத்தம் 12 ஆய்வுக் குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வில் 200க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
”மனிதர்கள் வாழ்ந்து வந்ததற்கான சான்று”
கற்காலம் (கி.மு. 30,000 – கி.மு. 10,000) முதல் மனிதர்கள் வாழ்ந்ததற்கான மண் அடுக்கச் சான்றுகளும் இரும்புக் காலம், வரலாற்றுத் தொடக்க காலம் ஆகியவற்றின் எச்சங்களும் இங்கே கிடைத்திருப்பதால், கற்காலத்தில் துவங்கி தற்போதுவரை இந்தப் பகுதியில் தொடர்ச்சியாக மனிதர்கள் வாழ்ந்து வந்தததாகக் கொள்ள முடியும் என தமிழக தொல்லியல் துறையின் துணை இயக்குனர் ஆர். சிவானந்தம் பிபிசி தமிழோசையிடம் கூறினார்
.
இந்த அகழாய்வில் குறிப்பிடத்தக்க பொருட்களாக, பழங்கற்காலத்தைச் சேர்ந்த இரு பக்க முனையுடைய கத்தி, புதிய கற்காலத்தைச் சேர்ந்த கோடாரிகள், சாம்பல் நிற மண்பாண்ட ஓடு, ரோமானிய மட்பாண்ட வகையான ரௌலட் மட்பாண்ட ஓடு, 23 உறைகளைக் கொண்ட உறை கிணறு ஆகியவற்றை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் சில செப்புப் பொருட்கள், கல் மணிகள், யானைத் தந்தத்தால் ஆண ஆபரணம், தமிழ் பிரம்மி எழுத்துக் கொண்ட பானை ஓடுகள், கூம்பு வடிவ ஜாடிகள் ஆகியவையும் இங்கே கிடைத்திருக்கின்றன.
இரு பக்க முனையுடைய கத்தி தமிழகத்தில் அரிதாகவே கிடைத்திருப்பதாகவும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த பொருட்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் அரிதாகவே கிடைத்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதுவரை தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில்தான் ரோமானிய மட்பாண்ட வகைகள் கிடைத்திருப்பதாகவும் முதன் முதலாக இப்போதுதான் உள்பகுதியில் இம்மாதிரி மட்பாண்டம் கிடைத்திருப்பதாகவும் சிவானந்தம் சுட்டிக்காட்டுகிறார்.
”ரோமானியர்கள் வர்த்தகம் மேற்கொண்ட இடமாக இருக்கலாம்”
சங்ககாலத்தில் இந்த இடம் ரோமானியர்களுடன் வர்த்தகம் மேற்கொண்டிருக்கக்கூடிய ஒரு வர்த்தக மையமாக இருந்திருக்கக்கூடும் என்பதையே இது சுட்டிக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த காலகட்டத்தில் காஞ்சிபுரத்திலிருந்து வடநாட்டிற்குச் செல்லும் பெருவழி இந்த ஊரின் வழியாக சென்றிருக்கலாம் என்றும் அப்போது வர்த்தகர்கள் இங்கே தங்கிச் சென்றிருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது.
தற்போது அகழ்வாராய்ச்சி நடந்திருக்கும் பட்டறைப் பெரும்புதூர் பழங்காலத்திலிருந்து பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டுவந்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பல்லவர் காலத்தில் பெருமூர் என்றும் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் சிம்மலாந்தக சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்பட்டிருப்பதாக கல்வெட்டுக்களை மேற்கோள்காட்டி தொல்லியல் துறை கூறுகிறது.
Read More

July 06, 2016

தமிழ் பிறந்தநாள் பாடல் "Tamil Birthday Song"
by admin - 0

"Happy Birthday" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன்படுத்துவோம்.

நீண்ட நீண்ட காலம்
நீ நீடு வாழ வேண்டும்

நீண்ட நீண்ட காலம்
நீ நீடு வாழ வேண்டும்

வானம் தீண்டும் தூரம்
வளர்ந்து வாழ வேண்டும்

அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
பண்பு வேண்டும் பணிவு வேண்டும்

எட்டுத்துக்கும் புகழ வேண்டும்
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்

உலகம் பார்க்க உனது பெயரை
நிலவுத் தாளில் எழத வேண்டும்

சர்க்கரை தமிழள்ளி தாலாட்டு நாள்சொல்லி வாழ்த்துக்கிறோம் ...

பிறந்தநாள் வாழ்த்துகள் ... பிறந்தநாள் வாழ்த்துகள் ...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Read More

June 18, 2016

தமிழர் தமிழராகவே இருங்கள்.! -ஈழத்து துரோணர்
by admin - 0

தமிழர் தமிழராகவே இருங்கள்.!
ஈழத்து துரோணர்.!!

இந்த பூமி பந்தில் தோன்றிய மொழி எது என்று இந்த வெள்ளைக்கார பொண்ணு சொல்லுது.! 

இதே விடையையத்தை பல வெள்ளைக்காரத் துறைமாரும் இப்போதெல்லாம் சொல்லிவருகினம். 
ஆனால் எல்லோரும் சொல்லி  வைத்தால் போல தமிழ் தோன்றி 5000வருடங்களுக்கு மேல் தான் ஆகின்றது என்றே பதிவு செய்கின்றார்கள். 

அத்தோடு திராவிட குடும்பம் என்றே தமிழரை வகைப்படுத்துகின்றனர். இதன் மூலம் இந்திய நடுவனரசின் கடைக்கண் பார்வைக்கு அர்த்தம் கொடுக்கின்றனர் வரலாற்றாளர்கள்.இந்த சூட்சுமத்தை தமிழர் நன்கு  உணரவேண்டும்.!

இன்று வரை தமிழ் தோன்றி 20000 வருடங்கள் இருக்கலாம் என்பதை நிருபிப்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லாத போதும், தமிழ் தோன்றி 10000 வருடங்களுக்கு மேல் ஆகின்றது என்பதற்கு நேரடி ஆதாரங்கள் கிடைத்தபோதும், அதை வெளிவராது இந்திய நடுவனரசு தந்திரமாக மறைத்து வருகின்றது. 

அடுத்தது மிக முக்கியமானது.! 

ஒரு மொழியை வைத்தே ஒரு இனத்தை வகைப்படுத்துகின்றோம் அல்லது அடையாளப்படுத்துகின்றோம். உதாரணத்துக்கு ஆங்கிலம் பேசுபவர் ஆங்கிலேயர் பிரஞ்சு பேசபவர் பிரஞ்சுக்காரர் என்கிறோம். அதுபோல மூத்தகுடியான தமிழ் மொழி பேசுபவரை தமிழர் என்றே அடையாளப்படுத்த வேண்டும்.! 

ஆனால் திட்டமிட்டு வரலாற்றை மாற்றி, திராவிடர் என்றே தமிழர் வரலாறுகள் திரிக்கப்படுகின்றன/ திரிக்கப்பட்டுவிட்டன.! 

பூமியில் தோன்றிய முதல் மொழி தமிழ் என்றால் இந்த பூமியில் தோன்றிய முதல் மனித இனமும் தமிழன் என்பதே உண்மை. அப்படி இருக்கும் போது ஏன் எமக்கென்று ஒரு தேசம் இல்லாது போனது? 

கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், போர்கலை, என எல்லா துறைகளுக்கும் அடி ஆதாரத்தை உருவாக்கியவன் தமிழனே.! 

ஆனால் இன்றைய தேதியில் எம் சொந்தங்கள் உயிரை பணயம் வைத்து கடல்வழியே ஏதிலிகளாக பயணப்பட்டபோது, இந்தோ அரசு துப்பாக்கி சூடு நடத்தி விரட்டுகின்றது. எம்மை  ஒரு சக மனிதனாகவே பார்க்க கூட இவர்கள் மறுக்கின்றார்கள்.! 

இதை ஒரு சாதாரண விடையமாக என்னால் கடந்து போக முடியவில்லை.! 

அந்த தாய்களின் கதறல்களும், எம் மழலைகளின் கண்ணீருக்கும், சர்வதேசத்தின் மெளனமே பதிலாகின்றது.! 

இதற்கெல்லாம் யார் காரணம்? 

நாம் எங்கே தவறு செய்தோம்? 

ஏன் எமக்கென்று ஒரு தேசம் இல்லாது போனது.? 

இதற்க்கான விடையை நாம் தேடவேண்டும்.!

அடுத்தது என்ன செய்யவேண்டும் என்ற பார்வையை எமக்குள் நாம் உருவாக்க வேண்டும்.! 

 "இஸ்ரேலியர்" தமது தேசத்தை அடைவதற்கு முன்னர் எப்படி இருந்தார்களோ? அந்த நிலையில் தான் இன்று தமிழர் நாம் இருக்கின்றோம்.! 

அவர்கள் தமது நாட்டுக்காக இரண்டாயிரம் வருடங்களாக தொடர்ந்து போராடி வெற்றி கண்டார்கள். அதற்கு அவர்கள் செய்தது தமது பிள்ளைகளுக்கு சந்ததி, சந்ததியாக தமக்கான தேசம் பற்றியும், அதன் தேவை பற்றியும், அவர்களின் மனதில் பதிய வைத்தார்கள். 

தங்கள் தேசத்தை அடைவதற்கு முன், உலகமெல்லாம் பரந்து வாழ்ந்தபோது, இஸ்ரேலியர் தமது சமூகத்தினரை சந்தித்து விடைபெறும் போது, வாழ்த்துக்கு பதிலாக "அடுத்த முறை இஸ்ரேலில் சந்திப்போம் என்பார்கள்" இப்படி ஒரு வருடமல்ல 2000வருடங்கள் நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். 

அவர்களிடமிருந்து இன்னொரு பாடமும் எமக்கிருக்கின்றது.! 


அதாவது அவர்கள் ஏதிலிகளாக புலம் பெயர்ந்த பின் காலம் செல்ல, செல்ல தமது தாய்மொழியை மற்ற மொழிகளுடன் கலந்து பேசிவந்தனர். 

அந்த நேரத்தில் தமக்கான தேசத்தை உருவாக்க, முனைப்பு காட்டி  போராடிக்கொண்டிருந்த "கரி பென் கானான்" என்பவர் எல்லா நாடுகளுக்கும் பயணப்பட்டு தங்கள் தாய்மொழி வகுப்புகளை இளம் தலைமுறைக்காக  உருவாக்கினார். 

அத்தோடு தாய் நாட்டு பெருமைகளை கூறி அந்த உணர்வுடன் அவர்களை வளர்த்தெடுத்தார். இதன் மூலமே அவர் அந்த நாட்டை உருவாக்க அடித்தளமிட்டு அதை செய்தும் காட்டினார்.

இதை தான் நாமும் செய்ய வேண்டும். தமிழனிடம் தமிழில் உரையாடுங்கள். ஆங்கிலத்தை பெருமையாக நினைக்காமல், தமிழுடன் பிறமொழியை கலக்காது உரையாடுங்கள். 

உங்கள் பிள்ளைகளுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் எமது தேசம் பற்றியும், மொழி பற்றியும், அதன் பெருமைமிகு வரலாறு பற்றியும், சந்ததி, சந்ததியாக அவர்களுக்கு சொல்லி கடத்துங்கள். 

அல்லது போனால் இன்னும் 50 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர் சிங்களவராக மாறி இருப்பர்.! 

100ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழர் ஆங்கிலேயராக மாறியிருப்பர்.! 

இது போல ஒரு காணொளி 100ஆண்டுகளின் பின் வெளிவரும், இப்படி ஒரு மொழி பூமியில் இருந்ததாக.! 

தமிழர்களே உங்களை நீங்கள் தமிழர்களாகவே அடையாளப்படுத்துங்கள். திராவிடர் என்னும் முகமூடி வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருங்கள். 

தேவையில்லாத விவாதங்களை தவிருங்கள். சாதி, மதம் வர்க்க வேறுபாடுகளை களைந்து தமிழராய் இணையுங்கள். 
வரட்டு கெளரவங்களை கைவிட்டு தமிழராய் இணைந்து போராடுங்கள். 

வெறும் 40லட்சம் கொண்ட ஈழத்தமிழராகிய நாம் 40000 மாவீரரையும் 4லட்சம் மக்களையும் பலிகொடுத்து போராடினோம். 
அதை விட பலமடங்கு விழுப்புண் அடைந்தனர். சிறுக சிறுக சேர்த்த பல்லாயிரம் கோடி சொத்துகளையும் இழந்து தமிழருக்கான அடையாளத்தை சர்வதேசத்தில் உருவாக்கியுள்ளான் ஈழத்தமிழன். 

நாம் சாதி, மத வேறுபாடு கழைந்து  "தமிழராக" போராடி எங்கள் பங்கை தமிழுக்கு செய்துள்ளோம்.! 

தாய் தமிழ் உறவுகளே  தயவு செய்து, வர்க்கவேறுபாடு களைந்து, முதலில் நீங்கள் தமிழராய் இணையுங்கள்.! அதுவே உங்கள் பாதைக்கான முதல் படி! 

ஏனெனில் நீங்கள்" உங்களை தமிழனாக உணராதவரை", உங்கள் பெருமையை நீங்கள் உணரப்போவதில்லை.!  
மனச்சுமையுடன் துரோணர்.!!
Read More

January 21, 2016

காந்தாரி அம்மன் யார்?-தமிழருக்கான புதிய உண்மை
by admin - 0

காந்தாரி அம்மன் யார்?-தமிழருக்கான புதிய உண்மை

காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமிழ் நாட்டிலே தாமிரபரணி ஆற்றங்கரையிலே நடந்த போராகும். அந்தப் போர் உண்மையிலேயே மலைவாழ் குரவர்களுக்கும், அப்போது புதிதாகத் தோன்றிய உழவுக்குடிகளான பாண்டியர்களுக்கும் நடந்த போராகும். காடுகளைக் களைந்து ஆற்றோரம் உழவு செய்யத் தொடங்கியவுடனே, பாண்டியர்கள் பொருளாதாரத்திலும், தொழில் நுட்பங்களிலும் உயரத் தொடங்கிவிட்டனர்.

இதைக்கண்ட ஆதிக்குடிகளான மலைவாழ் குரவர்களுக்கு பொறாமை உண்டாகி, அவர்கள் பாண்டியரிடம் வம்பிழுக்கின்றனர். தமிழக நில அமைப்பில், மருத நிலத்திற்கும், குறிஞ்சிக்கும் இடையே முல்லை இருப்பதை இன்றும் காணலாம். அந்த முல்லையை ஆண்ட கிருட்டிணன், இருவருக்கும் சமரசம் செய்ய முயன்று தோற்கிறார். அவர் இரண்டு நிலங்களுக்குமிடையில் வாழ்வதால் இருவருக்குமே நட்பாயிருக்கிறார். அதனால், போரில் நடுநிலை வகுக்கிறார். இருந்தாலும் பாண்டவருக்கு நல்ல திட்டங்களை வகுத்துக் கொடுத்து சிறிய படையான பாண்டியர் படையை, பெரிய படையான குரவர் (கௌரவர்) படையை வெற்றி கொள்ள வைக்கிறார். அவர் போரை வெல்ல நல்ல கருத்துக்களை (Idea) சொன்னதால் தான் அவருக்கு கருத்தினன் என்ற பட்டப் பெயர் கிடைக்கிறது. அதுவே, கிருத்தினன் ஆகி, கிருட்டினன் ஆகி, யூத பிராமணர்களால் கிருஷ்ணனும் ஆனது.

கருத்தினன் –> கிருத்தினன் –> கிருட்டினன் –> கிருஷ்ணன்.

குரவர் என்ற சொல் தான் கௌரவர் ஆனது. மகா பாரதத்திலே வரும் பெயர்கள் எல்லாமே பட்டப் பெயர்களே! துரியோதனன் என்பது “துர்+ஓதனன்” என்றிருந்து மருவியது. துர் என்றால் கெட்டது என்பதால் இங்கே அநியாயம் என்று பொருள் கொள்கிறது. ஓதனன் என்பது பேசுபவன் என்று பொருள். அதாவது துரியோதனன் அநியாயம் பேசுபவன் என்று பொருள். இவர்கள் நூறு பேர் என்பது நூறு குரவர் குடி மன்னர்களைக் குறிக்கும்.

இந்த நூறு குரவர் குடிகளையும் திரட்டி பாண்டியர்களுக்கு எதிராக போரிட வைத்தவன் தான் திருதிராட்ஷன். இங்கு திரு என்பது அடைமொழி. திராட்ஷன் என்பதன் மூலம் திராட்டன் என்பதே. வேஷ்டியின் மூலம் வேட்டி என்பது போல. திராட்டன் என்பது திரட்டன் என்பதின் நீட்டமே! திரட்டன் என்பது திரட்டியவன் என்பதே!

இப்படித் திரட்டியவர்களைப் போர் முடியும் வரை “காந்தம்” போலக் கவர்ந்து பிரியாமல் காத்தவள் காந்தாரி. அவள் இயல்பாகவே தலைவன் திருதிராட்டினனின் மனைவி. அவளது பட்டப் பெயர் காந்தம் என்ற சொல்லிலிருந்தே உருவானது. இதில் இன்னுமொரு விஞ்ஞாணச் செய்தி என்னவென்றால், மகாபாரதக் காலமாகிய, அதாவது 5000 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்களுக்கு காந்தம் அதாவது Magnet தெரிந்திருக்கிறது. அதாவது இரும்பும் தெரிந்திருக்கிறது. மலைவாழ் காலத்திலேயே தமிழன் இரும்பு பிரித்தறிந்துள்ளான். இரும்புக்கு கரும்பொன் என்ற பெயர் உள்ளதால், அதற்குமுன்பே பொன்னையும் அறிந்தவன்.

காந்தாரியின் உடன் பிறந்தவன் தான் சகுனி. அவனது திட்டப்படியும், சதிப்படியும் பாண்டியர் சதுரங்க ஆட்டத்தில் தோற்று, பாஞ்சாலியின் துகில் உரிக்கும் நேரத்தில் தலை குனிந்ததால், அவன் அனைவரையும் தலை குனிய வைத்ததால் அவனுக்கு சம்+குனி –> சங்குனி –> சகுனி என்ற பட்டப் பெயர் வந்தது. சம் என்றால் “அனைத்தையும்” அல்லது “ஒட்டுக்க” அல்லது “கூட்டாக” என்று பொருள். ஆங்கிலச் சொல் சம் = Sum என்பது தமிழ்ச்சொல்லே!

பாஞ்சாலி என்பது நிலத்தைக் குறிக்கும். மருத நிலத்தைக் குறிக்கும். ஐந்து ஆளுக்கும் சொந்தமானவள் என்பதால் பாஞ்சாலி என்ற பட்டப் பெயர் வந்தது. அவள் பெண்ணல்ல. ஆனால், கதைக்காக பெண்ணாக உருவகம் செய்யப்பட்டாள். அவள் நிலம் என்பதால் தரைபதி அதாவது தரைதெய்வம் என்றழைக்கப்பட்டு தரைபதியே (த்ரபதி –> த்ரௌபதி –> திரௌபதி) திரௌபதி ஆனாள். அதாவது குரவர், கௌரவர் ஆனது போல. திரௌபதிக்குக் கோயில்கள் தமிழ் மண்ணில் மட்டுமே உண்டு. அவள் ஆசீவகத்தின் பச்சையம்மாளே! அவளே மீனாட்சியும் ஆகும். அவள் பாண்டியரின் கடவுளானது எப்படி என்று இப்போது புரிகிறதா?

குரவர் சமூகம் இன்றும் துரியோதனனுக்கு கோயில் கட்டிக் கும்பிட்டுக் கொண்டுள்ளது. சகுனிக்கும் கோயில் உள்ளது. இது இன்றும் குரவர்களாலேயே நிர்வகிக்கப் படுகிறது. அந்தக் கோயில்கள் இப்போதும் கேரள மாநிலத்தை சேர்ந்த கொல்லத்தில் உள்ளது.

அதேபோல, காந்தாரியையும் வழிபடும் வழக்கம் தமிழகத்தில் இன்றும் உள்ளது. யீசன் அதாவது சிவன், மலைக்குரவர் என்பதால், மலைக்குரவர்களின் ஆதித் தலைவியாகிய காந்தாரியம்மனும் காளியாகவே வழிபடப்படவேண்டும். காந்தாரியம்மன் ஆசீவகத்தின் காளியே!

ஆதிச்ச நல்லூர் என்பது மகா பாரதத்தின் அஸ்தினாபுரமே! “ஆதி நற்புரம்” என்ற சொல்லே அஸ்தினாபுரம் ஆனது. “ஆதிச்ச நல்லூரும்”, “ஆதி நற்புரமும்” ஒரே பொருள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

“குரவர் சேர் தரை” தான் குருஷேத்திரம் ஆனது.

சேர் + தரை –> சேர் + த்ர –> சேர்த்ர –> ஷேத்ர –> ஷேத்ரம்.

மக்கள் சேரும் இடம் தான் ஷேத்ரம். குரவர் சேரும் இடம் குரவர்ஷேத்ரம் –> குரஷேத்ரம் –> குருஷேத்ரம் ஆனது. ஆதாவது, பாண்டியரிடம் சண்டையிட மலையிலிருந்து இறங்கி தரையில் குரவர்கள் ஒன்று கூடிய இடம் குருஷேத்ரம்.

ஐந்து யுகங்களைப் பற்றிய தீரக்க தரிசனத்தைக் கூறியவர் கிருட்டினனே! அவர் சொன்ன நல்லக் கருத்துக்களைத் திருடியே, அதனோடு தங்களது வன்மங்களையும் சேர்த்து (அதாவது கொல்வது பாவமல்ல போன்ற அயோக்கியக் கருத்துக்களை), பகவத் கீதையை எழுதிக்கொண்டனர் யூத பிராமணர்கள்.

ஆக, குறிஞ்சி நில மக்கள் காந்தாரி அம்மனை வழிபடுவது வரலாற்று நியதி. குறிஞ்சாங்குளம் என்ற சொல்லிலேயே குறிஞ்சி நிலம் என்ற உண்மை உள்ளது. குறிஞ்சாங்குளம் ஆதிச்ச நல்லூர் அமைந்திருக்கும் தென் பகுதியிலே இருப்பது, வரலாற்றின் சுவடுகளை கன்னித் தமிழ் எப்படிக் காத்துள்ளது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

(எனவே, மண்ணின் மைந்தர்கள் தங்களது ஆதி தெய்வத்தை வழிபடுவதைத் தடுக்க வந்தேறித் தெலுங்கருக்கு எள்ளளவும் உரிமை இல்லை. தெலுங்கரின் கொட்டம் ஒடுக்கப்படவேண்டும்.)
Read More

September 22, 2015

உலகின் மிகவும் பழமையான 10 மொழிகளில் தமிழ் மொழியே முதலிடம்.!
by அகலினியன் - 0


உலகின் மிகவும் பழமையான 10 மொழிகளில் தமிழ் மொழியே முதலிடம்.!

உலகத்தில் மிகவும் பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது. ■ 10 வது இடத்தில் லத்தீன் மொழி (Latin) ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம். ■ 9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian) இந்தோ - ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம். ■ 8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian) கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ■ 7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew) இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள். ■ 6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic) அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது. ■ 5 வது இடத்தில் சீன மொழி (Chinese) சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம். ■ 4 வது இடத்தில் கிரீக் (Greek) கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம். ■ 3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian) ஆஃப்ரோ - ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம். ■ 2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit) இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம். ■ 1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil) 5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமயான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது. ஆங்கில இணையத்தின் ஆதாரம்: www.worldblaze.in
Read More

September 19, 2015

கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் 23 மொழிகளில்!
by Unknown - 0

கவிப்பேரரசு கவிஞர் வைரமுத்துவின் "கள்ளிக்காட்டு இதிகாசம்" நாவல் 23 மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்படவுள்ளது. ஆங்கிலம் உட்பட 23 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் இந்நூல் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படவுள்ளதுடன் மொழிபெயர்ப்பு நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்மிக்க நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம் வைகை அணை கட்டப்பட்ட போது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலி செய்யப்பட்ட 14 கிராமங்களின் பூர்வீகக் கதைதான் கள்ளிக்காட்டு இதிகாசம்.

மண்சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை சிறப்பாக எடுத்தியம்பும் படைப்பு இது. வட்டார வழக்கோடு எழுதப்பட்ட உலகத்தன்மை கொண்ட இந்த நாவல் 2003 ஆம் ஆண்டுக்கான இந்திய சாகித்திய அகாடமி விருது பெற்றது. 

இதுவரை 1 இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளதுடன், லண்டனில் நிகழ்ந்த அதன் அறிமுக விழாவில் இங்கிலாந்து நாட்டு முன்னாள் கல்வியமைச்சர் ஸ்டீபன் டிம்ஸ் மற்றும் லண்டன் மாநகர முன்னாள் மேயர் ராபின் வேல்ஸ் இருவரும் கலந்துகொண்டு கள்ளிக்காட்டு இதிகாசம் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Read More

August 11, 2015

தமிழை தூக்கி பிடித்த சிங்கப்பூர்,!!!
by admin - 0

தமிழை தூக்கி பிடித்த சிங்கப்பூர்,!!!
நேற்று நடந்த சிங்கப்பூரின் 50 வது பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் தான் இந்நிகழ்வை காண முடிந்தது..!!!

லட்சோப லட்சம் மக்களின் முன்னிலையில் 5 வெளிநாட்டு தலைர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் சிங்கப்பூர் முன்னேற்றத்திற்கு தமிழர்கள் செய்த தியாகத்தை போற்றும் வகையில் ‪வெற்றி‬ என தமிழ் வடிவத்தில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடத்தியது மெய்சிலிர்க்க வைத்தது...

இந்தியா கூட தமிழனுக்கு கொடுக்காத மரியாதையை கொடுத்து ‪#‎தமிழை‬ பெருமை படுத்திய சிங்கப்பூருக்கு
நன்றி நன்றி..!!!
Read More

August 10, 2015

உலகின் பழமையான மொழி தமிழ்
by admin - 0

உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் தந்தவற்றை அப்படியே தருவதுடன், அது வரிசைப்படுத்தியதையும் உங்களுக்கு தமிழ் மொழியில்.

உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்
Top 10 Oldest Languages in the World

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது.

10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin)

ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.

9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian)

இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.

8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian)

கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew)

இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.

6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic)

அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.

5 வது இடத்தில் சீன மொழி (Chinese)

சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.

4 வது இடத்தில் கிரீக் (Greek)

கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.

3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian)

ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit)

இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)

5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமயான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.





Read More

July 19, 2015

மின்கலத்தை, மின்சாரத்தை கண்டுபிடித்தது ஒரு தமிழனே...
by admin - 0

மின்கலத்தை கண்டுபிடித்தவர் வோல்ரா என்று நினைத்து கொண்டிருக்கும் தமிழரே சற்று விழியுங்கள்... மின்கலத்தை, மின்சாரத்தை கண்டுபிடித்தது ஒரு தமிழனே..... கிறிஸ்துக்கு வருவதற்கு முன் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தமிழன் மின்கலத்தை கண்டுபிடித்து விட்டான்.... வியப்பாக உள்ளதா??? கீழே பாருங்கள்...

"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்"

புரியலை நா விட்டுடுங்க..., நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.
இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,

"ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்"

மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? என்று யோசிக்கிறீர்களா??? 
மித்ரவருனசக்தி என்றால் மின்சாரம் என்பது தாங்க பொருள்.

வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர். 

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி [Baghdad Battery] என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் "தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்' தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.

இருங்க இருங்க.., நம்ம பாட்டன் இதோட நிருத்திடல.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்.. 

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார். இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால "electroplating" என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

1891 ஆம் ஆண்டு Rao Saheb Krishnaji Vajhe புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, வேறு சில மேதாவிகளுடன் சேர்ந்து இதனை செய்து பார்த்தனர். அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்! 

எப்படி இருக்கிறது தமிழனின் அறிவியல்????
Read More

வாட்ஸ் அப், வைபர், ஸ்கைப் மூலம் இந்தியாவுக்குள் இனி இலவசமாக பேச முடியாது
by admin - 0

டெல்லி: செல்போனில் வாட்ஸ் ஆப், ஸ்கைப் மூலம் இலவசமாக பேசி வந்த மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி... இனி வாட்ஸ் அப், ஸ்கைப், வைபர் உள்ளிட்ட செயலிகளில் வழங்கப்படும் இலவச அழைப்புகள் சேவையை முறைப்படுத்த மத்திய தொலைத் தொடர்புத் துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இனி இந்தியாவுக்குள் வாட்ஸ் ஆப், ஸ்கைப், வைபர் மூலம் இலவசமாக பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்திய தொலைத்தொடர்புத் துறை 'இணைய சமநிலை' தொடர்பான அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் மக்களுக்கு இணைய சேவை சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியாவுக்குள் வாட்ஸ் ஆப், ஸ்கைப், வைபர் மூலர் இலவசமாக பேசி வந்தவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது டிராய் அறிவிப்பு.

வருவாய் இழப்பு செல்போனில் செயலிகளை உருவாக்கும் நிறுவனங்களும், ஸ்கைப் போன்ற வலை தளங்களும் இணையதளம் வாயிலாக இலவச அழைப்புகளை வழங்குவதன் மூலம் தங்களுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படுவதாக ஏர்டெல், வோடாபோன், ஐடியா செல்லுலார் ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசிடம் முறையிட்டிருந்தன


கட்டணம் வசூலிக்கப்படுமா? வாட்ஸ் அப், ஃபேஸ்புக், வைபர், ஸ்கைப் போன்ற சமூக வலைத்தள சேவைகளின் வரவு காரணமாக வருமான இழப்பு ஏற்படுவதாகக் கூறி, இவற்றுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்க, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், டிராய் அமைப்பிடம் வலியுறுத்தியது. 

ஜீரோ திட்டம்

ஏர்டெல் ஜீரோ திட்டத்தில் இணையும் நிறுவனங்களின் இணையதளங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும், மற்ற இணையதளங்கள் கட்டணமாக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டது. இதற்கு நாடுமுழுவதும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்த புரட்சி போராட்டத்துக்கு ஆதரவாக பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

நாடுமுழுவதும் எதிர்ப்பு 
நெட் நியூட்ராலிட்டிக்கு எதிராக, இந்தியாவில் இணைய சமநிலை வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, இதற்காக தனி குழு அமைக்கப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டது. மேலும் இந்த பிரச்சனை, பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டு, இணைய சமநிலை தொடர்பாக மக்களின் கருத்துகள் சேகரிக்கப்பட்டது.

டிராய் ஆய்வறிக்கை வெளியீடு

பல லட்சம் மக்கள் கருத்து தெரிவித்ததை அடுத்து, தொலைத்தொடர்பு துறை, இன்று அதன் இணையத்தளத்தில், இணைய சமநிலை தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 24 பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த பரிந்துரைகள் பெரும்பாலும் மக்களுக்கு சாதகமாக இயற்றப்பட்டுள்ளது. மக்களுக்கு இணைய சேவை சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் கிடைக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. இணைய சமநிலை குறித்த 112 பக்க ஆய்வறிக்கை இன்று இந்திய தொலைத்தொடர்பு துறையின் http://www.dot.gov.in/ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இணைய சமநிலை குறித்து தொலைத்தொடர்பு துறை நியமித்த குழு அளித்த பரிந்துரைகள் இதில் இடம்பெற்றுள்ளன


மக்களின் நலன் முக்கியம்

'நெட் நியூட்ராலிட்டி' விவகாரத்தில் இந்தியாவில் வாடிக்கையாளர்களான மக்களின் நலன்தான் முக்கியம், அதற்கு ஏற்பதான் செல்போன் நிறுவனங்களும், ஓடிடி எனும் ஆப்ஸ் சேவை நிறுவனங்களும் தங்களது சேவையை வழங்க வேண்டும். பல லட்சம் பேரின் கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.


இணைய சமநிலை 

அதேபோல் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப இணைய பயன்பாட்டை செல்போன் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது. ஓடிடி நிறுவனங்களுக்கு செய்திகளை வழங்குவதில், தகவல் பரிமாற்றத்திற்கு எந்த நெறிமுறையும் இல்லாமல் தங்களது பழைய நடைமுறையிலேயே இயங்கலாம் என கூறியுள்ளது. ஆனால் இது தகவல் பறிமாற்றத்துக்கு மட்டுமே என்று கூறியுள்ளது. அதே போன்று 

இலவச அழைப்புகள் வெளிநாடுகளுக்கு இணையவழியில் வழங்கப்படும் இலவச அழைப்புகளுக்கான சேவைகளை ஏற்றுக் கொள்ளலாம் என்றும், அதேவேளையில் உள்ளூர் அழைப்புகளைப் பொருத்தவரை, இணையதளத்தில் இலவச அழைப்புகள் வழங்கும் நிறுவனங்களுக்கும், தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான விதிகளே பின்பற்றப்பட வேண்டும் எனவும் அந்தக் குழு தெரிவித்துள்ளது

இலவச அழைப்புகள் 

வாட்ஸ் அப், வைபர் போன்ற ஆப்ஸ்களில் தகவல் பரிமாற்றத்தை மட்டும் இலவசமாக வழங்கலாம். ஆனால் விஓஐபி எனும் இணையதள கால் சேவைகளை இலவசமாக வழங்க முடியாது. அதனை நெறிமுறைப்படுத்த வேண்டும். அவை தொலைதொடர்பு நிறுவனங்களின் அழைப்பு கட்டணங்கள் போலவே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இனி வாட்ஸ் ஆப், ஸ்கைப், வைபர் மூலம் இலவசமாக பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துக்கள் தெரிவிக்கலாம் 

இணைய வழியில் வழங்கப்படும் இலவச அழைப்புகளை முறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான கருத்துகளை பொதுமக்கள் தொலைத் தொடர்புத் துறைக்கு அனுப்பலாம் என்றும் பார்கவா தலைமையிலான குழு கூறியுள்ளது.

ஊக்குவிக்க முடியாது 

இணையதளக் கட்டணமின்றி சில வலை தளங்களைப் பயன்படுத்தும் வகையில் முகநூல் நிறுவனம், இன்டர்நெட்.ஆர்க் என்ற சேவையை அறிமுகப்படுத்தியது. இந்தச் சேவையானது, நெட் நியூட்ராலிட்டி விதிகளுக்கு எதிரானது என்றும், இத்தகைய நடவடிக்கைகளை ஊக்குவிக்க முடியாது எனவும் தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

உரிமைகள் உறுதி 

செய்யப்படும் இணையதள சேவை அனைவருக்கும் நேர்மையாக கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் முற்போக்கான அணுகுமுறை கடைபிடிக்கப்படும். நாட்டின் தேவைக்கு ஏற்ப கொள்கைகள் வகுக்கப்படும்.இணையத்தை பயன்படுத்துபவர்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.




Read More

May 28, 2015

தமிழில் உள்ள ஒரெழுத்துக்களுக்கும், அவற்றிற்கான விளக்கமும்.
by admin - 0

தமிழில் உள்ள ஒரெழுத்துக்களுக்கும், அவற்றிற்கான விளக்கமும்.
தமிழில் உள்ள ஒரெழுத்துக்களுக்கும், அவற்றிற்கான விளக்கமும்.

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்
அ ----- எட்டு

ஆ ----- பசு

ஈ ----- கொடு, பறக்கும் பூச்சி

உ ----- சிவன்

ஊ ----- தசை, இறைச்சி

ஏ ----- அம்பு

ஐ ----- ஐந்து, அழகு, தலைவன், வியப்பு

ஓ ----- வினா, மதகு - நீர் தாங்கும் பலகை

கா ----- சோலை, காத்தல்

கூ ----- பூமி, கூவுதல்

கை ----- கரம், உறுப்பு

கோ ----- அரசன், தலைவன், இறைவன்

சா ----- இறப்பு, மரணம், பேய், சாதல்

சீ ----- இகழ்ச்சி, திருமகள்

சே ----- எருது, அழிஞ்சில் மரம்

சோ ----- மதில்

தா ----- கொடு, கேட்பது

தீ ----- நெருப்பு

து ----- கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு

தூ ----- வெண்மை, தூய்மை

தே ----- நாயகன், தெய்வம்

தை ----- மாதம்

நா ----- நாக்கு

நீ ----- நின்னை

நே ----- அன்பு, நேயம்

நை ----- வருந்து, நைதல்

நொ ----- நொண்டி, துன்பம்

நோ ----- நோவு, வருத்தம்

நௌ ----- மரக்கலம்

பா ----- பாட்டு, நிழல், அழகு

பூ ----- மலர்

பே ----- மேகம், நுரை, அழகு

பை ----- பாம்புப் படம், பசுமை, உறை

போ ----- செல்

மா ----- மாமரம், பெரிய, விலங்கு

மீ ----- ஆகாயம், மேலே, உயரம்

மு ----- மூப்பு

மூ ----- மூன்று

மே ----- மேன்மை, மேல்

மை ----- அஞ்சனம், கண்மை, இருள்

மோ ----- முகர்தல், மோதல்

யா ----- அகலம், மரம்

வா ----- அழைத்தல்

வீ ----- பறவை, பூ, அழகு

வை ----- வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்

வௌ ----- கௌவுதல், கொள்ளை அடித்தல் — 
Read More

April 05, 2015

சவூதி அரேபியா கவிஞர்களிடம் வரவேற்பை பெற்ற திருக்குறள்: அரபி மொழியில் வெளியீடு!
by admin - 0

சவூதி அரேபிய கலை மற்றும் கலாச்சார மையம் சார்பில் தம்மாமில் நடைபெற்ற கவிஞர்கள் மாநாட்டில் அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் வெளியிடப்பட்டது. புதிய முயற்சியை நிகழ்த்திருப்பது மதரசாவில் கல்வி பயின்ற ஜாஹிர் ஹுசைன் பாகவி. குமரி மாவட்டத்திலுள்ள தக்கலையை சார்ந்த இவர், சென்னை பல்கலைக் கழகத்தின் அரபுத்துறையின் தலைவராக பணியாற்றுகிறார். 

இவ்வெளியீடு குறித்து தெரிவித்த கவிஞர் ஜாஹிர் ஹுசைன் பாகவி, திருக்குறளை அரபு உலகிற்கு அறிமுகப்படுத்திய முதல் நிகழ்ச்சி இது. நம் தாய் நாட்டுச் சொந்தங்கள், நண்பர்கள் அதிக அதிக அளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அரபுக் கவிஞர்கள் வள்ளுவரின் வார்த்தைகளை மெய்மறந்து ரசித்தார்கள். இது ஓர் அற்புதமான அனுபவம் என்று கூறியுள்ளார்.  
Read More

March 18, 2015

உங்களுக்கு தெரியுமா ...?? தமிழனின் இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது...!!
by admin - 0



உங்களுக்கு தெரியுமா ...?? தமிழனின் இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது...!! 

அன்று இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்...!!

இன்று கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம்..!!

உலகுக்கு எடுத்து சொல் !! தமிழன் என்று தலை நிமிர்ந்து நில் !! அனைவருக்கும் பகிருங்கள் ..... 

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.
Read More