Latest News
Showing posts with label குறும்படம். Show all posts
Showing posts with label குறும்படம். Show all posts

January 16, 2017

நட்சத்திரம் படைப்பக்கத்தின் தமிழ்ப்பிரியன் இயக்கிய பிணைப்பு குறும்திரைப்படம்
by admin - 0

 
நட்சத்திரம் படைப்பக்கத்தின் தமிழ்ப்பிரியன் இயக்கிய பிணைப்பு குறும்திரைப்படம் பொங்கல் வெளியீடாக




Read More

November 13, 2016

இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு குறும்படம் “தனியன்
by admin - 0

 

இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு குறும்படம் “தனியன்



ஒரு காலமும் நாங்கள் ஒருவரை பார்த்து குறைத்து எடைபோடவும் கூடாது அதே நேரத்தில் ஒருவரை பற்றி தெரியாமலும் நாங்கள் வீரம் பேசவும் கூடாது. அதேபோல் அவரை பற்றி தெரியாமலும் அவரை தரை குறைவாகவும் பேசக்கூடாது; இது இயல்பான ஒரு முக்கியமான ஒன்றாகும்.

எழுத்து மற்றும் இயக்கம் லீ அவர்கள்
இசை ஜஸ்ரின் 

நடித்தவர்கள் ஜீவா, ரமேஸ், ஜஸ்ரின் ஆகியோரின் நடிப்பில் வெளியாகியது இந்தக் குறும்படம் 

நாங்கள் ஒருவரை பற்றித் தெரியாமல் எங்களின் சுயவிருப்பங்களுக்காக மது அருந்தி சுயநினைவு இழந்து ஒருவரை தரைகுறைவாக பேசுவது எப்படி ஒரு கேவலமான விடயம் தெரியுமா…? 

அதை அழகாக இந்தக் குறும்படத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. அத்தோடு இதில் ஒரு போராளியை நாம் மதிக்க வேண்டும், அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதையும் குறிப்பிட்டுள்ளமை போற்றப்படவேண்டியவை.

வாழ்த்துக்கள் அனைவருக்கும்
கண்டிப்பாக இளைய சமூதாயத்தவர்கள் இக் குறும்படத்தைப் பாருங்கள் 

நன்றி மீண்டும் சந்திப்போம்
அன்புடன் கஜன்

Read More

October 31, 2016

பிள்ளைகள் குளிர்காய விறகுகாளாகும் அப்பாக்களுக்காக
by admin - 0

 நட்சத்திரம் படைப்பகத்தின் யாழ் சண் ஆதரவில் அஐந்தனின் இயக்கத்தில் முள்ளந்தண்டுகள் குறும்படம் 
 


Read More

October 28, 2016

தேசியத் தலைவரின் வளர்ப்பில் வளர்ந்த போராளிகள் அனைத்தும் எங்கிருந்தாலும் போராளிகளே!!!
by admin - 0

தேசியத் தலைவரின் வளர்ப்பில் வளர்ந்த போராளிகள் அனைத்தும் எங்கிருந்தாலும் போராளிகளே!!!


 







புலம் பெயர்ந்து வந்த பின்பும் எம்மினத்தை நினைத்துத் தினமும் உழைக்கும் ஒரு போராளியின் கதை. இவனைப் போன்ற வழிகாட்டிகள் இன்று எமக்குத் தேவை!
Read More

July 30, 2016

ஐம்பத்திலிருந்து அறுபது வரை -குறும்படம்
by admin - 0

பாரிஸ் சுபர்த்தனாவின் மற்றுமொரு துணிச்சலான வெளியீடு “ஐம்பதிலிருந்து அறுபத்தைந்துவரை” குறும்படம்! எம்மைச் சுற்றி நடக்கின்ற போது, நாம் பார்த்துவிட்டு முகம் சுழிக்கின்ற சம்பவங்களை. துணிச்சலோடு படமாக்கியிருக்கின்றார் இயக்குனர் கி.தீபன்.

கி.தீபனின் படைப்புகள் வெறும் பொழுது போக்கானவை அல்ல. உண்மைத்தன்மை உடையவை! எமக்குள்ளே கதை தேடி அதை படமாக்குகின்ற சிறப்பு அவரைச்சாரும் என்பதால்.

சுபர்த்தனா குழுமத்தில் இருந்து வெளிவந்த முன்னைய  படைப்புகள் போன்றே, இதுவும் சமூக அக்கறையோடு வெளிவந்த படைப்பாக பார்க்க முடிகிறது.
இப்போதெல்லாம் தமிழ் சகோதரிகள் தனிமையில் சென்றாலோ, தனிமையில் குடியிருந்தாலோ, அவர்களை ஏதாவது ஒருமுறையில் சீரழிக்கவேண்டும் என்ற நோக்கோடு. தரித்திரக் குணம் கொண்டு சுற்றிவருகின்ற “ஐம்பதிலிருந்து அறுபத்தைந்துவரை” முதியவர்களை அவதானிக்கத்தான் முடிகிறது.


Read More

June 17, 2016

சுபர்த்தனாவின் "மனசுக்குள்ளே" மணவறையில் அல்ல, மன அறையில் வாழ்வதுதான் காதல்.
by admin - 0

சுபர்த்தனாவின் "மனசுக்குள்ளே" மணவறையில் அல்ல, மன அறையில் வாழ்வதுதான் காதல்.
Read More

May 02, 2016

செல்பி அக்கம்-பக்கம்
by admin - 0

தற்போது மக்களின் பொழுதுபோக்கு அம்சங்கள் எத்தனையோ இருந்தாலும் அவற்றில் முக்கிய பங்காற்றுவது சினிமா. ஆனால் இந்த சினிமாவின் முன்னோடி என்றால் அது நாடகங்கள் தான்.

தமிழ் சினிமாவின் பல ஜாம்பவான்கள் உருவானதே மேடை நாடகங்கள் மூலமாகத் தான்.

இவ்வாறாக தனது நடிப்பினாலும், திறமையினாலும் ஈழத்து மக்கள் மனதை கொள்ளை கொண்டிருப்பவர் கலைஞர் பாஸ்கி. தற்போது அவர் படைப்பில் வெளியான சில குறும்படங்களை நாம் கண்டுகளித்து வருகிறோம்.

இன்றைய காலக்கட்டத்தில் தமிழர்களுக்கு தமிழர்களே ஆதரவாக இருப்பதில்லை என்பதை உணர்த்தும் வகையில் காணப்படும் காட்சியே இதுவாகும். இதை அவதானித்த பின்பாவது தமிழனை தமிழன் விட்டுக் கொடுக்காமல் இருப்பார்களா?
Read More

April 28, 2016

நம்மவர் குறும்பட திறனாய்வு‬ (‪ ‎காதலின் நிறம்‬)
by admin - 0

நம்மவர் குறும்பட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக வேற்று இன மக்களின் கலாச்சார வாழ்க்கை முறைமையினையும் அவர்களின் மனவோட்டத்தின் படிநிலையையும் கண்முன்னே நிறுத்தி வெற்றி கொண்ட குறும்படம் காதலின் நிறம்

இன்றைய வெளிநாட்டு கலாச்சாரத்தையும் வெளிநாட்டவர்கள் கலாச்சரமின்றியவர்கள் என்று தென்னாட்டுத் தமிழ் சினிமாவும் சென்னைக் கலாச்சாரமும் எமக்கு கோடுகாட்டிய பொழுதுகளில் வெளிநாட்டவர்களிடையும் நிற கலாச்சார வெறி உண்டு என்பதனையும் அவர்களிடையேயும் பலவிதமான ஒழுக்க முறைமைகள் உண்டு என்பதனையும் நிலைநிறுத்தி ஒரு அந்நிய சூழலையும் அந்த மனிதர்களையும் உள்வாங்கிய இந்த குறும்படம் தான் சொல்ல வந்த விடயத்தை ஆழமாக எம் மனதில் விதைத்துச் சென்றது. 

வேற்று நாட்டவர்களுடன் நாம் இணைத்து பணியாற்றி எம் கலை கலாச்சார பாரம்பரிய முறைமைகளை அவர்களுக்கும் தெரியபடுத்துவதிலேயே எம் மொழிவளமும் எம் பாரம்பரிய வரலாறும் காக்கப்படும் என்பதில் நாம் பூரண நம்பிக்கை கொண்டுள்ளோம். அந்த வகையில் இந்த குறும்படமும் ஒரு ஈழத்துச் சினிமா வரலாற்றின் ஒரு திருப்புமுனையாகவே நாம் காண்கின்றோம். 
புலம்பெயர் தமிழ்ச்சூழல் எப்படியான ஒரு மன சிக்கலுக்குள் வாழ்கின்றது என்பதனையும் எம் இளைய சமுதாயம் எப்படி இன்னும் ஒரு சமுதாயத்துடன் கலக்க முனைகின்றது என்பதையும் வெளிநாட்டு தந்தைக்கு இருந்த கேள்வி இன்றைய தமிழ் பெற்றோரின் மனங்களில் உண்டு என்பதனையும் தொட்டுச் இந்த குறும்படம் தொட்டுச் சென்றிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். 

ஒரு காதல் நிறம் மதம் மொழி கலை கலாச்சாரம் பார்த்து வருவதில்லை எல்லோரினதும் இரத்த துணிக்கைகளும் ஒன்றே என்று கூற முற்பட்டாலும் காதலித்து மணந்து கொண்டவர்களின் எதிர்கால வாழ்க்கை பற்றிய அவர்களின் குழந்தைகளின் எதிகால மொழி கலை கலாச்சார பண்பு பற்றிய பயம் எம் மனதில் ஓடுவதையும் தடுக்க முடியவில்லை. 

இத்தாலிய நடிகர்களும் எம் கதாநாயகனும் மிகவும் அழகாக தனது நடிப்பினை உள்வாங்கி நடித்து இருந்தாலும் எம் மொழியில் ஒரு வார்த்தை கூற கூறாததும் எம் மொழிபற்றி படத்தின் இயக்குனர் தனது கதையமைப்பில் உள்வாங்காததும் இந்த குறும்படத்தின் இன்னுமொரு குறை என்றே கூற முடிகின்றது.

ஒரு சிறந்த மனநிலையான கதாநாயகன் கதாநாயகி தந்தை பற்றி கூறும்போது அவரை அணைத்துக்கொண்டு இருக்கும் காட்சியில் முக அசைவில் கூடிய கவனம் எடுத்திருக்க வேண்டும்.
மிகசிறந்த தரமான ஒளியமைப்பு ஒலியமைப்புடன் நேரிய காட்சிக்கோப்புடன் வெளிவந்த காதலின் நிறம் எம்மவர் குறும்பட வரலாற்றின் இன்னுமொரு சிறப்பான வரவு.


காதலை மட்டும் போற்றும் காதலர்களுக்கு இந்த காதலின் நிறம் சிறந்ததொரு சமர்ப்பணம் 
மொத்தத்தில் காதலின் நிறம் எம் இளைய‬ ‪#‎தலைமுறையின் முகங்களை துயிலுரிக்கும் உண்மை படைப்பு‬ 
‪ ‎ஈழத்து சினிமா சாதனையும் வேதனையும்‬" இது மாற்றத்துக்கான வழி 
என்றும் அன்புடன் 
காவியா 
Read More

January 15, 2016

குன்றும் குழியும் குறும்படம்
by admin - 0

இரணைப்பாலை திலீப் அவர்களின் தயாரிப்பில்..அருண்ராஜ் கதை,திரைக்கதை,வசனம் எழுதி அவருடைய இயக்கத்தில் உருவான " குன்றும் குழியும்"குறும்படமானது புலம்பெயர் தேசத்தில் வாழும்
பிரவீன் ,கிஜிதா ,சுஹாசன் ,காரத்திக் ,கீர்த்ஜா,வி.வி. கணேஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவான
இக் குறும்படத்தை துஷ்யந்தன் அவர்கள் ஒலி,ஒளி பதிவுகளையும்,பட தொகுப்புகளையும் வழங்க..இரா சேகர் அவர்கள் இசையையும் வழங்கியுள்ளார் !

இக் குறும்படம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக்கொள்கின்றோம் !!



Read More

December 27, 2015

திருடர் கவனம்.
by admin - 0

24 மணி நேரத்தில் வெளியான திருடர் கவனம்.

ஈழத்து திரைத்துறையில் மற்றுமொரு முயற்சியாக 24 மணி நேரத்தில் படமாக்கப்பட்ட நனோ திரைப்படமொன்று வெளியாகியுள்ளது.

பூவன் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள
“திருடர் கவனம்“ என்ற இந்தப்படம், திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு திரில்லர் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மதீசன், உஷாந் ஆகியோர் நடித்துள்ளதுடன் சசிகரன் கிருஷ்ணா  ஆகியோர் பணியாற்றியுள்ளனர் 
Read More

December 20, 2015

நட்சத்திரம் படைப்பகம் வழங்கும் "அகாலம்" குறும்படம்
by admin - 0

நட்சத்திரம் படைப்பகம் வழங்கும் "அகாலம்" குறும்படம்

Read More

November 13, 2015

ஈழத்துப் பெண் ஒருவர் 25வது ஆண்டு வேதனையிலும் படைத்த சாதனை…!
by அகலினியன் - 0

ஈழத்துப் பெண் ஒருவர் 25வது ஆண்டு வேதனையிலும் படைத்த சாதனை…!

1990ம் ஆண்டு அனலைதீவிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாகப் புறப்பட்டவர்களில் 66 உயிர்களைக் காவுகொண்ட படகு விபத்தின் 25வது ஆண்டு நினைவையொட்டி அவர்களின் ஆத்ம சாந்திக்காக மிகத் தரமான முறையில் வெளிவந்துள்ளது ஒரு பாடல்.

குறித்த பாடல்காட்சிகளை இயக்கி வெளியிட்டுள்ளார் சிறந்த பெண்கலைஞரான சாலினி சார்லஸ் என்பவர். குறித்த பெண் கலைஞர் கலைத்துறையில் பல்வேறுபட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதுடன் தரமிக்க கருத்துக்களுடன் கூடிய படைப்புக்களை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சிறந்த பாடல்களையும், குறும்படங்களையும் யாழில் இருந்து செயற்படும் ஏனைய கலைஞர்களும் கருத்தில் எடுத்து செயற்பட்டால் கலைத்துறை நிச்சயம் சிறந்த நிலைக்கு வரும்.

ஒரு குறும்படம் அல்லது பாடல்கள் எடுப்பது என்பது எவ்வளவு நுட்பமானதும் சிரமம் மிக்கதும் என்பதும் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

'உயிர்சூறை' பாடல் குறித்து, உலக அறிவிப்பாளர் பி எச் அப்துல் ஹமீத் அவர்களின் கருத்து

"நம் மண்ணில் நிகழ்ந்த ஆயிரமாயிரம் துயரக்கதைகள் மத்தியில், ஆழிக்குள் சங்கமமாய்ப் போன, அனலைதீவுச் சொந்தங்களின் கதையை, அழியாத கோலமாய், துயரம் தோய்ந்த வரிகளிலும், உள்ளத்தை உருக்கும் குரல் ஒலியியிலும், நெஞ்சை நெகிழவைக்கும் இசையிலும் உருவாக்கி, மிகச் சிறந்த தொழில் நுட்பத்தோடும், நிபுணத்துவத் திறமையோடும், ஒரு காலச்சுவடாய்க் காட்சி வடிவமாக்கிய அனைவருக்கும் நன்றி. இனி.. அந்தமண்ணில் வளரும் தலைமுறைக்கு நம்பிக்கை ஒளியூட்டும் படைப்புகளையும் எதிர்பார்க்கிறோம்."

என்று தெரிவித்திருக்கிறார்.

இதோ.... அந்த 'உயிர்ச்சூறை' காணொளி வடிவில்.....

Read More

August 14, 2015

ஒரு நிமிடம் செலவழித்து பார்க்க வேண்டிய குறும்படம்
by admin - 0

இப்போதெல்லாம் நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துவிட்டன. இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த குறும்படமும் பாதிக்கப்பட இருக்கும் ஒரு பெண்ணை பற்றிய குறும்படம் நகர்கிறது. குறும்படம் இரண்டே நிமிடம் என்றாலும் சொல்ல வந்த கருத்தை நச் என்று கூறியிருக்கிறார் இயக்குனர் புவிகரன்.

நல்ல குறும்படம், இதுபோன்ற நல்ல கருத்துடைய குறும்படங்கள் மக்களால் வரவேற்கப்படுகின்றன.


Read More

July 25, 2015

கதையின் முடிவு நம்மவர்களுக்கு ஒரு பாடம்!
by admin - 0

சுபர்த்தனா மூவிஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் புதிய படைப்பு: ... "ஆவர்த்தனம்". இயக்குனர்  கி.தீபனின் படங்கள் எல்லாமே பொழுது போக்குப் படங்களாக  இல்லாமல், சமுதாயத்திற்கு தேவையான நல்ல கருத்துக்கள் சொல்கின்ற படங்களாகவே இருக்கும். அந்தவகையில் நம்மவர்களிடையே மலிந்து போயிருக்கும் ஒரு சம்பவத்தை படமாக்கியிருக்கிறார். 

ஆரம்பித்து முடியும்வரை சிந்திக்க நல்ல வசனங்களோடு படம் நகர்கின்றது.  இந்த குறும்படத்தில் நடித்த லோகதாஸ், அகிலா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். கதையின் முடிவு நம்மவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்திருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படத்தை ஒரு தடவை பாருங்கள். அனைவருக்கும் வாழ்துக்கள்!



Read More

February 19, 2015

சுபர்த்தனா மூவீஸின் குடும்பத்தோடு பார்க்கவேண்டிய சிறப்புக் குறும்படம் : 'உள்ளம் மட்டும்'!
by admin - 0

சுபர்த்தனா மூவீஸின் குடும்பத்தோடு பார்க்கவேண்டிய சிறப்புக் குறும்படம் : 'உள்ளம் மட்டும்'!
Read More

January 15, 2015

சுபர்த்தனா மூவீஸின் புதிய படைப்பு "உருவம்"
by admin - 0

ஒவ்வொரு படைப்புகளிலும் வித்தியாசமான கதைகளைச் சொல்லும் சுபர்த்தனா மூவீஸின் புதிய படைப்பு "உருவம்" வெளிவந்து விட்டது!  இதில் "மக்கள் கலைஞர்" பிரியாலயம் துரைஸ், கமலவேணி, லலிதா, கேதீஸ், விஜி சிறப்பாக நடித்துள்ளனர். 


இந்தப் படம் பார்க்கின்ற  ஒவ்வொருவரும் இதே போன்று யாரோ ஒருவரிடம் என்றாலும் எமாந்திருப்பீர்கள்!  கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய படம் இது!
Read More

January 02, 2015

விலை மதிக்க முடியாத தாயின் பாசத்தை சொல்லும் குறும்படம் "உயிர்மை"!
by admin - 0

நாம் ஒவ்வொருவரும் எம்மை பெற்ற தாயை. என்றோ ஒரு நாள், எதோ ஒரு சந்தர்ப்பத்தில் இழந்துவிட நேருகின்றது. இருந்த போதிலும்... அந்த தாயின் அன்பை, அவளோடு வாழ்ந்த கால‌ங்களை எண்ணங்களில் இருந்து விலக்க முடியாது மனம் தேடி அழுகிறது. விலை மதிக்க முடியாத தாயின் பாசத்தை சொல்லும் குறும்படம் "உயிர்மை"!
Read More

December 30, 2014

30 வருடங்களின் முன்பு எமது மண்ணையும், போராளிகளையும் ஞாபகப்படுத்தும் குறும்படம்!
by admin - 0

30 வருடங்களின் முன்பு எமது மண்ணையும், போராளிகளையும் ஞாபகப்படுத்தும் குறும்படம்!

Read More

December 25, 2014

சுபர்த்தனா மூவீஸின் நத்தார்தின வெளியீடு “அரவணைப்பு” இது ஒரு பாசப்பிணைப்பு!
by admin - 0

சுபர்த்தனா மூவீஸின் நத்தார்தின வெளியீடு “அரவணைப்பு” இது ஒரு பாசப்பிணைப்பு!

யாரை பாராட்டுவது! விழிகளுக்குள் வலிகளை சுமக்கும் பிஞ்சுகளுக்கும், நெஞ்சுக்குள் நஞ்சினை சுமக்கும் மருமக்களுக்கும், வாய் பேசும் உமைகளாக வாழும் பெற்றவர்களுக்கும், நவரச நாயகனின் அமைதியான குமுறல், அடக்கமான பாடகரின் பார்வையாலே செய்யும் நர்த்தனம், பாவிமகளே! எனத் திட்டி தீர்க்க வைக்க மருமகளாக வரும் யதார்த்த நடிப்பரசி!

நீங்கள் செய்வது நடிப்பு, அது இயல்பானது அல்ல, என்னைப் போல் பாத்திரத்தோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லி தன் நடிப்பில் முத்திரை பதிக்கும் செல்வ மகள்.

அனைத்தையும் அமைதியாக இருந்தே எம்மை எல்லாம் அழவைக்கும் இயக்குனர் "தீபனுக்கு" கட்டிப்பிடித்து என் அன்பான முத்தங்கள்... மொத்தத்தத்தில் "சுபர்த்தனா மூவீஸின்" உழைப்பாளிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... இன்னும் வேண்டும் இது போல்...!

Read More

December 09, 2014

குறும்படம் நம்பிக்கை
by admin - 0

கௌதம், ரகுநாதன் ஆகியோர் நடிப்பில் கவிப்பிரியன் இசையில் வெளியாகி இருக்கும் குறும்படம் நம்பிக்கை. ஒரு அழுத்தமான கருத்தை முன்வைக்கிறது இந்த குறும்படம்.கி.தீபனின் அண்மைய ஒவ்வொரு படைப்பும் போராளியின் வலியை சொல்லும் வகையில் அமைந்துள்ளது. இந்த குறும்படமும் ஒரு போராளியின் மிகவும் சோகமான கதையை சொல்லுகிறது.


Read More