Latest News
Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

April 09, 2025

தமிழக அரசியலில் புதிய கட்டமைப்பு – பாஜக இரண்டு வழித் திட்டத்தில் பயணம்?
by Editor - 0

தமிழக அரசியலில் புதிய கட்டமைப்பு – பாஜக இரண்டு வழித் திட்டத்தில் பயணம்?

தமிழக அரசியல் சூழலில் பெரும் மாற்றத்துக்கான சூழ்நிலை உருவாகி வருகிறது. ஒரு பக்கம் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உயிர் பெறும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இன்னொரு பக்கம், பாஜக – நாம் தமிழர் கூட்டணியை உருவாக்கும் பணி தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சமீபத்தில், அமித் ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி சந்தித்தது முக்கிய பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் இம்முறையில் சாதகமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. எப்போதும் கடுமையாக நடந்து கொள்ளும் அமித் ஷா, இம்முறை இயல்பாக இருப்பது கவனிக்கத்தக்கது.

பேச்சுவார்த்தை முழுக்க முழுக்க அரசியல் குறித்து தான். இதில், எடப்பாடி பேசியதை தம்பிதுரை ஆங்கிலத்தில் அமித் ஷாவுக்கு விளக்கியதாக தகவல்கள் வெளியாகின. முக்கியமாக, "திமுக கூட்டணியை வீழ்த்த அதிமுக பிளவுகள் இல்லாமல் இருக்க வேண்டும். ஓபிஎஸ், சசிகலா, தினகரனை மீண்டும் இணைப்பதில் என்ன தடையாக இருக்கிறது?" என அமித் ஷா கேட்டுள்ளார்.

இதே வேளையில், பாஜக – நாம் தமிழர் கூட்டணி உருவாகும் வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. சீமானை முதல்வர் வேட்பாளராக முன்வைத்து, 80 சீட்டுகள் நாம் தமிழருக்கு, 80 பாஜகவிற்கு, மீதமுள்ள 74 சீட்டுகள் மற்ற கட்சிகளுக்கு என்ற வகையில் ஒரு திட்டம் டெல்லியில் விவாதிக்கப்படுகிறது.

தற்போது தமிழக பாஜகவில் இரண்டு லாபிகள் (அல்லது அணி) உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஒன்று, அதிமுகவுடன் தொடரவேண்டும் என நினைக்கும் அணியினர்.

மற்றொன்று, அதிமுகவை புறக்கணித்து நாம் தமிழருடன் புதிய கூட்டணி உருவாக்க விரும்பும் அணியினர்.

இருபுறத்திலும் களமிறங்கிய நிலையில், 2026 தேர்தல் நேரமாவது எந்த கூட்டணி வெற்றி பெறும்? எந்த அணியின் திட்டம் நிறைவேறும்? என்பதுதான் பார்க்க வேண்டிய கேள்வி.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சீமான் சந்தித்ததாகவும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் ஒரு மணி நேரம் பேசியதாகவும் செய்திகள் பரவின. ஆனால் சீமான் இதை மறுத்துவிட்டார். இதுவும் பாஜக – நாம் தமிழர் கூட்டணி குறித்து பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
Read More

January 31, 2021

இது என் தேசம் என் நாடு! யாரும் விலகவில்லை நான்தான் வெளியேற்றினேன்: சீறிய சீமான்!
by Editor - 0


நாம் தமிழர் கட்சியின் களப்போராளிகளுடனான கலந்தாய்வு கூட்டம் வேலூர் மாநகராட்சி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 13 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்களையும் அறிமுகம் சீமான் செய்து வைத்தார்.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “இவ்வளவு நாளாக வேல்- ஐ கையில் எடுக்காத ஸ்டாலின் தற்போது எடுக்க காரணம் என்ன? மக்களுக்கு மிகப்பெரிய பிரச்னையே அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகள் தான். இத்தனை ஆண்டுகளாக மக்கள் பிரச்சனையை தீர்க்க முடியாதவர்கள் 100 நாட்களிலா தீர்க்கப்போகிறார்கள். பா.ஜ.க ஆட்சியின் சாதனை, திட்டங்களை பற்றி பேச ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் எல்லாமே கொடும் திட்டங்கள். வட இந்தியாவில் ராமர், கேரளாவில் ஐயப்பன், தமிழகத்தில் முருகன். நாங்கள் வேல்-ஐ கையில் எடுத்தது பண்பாட்டு மீட்சி, ஆனால் பா.ஜ.க, திமுக ஸ்டாலின் வேலை கையில் எடுத்தது தேர்தலுக்காக மக்களை இழுக்கவே. தமிழ் இறை அனைவருக்கும் சொந்தம். இத்தனை ஆண்டுகளாக ஸ்டாலின் ஏன் வேல்-ஐ கையில் எடுக்கவில்லை. பா.ஜ.கவும் கட்சி தொடங்கி இத்தனை ஆண்டுகளாக வேல்-ஐ கையில் எடுக்கவில்லை. தற்போது எடுப்பது தேர்தலுக்காக என்பது வெளிப்படையாக தெரிகிறது.


வேளாண் குடிமக்களின் கடனை ரத்து செய்யப்பட வேண்டும் என மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம். நாம் தமிழர் கட்சி இந்திய கட்சிகள் மற்றும் திராவிட கட்களுடன் கூட்டணி வைக்காது. தனித்து தான் போட்டியிடும். 7 பேர் விடுதலை என்பது 25 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு தற்போது ஆளுனர் கையெழுத்தில் இருக்கிறது. தற்போது விடுதலை செய்ய வேண்டும். போராடி எப்படியும் விடுதலையை சாத்தியப்படுத்துவோம். தேர்தல் லாபத்திற்காக செய்தாலும் 7 பேரை தயவு செய்து விடுதலை செய்யுங்கள். இந்த முறை வெற்று அறிவிப்பாக இல்லாமல் ஆக்கப்பூர்வமான செயலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டும். 7 பேரை விடுதலை செய்ய வேண்டும். நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரும் வெளியேறவில்லை, நான் தான் வெளியேற்றினேன். அதன் பிறகு அவர்கள் விரும்பிய கட்சியில் சேர்ந்துகொண்டார்கள். நான் யாருக்கும் விளக்கம் அளிக்க வேண்டியது இல்லை. வேண்டும் என்றால் தான் விளக்கம் அளிக்க வேண்டும், வேண்டாம் என்றால் விளக்கி தான் வைக்க வேண்டும். மொத்த சீட்டையும் வெல்ல வேண்டும் என்று தான் உழைத்துக்கொண்டிருக்கிறோம்.

இது என் தேசம் என் நாடு இங்கு வாழுகிற குடிமக்களுக்கான அரசியல் தமிழ் தேசிய அரசியல். இட ஒதுக்கீட்டு கொள்கையில் ராமதாசோடு துணை நிற்பேன். இடஒதுக்கீட்டில் அவர் எப்போதுமே உறுதியாக இருப்பார் அந்த இடத்தில் அவருக்கு ஆதரவாக நான் நிற்பேன்” எனக் கூறினார்.
Read More

September 29, 2020

இந்தியாவை அவமதிக்கும் இராஜபக்சேவிடம் தமிழர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்!
by Editor - 0

இந்திய நிலைப்பாட்டை ஏற்க மறுக்கும் நிலையில்  இலங்கை பிரதமர் ராஜபக்சே உள்ளார், அதற்க்கு இந்திய மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்….


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி – இலங்கை பிரதமர் இராஜபக்சே ஆகியோருக்கிடையிலான இரு தரப்பு பேச்சுகளின் போது பரிமாறிக் கொள்ளப்பட்ட கருத்துகளின் பயனாக தங்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்று ஈழத்தமிழர்கள் நம்பிக் கொண்டிருந்த நிலையில், அவர்களின் நம்பிக்கை மீது வெந்நீரை ஊற்றி சிதைத்திருக்கிறார் இராஜபக்சே. ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் விஷயத்தில் இந்தியாவின் யோசனையை இலங்கை ஏற்க மறுத்திருப்பது திட்டமிட்டு இழைக்கப்படும் அவமதிப்பாகும்.

இந்தியா – இலங்கை இடையிலான இரு தரப்பு உறவுகள் குறித்து இரு நாடுகளின் பிரதமர்களும் கடந்த 26-ஆம் தேதி இணையவழியில் பேச்சு நடத்தினார்கள். அப்போது, இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 13-ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளித்தல், போருக்குப் பிந்தைய சமாதான முயற்சிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர்கள் சமத்துவம், நீதி, அமைதி, மரியாதை ஆகியவற்றுடன் வாழ வகை செய்ய வேண்டும் என்று இலங்கை பிரதமர் ராஜபக்சேவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கேட்டுக் கொண்டார்.
அதையேற்ற இலங்கை பிரதமர் ராஜபக்சே, இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவுகளை முழுமையாக செயல்படுத்துவதன் மூலம் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற தமது அரசு நடவடிக்கை எடுக்கும் என மோடியிடம் உறுதியளித்திருந்தார். இரு நாடுகளின் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்த அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

வழக்கமாக இரு நாட்டு தலைவர்களுக்கு இடையில் நடைபெறும் பேச்சுக்களுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட நாடுகளின் சார்பில் தனித்தனியாக அறிக்கை வெளியிடப்படும். அந்த அறிக்கையில், இருதரப்பு பேச்சுக்களில் முடிவு செய்யப்பட்ட விஷயங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்படுவது வழக்கம்.

ஆனால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடனான பேச்சுக்களுக்குப் பிறகு இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையில், ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பது குறித்தோ, இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் 13-ஆவது சட்டத் திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துவது குறித்தோ எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தியப் பிரதமருடனான பேச்சுக்களின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயத்தை இலங்கை அரசு அதன் அறிக்கையில் தவிர்த்திருப்பதன் மூலம் இந்தியாவை அவமானப்படுத்தியிருக்கிறது. இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் 13-ஆவது திருத்தம் என்பது 1987-ஆம் ஆண்டு இந்திய – இலங்கை அமைதி உடன்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகும். அத்திருத்தத்தை முழுமையாக செயல்படுத்தும்படி வலியுறுத்தும் உரிமை இந்தியாவுக்கு உண்டு. இந்த விஷயத்தில் இந்தியாவின் வலியுறுத்தல்களை செயல்படுத்த வேண்டிய கடமை இலங்கைக்கு உள்ளது. ஆனால், அக்கடமையையும், ஒப்பந்த விதிகளையும் மதிக்க இலங்கை அரசு மறுத்திருப்பதை விட மோசமான அவமதிப்பை இந்தியாவுக்கு இழைக்க முடியாது.

இலங்கைப் போரில் ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்த இராஜபக்சே, அதற்கு எதிராக உலக அரங்கில் எழுந்த கண்டனத்திற்கு பணிந்து, 13-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை விட கூடுதல் அதிகாரத்தைத் தமிழர்களுக்கு வழங்கத் தயார் என்று அறிவித்தார்.

ஆனால், இப்போது 13-ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை செயல்படுத்துவது குறித்து உறுதி அளிக்க மறுத்திருக்கிறார். இலங்கை அரசியலமைப்பு சட்டத்திலிருந்து 13-ஆவது திருத்தம் நீக்கப்படும் என்ற அச்சம் ஈழத்தமிழர்களிடம் எழுந்துள்ள நிலையில், அதை நீக்குவதற்கான உறுதிமொழி கூட அளிக்கப் படவில்லை என்பதிலிருந்தே இந்தியாவை இலங்கை எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை உணரலாம்.

போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் உள்ளிட்ட விஷயங்களில் உலக அரங்கில் இலங்கை கடுமையான கண்டனங்களுக்கு உள்ளான போதெல்லாம், அந்த நாட்டைக் காப்பாற்றியது இந்தியா தான். இப்போதும் கூட இலங்கை கடுமையான கடன் வலையில் சிக்கியுள்ள நிலையில், இந்தியாவின் கடன்களைத் திருப்பிச் செலுத்த கூடுதல் கெடு வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு உதவிகளுக்கும் இலங்கை செலுத்தியுள்ள நன்றிக்கடன் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்திருப்பது ஆகும். இத்தகைய தொடர் அவமரியாதைகளை இந்தியா எப்படி எடுத்துக் கொள்ளபோகிறது? என்பது தான் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல்கள், ஈழத்தமிழர்களுக்கு போதிய அதிகாரம் வழங்குதல் ஆகியவற்றில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். பன்னாட்டு அமைப்புகளில் இது குறித்த விவாதங்களும், விசாரணைகளும் வரும் போது, இலங்கைக்கு எதிரான, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும். அதன்பிறகும் இலங்கையின் போக்கு மாறாவிட்டால், இறுதித் தீர்வாக ஐக்கிய நாடுகள் அவையின் மூலம் தனித்தமிழீழம் அமைக்க உலகம் முழுவதும் ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read More

July 22, 2020

எவ்வளவு காலம் இழுத்தடிப்பீர்கள்! ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பில் உயர் நீதிமன்றம் அதிரடி
by Editor - 0

கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.

7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் ,ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை தொடர்பில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.

ஆனால் இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், 7 பேர் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளது.

7பேர் விடுதலைக்கான தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் எவ்வளவு காலம் வைத்திருக்க முடியும் என அதிரடியாக கேள்வியெழுப்பியுள்ளது
Read More

July 12, 2020

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கு கரோனா தொற்று
by Editor - 0

அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.  இந்த பரிசோதனையின் முடிவுகள் இன்று வெளியாகும் என்று அம்மநில சுகாதாரத்துறை மந்திரி கூறினார்.

 

இந்த நிலையில், அமிதாப் பச்சனின் மருமகள் மற்றும் அபிஷேக் பச்சனின் மனைவியான நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களது மகள் ஆரத்யாவுக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை சுகாதாரத்துறை மந்திரி உறுதிப்படுத்தி உள்ளார். ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அமிதாப்பச்சனை தொலைபேசியில் தொடர்புகொண்ட நடிகர் ரஜினி காந்த், உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அமிதாப் பச்சனும் அவரது மகனான அபிஷேக் பச்சனும் கரோனாவில் இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும் நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். 
Read More

September 23, 2018

இந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்
by admin - 0

இந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு   வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 



1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும் கிராமத்தில் இந்திய ராணுவம் வீடு வீடாக சென்று சோதனையிட்டது. அப்போது ஒரு வீட்டில் பெண் ஒருவர் தனியாக இருந்துள்ளார். அப் பெண்ணுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர்தான் குழந்தை பிறந்திருந்தது. அவர் குழந்தையுடன் வீட்டில் இருந்தபோது நான்கு சீக்கிய ராணுவத்தினர் சென்றுள்ளனர். இனி அதை அந்த பெண் கூறுவதை படியுங்கள்.

ஜயோ பிள்ளையாரப்பா!
குறுக்கால போவார், தொலைவார்
இன்னைக்கு பகல்ல வந்துட்டான்களே

இந்நேரம் என்ர மனுசனும் இல்லையே
யாரைத்தான் இப்ப அனுப்ப முடியும் 
உடனே அவரைக் கூட்டி வா என்று

வழக்கமாக மதவடியில் இருக்கும்
பொடியன்களையும் காணவில்லையே 
பாவம், அவங்களும் எத்தனை தரம்தான்
பூவரசம் கதியால அடி வாங்குவது?

சப்பாத்தி வாசம் வரும் முன்னே
இந்தியன் ஆர்மி வரும் பின்னே

ஒழுங்கையால யார் போனாலும் 
வீரமாக குரைக்கும் நாயும்கூட
இந்தியன் ஆர்மி என்றவுடன்
குண்டிக்குள் வாலைச் செருகிக்கொண்டு
ஓடி வந்து வீட்டுக்குள் பதுங்குதே.

வீட்டை சுற்றி விறைப்பாக நிக்கிறாங்க
தலையிலே துண்டு கட்டியிருக்கிறாங்க
இவங்கதான் சீக்கிய ஆர்மி போல இருக்கு
முன்னால படலை இறுக்கி கட்டியிருக்கு 
பின்னால வேலியில் கண்டாயம் வைச்சு வந்திட்டாங்களே

அத்துளு அம்மாளாத்தையே 
இந்த சண்டாளப் பயலுகளிடமிருந்து 
நீதான் என்னைக் காப்பாத்தனும் 
அடுத்த திங்கட்கிழமை கட்டாயம்
உனக்கு பொங்கல் வைக்கிறேன் அம்மா!

ஒருத்தன் கிணத்தடியில் இருந்த தென்னையில்
தேங்காய் பறித்து தின்கிறான்
இன்னொருத்தன் வீட்டு வாசலில் இருந்த மாமரத்தில்
மாங்காய் ஆய்ஞ்சு தின்கிறான்
வேறு ஒருத்தன் பேப்பரால் சுத்திக் கட்டிய மாதுளம்பழத்தை
பறித்து பாக்கெட்டுக்குள் செருகுகிறான்
கடைசியாக ஒருத்தன வீட்டுக்கள் எட்டிப் பார்க்கிறானே?
ஜயோ! உள்ளே வந்துவிடுவானா?

பொல்லாத கனவுதான் ராத்திரி கண்டேனே
வெள்ளாட்டுக் காம்பில் விஷம் வடியக் கண்டேனே
ஓடை எல்லாம் ரத்தம் ஓடிவரக் கண்டேனே
காத்து கறுப்பாச்சே கண்ட கனா பலிச்சிடிச்சே 
என் மேலேயே இடி வந்து விழுந்திடுச்சே!

பள்ளிக்கு போயிருக்கும் மனுசன் இன்னும் வரல்லையே
அப்பு வீட்டுக்குபோன என் மகனையும் காணல்லையே
ஒத்தையிலே நான் பச்சை உடம்போடு படுத்து இருக்கையில்
துப்பாக்கியோடு வந்து வாசற்பக்கம் எட்டிப் பார்க்கிறானே!

கொல்லையில என் மகன்தான் மல்லிகை நட்டிருக்கான்
நீர் பிடிச்ச கொடி இப்ப வேர் பிடிச்சு வளர்ந்திருக்கு
பொத்தி வளர்த்த கொடி பூ பூக்கும் முன்னால 
பூட்ஸ் காலால மிதிச்சு சிதைக்கிறாங்களே
ஆசையில வச்ச கொடியை இரக்கமின்றி அழிக்கிறாங்களே
இவங்களுக்கு “அமைதிப்படை” என்று பெயர் வைச்சவன் எவன்டா?



பல வருசமாய் நெல்லியடி சந்தியில திரிஞ்ச
“மெண்டல்” பத்மநாதனை சுட்டுக் கொன்றுவிட்டு
புலித் தளபதியை சுட்டுவிட்டதாக அறிக்கை விட்டவன்கள்
என்னையும் கொன்றுவிட்டு அதுபோல் அறிக்கை விடுவாங்களோ?
சீ, இருக்காது. 
என்ன இருந்தாலும் பச்சை உடம்புக்காரி என்று 
கொஞ்சம் இரக்கம் காட்டாமலா விடுவாங்கள்?

எட்டிப் பார்த்தவன் எத்தி உதைத்தான்
பூட்டிய கதவு திறப்பு போடாமலே திறந்தது
மாங்காய் தேங்காய் திருடி தின்னவும்
பூட்டிய வீட்டை உதைத்து திறக்கவும் 
நன்கு பயிற்சி பெற்று வந்திருக்கிறாங்கள்
இதுக்குத்தான் டாங்கி, பீரங்கி சகிதம்
“அமைதிப்படை” என்று பெயர் கூடி வந்தாங்களா?

நான் பட்டபாடு நாய்படுமா பேய்படுமா
கடையும் தயிர் படுமா இல்லை தறி படுமா
புதுசா கட்டின வீட்டுக்கு ஓடு போட 
அப்பு தந்த சங்கிலியை அடகு வைச்சேன்
கதவு ஜன்னல் போடுவதற்கு
அத்துளுவில் வெங்காயம் செய்து வித்தேன்
பிள்ளைத்தாச்சி வயிறோடு கிடுகு பின்னி
வீட்டைச் சுற்றி வேலி போட்டேன்
அத்தனையும் ஒரு நொடியில் நாசமாக்கி விடுவாங்களோ
நாசமாய் போவான்கள், என்ன செய்யப் போறானுகளோ?


வீட்டுக்குள் வந்தவன்
சுவரில் தொங்கிய நாஷனல் பன்சோனிக் ரேடியோவை 
எடுத்து தன் தோளில் தொங்க விட்டான்
கீரை வித்த காசில் அப்பு தன் பேரனுக்கு 
ஆசையாக வாங்கிக் கொடுத்த ரேடியோ இது
பள்ளியால வந்து தன் ரேடியோ எங்கே என்று
என் மகன் கேட்டால் என்ன சொல்வேன்?

பிறந்து மூனு நாளே ஆன குழந்தை
அருகில் படுத்து இருக்கு
பச்சை உடம்புக்காரி என்று 
பக்கத்துவீட்டு மாமி அரைச்சு தந்த 
சரக்கு தண்ணி தலை மாட்டில இருக்கு
இவனுகளைக் கண்டதும் பயத்தில
பசியும் மறந்து போயிடுச்சே!

ரேடியோவை திருடியவன் 
அறைக்குள் வருகிறானே
ஜயோ என்ன செய்வேன்?

அறைக்குள் வந்தவன் காலைப்பிடித்து 
விட்டுடுங்கய்யா, என்னை விட்டுடுங்கய்யா
என்று கெஞ்சியதுமட்டும் நினைவிருக்கு

அழுதாலும் ஏழை சொல்லு அம்பலத்தில் ஏறாது
அருகம்புல்லு புத்தி சொல்லி அருவாள் கேட்காது
கண்ணாடி கடைக்குள் காட்டு யானை புகுந்தது போல்
எல்லாத்தையும் சிதைச்சிட்டு போயிட்டாங்களே

கடைசில ஒண்ணு மட்டுமே கூற விரும்புகிறேன்
அத்துளு அம்மாள் சக்தி உள்ள கடவள்தான் 
அவள் நிச்சயம் எனக்கு பதில் சொல்வாள்!

குறிப்பு-

கொஞ்சம்கூட இரக்கமின்றி அந்த பெண்ணை நாலு சீக்கிய ராணுவத்தினரும் மாறி மாறி பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். அதிகளவு ரத்தம் வெளியேறி மயங்கிய நிலையில் இருந்த பெண்ணை அயலவர்கள் மந்திகை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

அங்கு கடமையில் இருந்த செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த பிரஞ்சு பெண் டாக்டர் ஒருவர் அப் பெண்ணை சிகிச்சை கொடுத்து காப்பாற்றியதோடு இதனை இந்திய ராணுவ உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

அதையடுத்து அப் பெண் அந்த நாலு ராணுவத்தினரையும் அடையானம் காட்டினார். ஆனால் அவர்களுக்கு இதுவரை இந்திய அரசால் எத்தகைய தண்டனையும் வழங்கப்படவில்லை.

ஆனால் பச்சை வயிற்றுக்காரியை ராணுவம் பாலியல் வல்லறவு செய்ய காரணமான ராஜீவ்காந்தி வயிறு வெடித்து சாவதற்கு அத்துளு அம்மாள் கோபம்தான் காரணம் என்று சிலர் கரவெட்டியில் நம்புகின்றனர்.
Read More

September 10, 2018

7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம்.. ஆளுநருக்கு பரிந்துரை!
by admin - 0

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடங்கிய கூட்டத்தில் 7 தமிழர்கள் விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநருக்கு 161வது விதியின் கீழ் பரிந்துரைப்பது என முடிவு செய்யப்பட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கூறி வழக்கை முடித்து வைத்துவிட்டது.

இதையடுத்து 7 பேர் விடுதலை குறித்து , அமைச்சரவையை கூட்டி விவாதித்து, சட்டநிபுணர்களின் ஆலோசனையும் பெற்று 7 பேர் விடுதலை குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதற்கேற்ப எதிர்க்கட்சிகளும் உடனடியாக அமைச்சரவையை கூட்டி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.


இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடங்கியது. இதில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விதி எண் 161-இன்கீழ் அரசு, ஆளுநருக்கு பரிந்துரைப்பதாக அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் தெளிவாக தமிழக அரசுக்கு, இந்த விஷயத்தில் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ளது. எனவே தமிழக அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது. அமைச்சரவை பரிந்துரையை ஆளுநர் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.
Read More

August 07, 2018

காலமானார் கலைஞர் கருணாநிதி
by admin - 0

திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் மறைந்தார். காவேரி மருத்துவமனையில் 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு இன்று சிகிச்சை பலனின்றி கருணாநிதி மறைந்தார்.


இதைத்தொடர்ந்து அவரது உடல் அவர் வாழ்ந்த கோபாலபுரம் வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதனை முன்னிட்டு கருணாநிதியின் சென்னை கோபாலபுரம் வீட்டில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதிக வெளிச்சம் கொண்ட விளக்குகள் கோபாலபுரம் வீட்டின் அருகே கட்டப்பட்டு வருகின்றன. அவரது வீட்டிற்கு இரும்பு நாற்காலிகள் கொண்டு வரப்படுகின்றன.
கருணாநிதியின் கார் ஏற்கனவே அகற்றப்பட்டு விட்டது. இந்நிலையில் வீட்டில் இருந்த பொருட்களும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
Read More

June 04, 2018

ரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்
by admin - 0

ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது.தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில் காலா திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டுமென உலகம் முழுவதிலும் இருக்கும் பல தமிழர் அமைப்புகள் அறிவித்து கொண்டிருக்கின்றன.









இதற்கு நோர்வே, சுவிஸ் நாடுகளுக்கான திரைப்பட விநியோகித்தர்கள் ஏற்றுக்கொண்டு தமது நாடுகளில் காலா திரைப்படத்தை திரையிடவில்லை என அறிவித்துள்ளனர்.



Read More

May 22, 2018

என்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை
by admin - 0

கார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போலீசார் சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர்.
வைத்து போலீசார் சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர்.


இதில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் 17 வயது மாணவி வெனிஸ்டா என்பவரும் பலியாகியுள்ளார். ஸ்டெர்லைட்டை மூடுங்கள் என கோஷமிட்ட அந்த மாணவியின் வாயில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது.


வாயில் பாய்ந்த குண்டு கழுத்தில் புகுந்ததால் ரத்த வெள்ளத்தில் அந்த மாணவி சம்பவ இடத்தில் பலியானார். அவரது வாயில் இருந்து கடைசியாக வெளி வந்த வார்த்தைகள், "எங்களை அழிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடு" என்பதுதான். ஆனால், இதை சொன்ன அந்த மாணவி அழிக்கப்பட்டுள்ளது பெரும் கொடுமை.

இலங்கையில், தமிழ் இளம் பெண்கள் சிங்கள ராணுவத்தால் கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஈடாக உள்ளது பெண்கள் மீதான இந்த தாக்குதல் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

Read More

April 16, 2018

காவல்துறையினரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை
by admin - 0

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:-

காவலர்களைத் தாக்கியவர்கள் நாம் தமிழர் கட்சியினர் இல்லை. காவலர்களைத் தாக்கியது தவறு; போராடுபவர்களை காவலர்கள் தாக்குவதும் தவறு. தமிழகம் முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்படுகின்றனர்.

நாம் தமிழர் கட்சி வன்முறை கட்சி அல்ல; போலீசாரை தாக்குவதற்குத்தான் நாங்கள் கட்சி நடத்திக் கொண்டுருக்கிறோமா?. காவிரிக்காக ஐபிஎல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினோம். போராட்டத்தில் திடீர் தாக்குதல் ஏற்பட்ட போது, நான் தாக்கியதாக திட்டமிட்டு கொலை முயற்சி செய்கிறோம் என்ற பொய் வழக்கு போடப்பட்டது.

 யார் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பதை காவல்துறை தான் கண்டறிந்து நடவடிக்கை  வேண்டும். ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை.  நாம் தமிழர் கட்சியினரை போலீசார் மிரட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்  நாம் தமிழர் கட்சியினரை குற்றவாளிகளாக்குவது தவறானது. போராட்டத்தின் போது போலீசை தாக்கியது யார் என்றே தெரியவில்லை.

காவிரிமேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொண்டர்களை கைது செயய்வேண்டாம் என்னை வேண்டுமானால் கைது செய்யுங்கள். காவல்துறைக்கு எதிரான கட்சி போல, நாம் தமிழர் கட்சி மீது குற்றம்சாட்டுவது தவறு. ஐபிஎல் போட்டியின்போது, ரசிகர்கள் மற்றும் காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தவறானது”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Read More

March 09, 2018

பெண்ணிற்கு விருப்பம் இல்லையென்றால் கொல்லத்துணிவது சரியா?... திருந்த வேண்டியது யார்?
by admin - 0

பெண்ணிற்கு விருப்பம் இல்லையென்று தெரிந்ததும் தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணம் வளரக் காரணம் யார்? இளைஞர்களின் இந்த மன நிலை மாற செய்ய வேண்டியது என்ன?

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்கதையாகி வருகின்றன. நுங்கம்பாக்கத்தில் காலையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பெண் மென்பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையானது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுமட்டுமின்றி சமீப காலமாகவே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிலும் காதல் என்ற போர்வையில் அரங்கேறும் கொடுமைகள் சொல்லி மாளாதவையாக இருக்கின்றன. பள்ளி மாணவி, கல்லூரி மாணவி, திருமணம் முடிந்த பெண் என யாராக இருந்தாலும் இதே நிலை தான்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் சென்னை ஆதம்பாக்கத்தில் பணிக்கு சென்ற 30 வயது பெண் யமுனா தான் வேலை பார்த்த பரிசோதனை மைய உரிமையாளரால் ஸ்பிரிட் ஊற்றி எரிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 5 நாள் போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்தார். உயிரிழந்த யமுனாவிற்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது

மதுரையில் 9ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த பாலமுருகன் என்ற இளைஞன், மாணவி மறுப்பு சொன்னதால் பள்ளி வாசலில் வைத்தே அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தான். இந்த சம்பவத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவி ஒரு வாரத்தில் உயிரிழந்தார்.

சென்னையில் பட்டபகலில் நடந்த கொலை இன்று சென்னை கே.கே. நகரில் பட்டபகலில் கல்லூரி வாசலில் வைத்து காதலை ஏற்காத பெண் அஸ்வினியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான் அழகேசன். 6 மாதத்திற்கு முன்பு வீடு புகுந்து கட்டாய தாலி கட்டியதில் படிப்பு பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது தான் கல்லூரி திரும்பியுள்ள அஸ்வினி, அழகேசனின் தொந்தரவுகளை வீட்டிற்கு தெரியப்படுத்தவில்லை என்று தெரிகிறது.

அஸ்வினி யாருக்கும் கிடைக்கக் கூடாது தனக்கு கிடைக்காத அஸ்வினி யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று கத்தியுடன் மதுபோதையில் வந்த அழகேசன், அந்த ஒன்றும் அறியா குழந்தை முகமான அஸ்வினியை துணிந்து கழுத்தறுத்து கொன்றிருக்கிறான். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அஸ்வினி அதே இடத்தில் உயிர் பிரிந்துள்ளார்

முற்றிப் போய்க்கொண்டிருக்கும் மனநோய்

 பெண்கள் தங்களது விருப்பத்திற்கு இணங்காவிட்டால் அவர்களை கொன்றுவிட வேண்டும் என்பது சமுதாயத்தில் முற்றிப் போய் கொண்டிருக்கும் மனநோயாக உள்ளது. சினிமாக்களை பார்த்து தனக்கு கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று இளைஞர்கள் வளர்த்துக் கொள்ளும் கொடூரத்தனம் மாற வேண்டும்.

ஆண்கள் என்ற அகம்பாவம் ஆண், பெண் சமம், ஆண் குழந்தைக்கு மட்டும் கேட்டது எல்லாமே கிடைத்து விட வேண்டும் என்ற வளர்ப்பு முறையில் பெற்றோர் மாற்றம் செய்தாலே பாதி பிரச்னை தீர்ந்துவிடும். தான் தான் மேல் என்ற எண்ணத்தில் இருக்கும் ஆண் தன்னை ஒரு பெண் நிராகரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் எந்த எல்லைக்கும் போகலாம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே சமீபத்திய சம்பவங்களே இதற்கு சான்றாக இருக்கின்றன.

மனம் விட்டு பேச வேண்டும் 

ஆண் மனிதத்தன்மையில்லாதவன் என்ற சூழலுக்கு தள்ளியதற்கு பெற்றோருக்கும் இந்த சமுதாயத்திற்கும் மிகப்பெரிய பங்கு உள்ளது. பெண்பிள்ளைகளை மட்டும் சரியாக வளர்த்தால் போதாது ஆண்களுக்கும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பிரச்னைகளை சரியாக அணுகும் விதத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். சிறு பிள்ளைகளாக இருந்தாலும் வளர்ந்துவிட்ட இளைஞர்களானாலும் அவர்களுடன் நட்புடன் பழகி அவர்களின் மனநிலையை எப்போது கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை

-oneindia-


Read More

January 20, 2018

ஆண்டாள் சர்ச்சை | கவிஞர் வைரமுத்து உருக்கமான விளக்கம்
by admin - 0

ஆண்டாள் சர்ச்சை | கவிஞர் வைரமுத்து உருக்கமான விளக்கம்சென்னை: செய்யாத தப்புக்காக இல்லாத சொல்லுக்காக பொல்லாத பழியேற்றுள்ளேன் என வைரமுத்து உருக்கமாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.



கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையாக்கப்பட்டது. வைரமுத்துக்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தினர்.

அவருக்கு எதிராக பல்வேறு காவல்நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. இதனை எதிர்த்து வைரமுத்து தொடர்ந்து வழக்கில் அவருக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற அனைத்து வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடைவிதித்தது.


  • வைரமுத்து விளக்கம்

    இந்நிலையில் தன் மீதான ஆண்டாள் பற்றிய சர்ச்சைக் குறித்து கவிஞர் வைரமுத்து விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் உருக்கமாக பேசிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

  • மனம் உடைக்கப்பட்டிருக்கிறது

    அதில் கடந்த 10 நாட்களாக தன்னுள் ஒலித்துக்கொண்டிருந்த தமிழ்க்குயில் மூச்சையுற்று கிடப்பதாக தெரிவித்துள்ளார். தனது மனம் உடைக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

  • புகழ்பாட நினைத்தது தவறா?

    ஆண்டாள் பற்றி நான் ஆராய்ச்சி செய்தது தவறா?ஆண்டாள் பிறந்த ஊரில் அவர் புகழ்பாட நினைத்தது தவறா? ஆண்டாள் குறித்து கட்டுரை எழுத நினைத்தது தவறா? என்றும் வைரமுத்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

  • முதல் பெண் விடுதலை குரல்

    திருவள்ளுவர், கம்பர், அப்பர், திருமூலர் உள்ளிட்டோர் குறித்தும் கட்டுரை எழுதியிருக்கிறேன் என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார். தமிழ்வெளியில் எழுந்த முதல் பெண் விடுதலை குரல் ஆண்டாளுடையது என்றும் அவர் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

  • பேராசிரியர்களின் கட்டுரை

    ஆண்டாள் குறித்து 3 மாதங்களாக ஆராய்ச்சி செய்தேன் என்றும் வைரமுத்து கூறினார். ஆண்டாள் தேவதாசி என பேராசிரியர் நாராயணன், கேசவன் ஆகிய 2 பேரின் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது என்பதைதான் மேற்கோள் காட்டினேன் என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

  • உயர்ந்தகுல பெண்களுக்கே..

    எனது கருத்தாக கூறவில்லை, உயர்ந்தகுல பெண்களுக்கே தேவதாசிகளாக இருக்க உரிமை வழங்கப்படும் என்று உயர்வாகதான் பேசினேன். எனது விருப்பப்படி பெருமாளைதான் திருமணம் செய்துகொள்வேன் என்று உறுதியாக இருந்தவர் ஆண்டாள் என்று பெருமைப்படுத்திதான் கூறினேன் என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

  • களங்கம் ஏற்படுத்துவேனா?

    ஆண்டாள் குறித்து எத்தனையோ மேற்கோள்களை காட்டினேன் என்றும் வைரமுத்து தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். ஆண்டாளுக்கு களங்கம் ஏற்படுத்த நினைத்திருந்தால் அவர் பிறந்த ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு சென்றிருப்பேனா என்றும் வைரமுத்து கேள்வி எழுப்பினார்.

  • இழிவுபடுத்திவிட்டனர்

    ஆண்டாளையும் , என் தாயையும் ஒன்றாக பார்ப்பவன் நான் என்றும் வைரமுத்து கூறியுள்ளார். ஆண்டாள் தன்னுடைய தாய் என்றும், ஆண்டாள் தமிழச்சி என்றும் வைரமுத்து புகழாரம் சூட்டினார். ஆண்டாள் குறித்து உயர்வாக சொன்னதை தாழ்வாக சித்தரித்து இழிவுபடுத்திவிட்டனர் என்றும் வைரமுத்து வேதனையுடன் தெரிவித்தார்.

  • பொல்லாத பழியேற்றுள்ளேன்..

    தனக்கு தமிழ்ப்பால் ஊட்டிய தாய் ஆண்டாளை தான் சிறுமைப்படுத்துவேனா என்ற அவர் தன்னை தமிழ் சமூகம் சந்தேகப்படலாமா என்றும் உருக்கமாக கேட்டுள்ளார் வைரமுத்து. செய்யாத தப்புக்காக, இல்லாத சொல்லுக்காக பொல்லாத பழியேற்றுள்ளேன் என்றும் வைரமுத்து தெரிவித்தார்.

  • ஆண்டாள் விவகாரத்தில் கலவரம்

    யாரோ மதம் கலந்த அரசியலுக்காகவோ; அரசியல் கலந்த மதத்திற்காகவோ தனது கருத்தை திரித்து விட்டனர் என்றும் வைரமுத்து கூறினார். ஆண்டாள் விவகாரத்தில் மத இன கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

  • வருத்தம் தெரிவித்த பின்னரும்

    புதிய தலைமுறையினரும், இளைய தலைமுறையினரும் பயன் பெறவே கட்டுரை எழுதினேன் என்றும் அவர் தெரிவித்தார். என் தமிழுக்காக மனிதாபிமானத்துடன் தான் வருத்தம் தெரிவித்ததாகவும் ஆனாலும் அதன் பிறகும் தன்பேசியது குறித்து திரித்து கூறுகிறார்கள் என்றும் வைரமுத்து கூறினார்.

Read More

December 24, 2017

கட்சியும், ஆட்சியும் தினகரனிடம் செல்கிறதா?
by admin - 0

அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட நாள் முதல் தினகரன் ‘சிலீப்பர் செல்’ என்கிற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தி வந்தார். அ.தி.மு.க.வில் எனக்கு ஆதரவாக பல எம்.எல்.ஏ.க்கள் சிலீப்பர் செல்களாக உள்ளனர். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் என் பக்கம் வருவார்கள் என்று கூறி இருந்தார்.




ஆர்.கே.நகர் தேர்தலில் நான் வெற்றிபெற்று சட்ட சபைக்குள் செல்வேன். அப்போது ‘சிலீப்பர் செல்’ எம்.எல்.ஏ.க்கள் என்னை ஆதரிப்பாளர்கள் என்றும் கூறி இருந்தார். இதனால் ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பின்னர் தமிழக அரசியல் களத்தில் அதிரடி மாற்றம் நிகழுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றார். இதையடுத்து அவரை அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிலர் சந்திக்க உள்ளனர்.

மூத்த அமைச்சர்கள் சிலரை தவிர மற்ற அமைச்சர்களும், எம்எல்ஏக்கள் அனைவரும் தினகரனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தப்படி இருக்கிறார்கள். இவர்களில் பலர் இன்று தினகரனை இரவு நேரில் சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளனர். கட்சியும், ஆட்சியும் தினகரன் பக்கம் செல்வதற்கு வாய்ப்பு அதிகரித்திருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
Read More

December 20, 2017

ஜெ.சிகிச்சை வீடியோ - டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் வெளியீட்டார்!
by admin - 0

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுத்த வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் புதன்கிழமை காலை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஜெயலலிதா படுக்கையில் அமர்ந்தபடி பழச்சாறு அருந்துவது போன்ற பதிவு இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ, 20 வினாடிகள் ஓடும் வகையில் உள்ளது.




Read More

November 23, 2017

அதிமுக, கொடி, இரட்டை இலை எல்லாமே எடப்பாடி அணிக்கே - தேர்தல் ஆணையம் அதிரடி
by admin - 0

ஒருங்கிணைந்த அணிகளான ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்புக்கு அதிமுகவின் கட்சி, கொடி, இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. டி.டி.வி தினகரன் அணியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.


பிப்ரவரி மாதம் அதிமுக பிளவுபட்டது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டன. ஏப்ரல் மாதம் நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது இரு அணிகளும் சின்னத்திற்கு போட்டி போடவே தேர்தல் ஆணையம் முடக்கியது.


இதனையடுத்து இரு அணிகளும் தேர்தல் ஆணையத்தின் கதவுகளை தட்டின. இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அணியும், ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியும் இணைந்தன. டிடிவி தினகரன் தனி அணியாக செயல்பட்டு வந்தார்.

இரட்டை இலைக்கு மோதிய அணிகள்

அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை யாருக்கு என்பதில் ஒருங்கிணைந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளும், டிடிவி தினகரன் அணிகளும் முட்டி மோதின. கடந்த அக்டோபர் 6ஆம் தேதி முதல் இந்த வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது.

7 கட்டமாக நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.இரு அணிகளும் எழுத்துப்பூர்வ இறுதி வாதங்களை கடந்த 13ஆம் தேதியன்று தாக்கல் செய்தன. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு எந்த நேரத்திலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இன்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது.

அரசியல் கட்சியினர் எதிர்பார்த்தது போல இரட்டை இலை சின்னம் ஒருங்கிணைந்த ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிக்கே என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து கட்சி, கொடி ஆகியவற்றினை முதல்வர் தலைமையிலான அணியே பயன்படுத்தும். டிடிவி தினகரனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

Read More

November 18, 2017

2004 சுனாமி வரும் என்று சென்னவர் மீண்டும் சுனாமி வரும் என அறிவிப்பு -பீதியில் மக்கள்
by admin - 0

இந்தோனேஷியாவில் அதிகளவில் திமிங்கலங்கள் கடற்கரை நெருங்கி வருவதாகவும், மேலும் மலேசியா பினாங்கு கடற்கரை மீனவர்கள் வலையில் வழக்கத்திற்கு மாறாக பல டன் மீன்கள் கடலில் சிறு பகுதியிலேயே கிடைப்பதாகவும் செய்திகள் வருகின்றன.


இவை கடலில் ஏதோ ஒரு இயற்கை பேரிடருக்கான எச்சரிக்கையாக இருக்கலாம், மேலும் இலங்கையில் கடல் உள்வாங்கி இருப்பதாக கூறுகின்றனர்.

இதற்கு முன்னதாக கடந்த சில மாதங்களாக வதந்தி என்று சொல்லி, மீண்டும் சுனாமி 2017, டிசம்பர் 31க்குள் வருவதாக ஒரு தகவல் வெளியானது.

அதில் சரியான தேதி மட்டும் குறிப்பிடப்பட வில்லை. ஆனால் இந்தமுறை முன்பை விட “பலமடங்கு” அளவில் பெரியது என்பது தான் அதிகாரப் பூர்வமான தகவலாக இருந்தது.


11 நாடுகளை கடுமையாக பாதிக்கக் கூடியதாக இருக்கும் என்றும, இந்தமுறை சுனாமி ஆக்ரோஷமாக ஆரம்பிப்பதே இந்தியப்பெருங்கடலில் இருந்து தான் என்றும் கூறப்பட்டது.

இந்த தகவலைத் தெரிவித்தவர் Thiruvandrum Forest Wala, Tamilnadu Border, B.K.Research Association – Director Mr.BabuKalayil, என்பவர்.

இவர்தான் 2004-லும் சுனாமி வருவதற்கு முன்பாகவே தகவல் தெரிவித்தவர். அப்போது இந்தியாவே அறிந்திராத சுனாமி என்பதால் யாரும் கவனம் கொள்ளவில்லை.ஆனால் சுனாமிக்குப் பின்னரே இவர், முன் அறிவிப்பு கொடுத்தற்காக பாராட்டுப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.



இவர்தான் தற்போது “வருமுன் காப்பதே சிறந்தது” என்பதற்காக இந்த தகவலைத் தெரிவித்ததுடன்,

இரு மாநில முதல்வர்களுக்கும் கடந்த 20.09.2017 அன்றே அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தி உள்ளார்.

இந்த தகவலின் உண்மை தன்மை இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இருந்த போதிலும் பேரிடர் மேலாண்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால், தாங்களாகவே தற்காத்து கொள்ளும் திறனாவது மக்களிடையே வளரும்.

இயற்கை சீற்றத்தை மனிதனால் தடுக்க முடியாது. ஆனால் தகுந்த முன்னறிவிப்பு இருந்தால் நிச்சயம் தற்காத்துக் கொள்ள முடியும்.

Read More

October 23, 2017

அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – சிவகரனுக்கு புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை!
by admin - 0

அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – சிவகரனுக்கு புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை!

 


அரசாங்கத்துக்கெதிரான பிரச்சாரன நடவடிக்கைகளையோ அல்லதுஅசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையிலோ பிரச்சாரங்களை மேற்கொண்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரனை விசாரணைக்கு வருகை தருமாறு கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவர் நேற்று விசாரணைக்காக சென்றிருந்த பின்பு இன்று ஊடகவியலாளர்களைச் சந்திக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் மாவீரர் தினம் நடாத்தியதற்கும், மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு நிகழ்வு கொண்டாடியமை தொடர்பாகவும் கேள்விகள் கேட்கப்பட்டது.

அத்துடன் விடுதலைப்புலிகளின் கருத்தியல் போக்கை வலப்படுத்துகின்ற விதமாகவும் பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாகவும் தொடர்ச்சியான செயற்பாடுகளும், கருத்துத் தெருவிப்புக்களும் என்னால் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.

காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் வேண்டுகையின் பிரகாரமே தன்னிடம் விசாரணை நடத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்திருந்த நிலையில், நான் அவர்களிடம் ‘முள்ளிவாய்க்கால் மற்றும் மாவீரர் தினங்களை விடுதலைப்புலிகளின் அடையாளங்கள் தவிர்க்கப்பட்டு நினைவுகூரப்படலாம் என காவல்துறைமா அதிபர் உட்பட அரசாங்கமே அறிவித்திருந்தது எனக் கேட்டேன். அவர்கள் இதற்கு எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை.

வேண்டுமென்றே எனது செயற்பாட்டையும், சிவில் சமூகங்களினுடைய செயற்பாடுகளையும் முடக்கும் விதமாக எனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்றே நான் கருதுகின்றேன் எனவும் தெரிவித்தார். அத்துடன் தொடர்ச்சியாக நான் செயற்பட்டால் என்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
Read More

September 23, 2017

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிசிச்சை CCTV வெளியிட தயார் -சசிகலா தரப்பு
by admin - 0

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகளை சசிகலா அனுமதியுடன் வெளியிடுவோம் என்று டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

ஜெயலலிதா

குடகில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் கூறியதாவது : ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஆளுநர் பார்த்துவிட்டு போய் அறிக்கை கொடுத்தார்.

அப்பலோ மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், வெளிநாட்டு டாக்டர்கள் என்று பலரும் பார்த்துவிட்டு சென்றனர்.

  • சசிகலாவே பார்க்கலையே

    அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார், அக்டோபர் 1ம் தேதிக்குப் பின்னர் எனது சித்தியைக் கூட மருத்துவர்கள் பார்க்க அனுமதிக்கவில்லை.

  • 10 நிமிடம்தான் அனுமதி

    நோய் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக அவர்கள் அனுமதிக்கவில்லை, எப்போதாவது 10 நிமிடம் நேரம் கொடுப்பார்கள் அப்போது மட்டும் பார்த்துவிட்டு வந்தார்.

  • எங்களுக்கு பயமில்லையே

    சிபிஐ விசாரணைக்குக் கூட உத்தவிடட்டும் எங்களுக்கு பயமில்லை. பதவி போன பிறகு எதிர்த்த ஓ.பன்னீர்செல்வம், அன்று முதல்வர் பதவி கொடுத்த போது வேண்டாம் என்று சொல்லிவிட்டு எதிர்த்திருக்க வேண்டியது தானே.

  • சிசிடிவி காட்சி

    ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எடுத்த சிசிடிவி காட்சிகள் உள்ளன. சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு அவருடைய அனுமதியைப் பெற்று அந்தக் காட்சிகளை வெளியிடுவது பற்றி முடிவு செய்வோம் என்றார்.

Read More

September 20, 2017

ஒரே பள்ளியில் 'புளுவேல்' விளையாடிய 20 மாணவர்கள் மீட்பு
by admin - 0

கைபேசிகளில் ’புளுவேல்’ எனப்படும் நீல திமிங்கல விளையாட்டு இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பரவி வருகிறது.  இந்த விளையாட்டின் நிபந்தனைகள் இறுதியில் தற்கொலையை தூண்டுவதாக உள்ளதாக கூறி இதற்கு மத்திய அரசு தடை விதித் துள்ளது. புளுவேல்’ விளையாட்டை பரப்பும் இணைய தளத்தை முடக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெலகாவியில் மாணவர்கள் ’புளுவேல்’ விளையாட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பெலகாவி நகரில் மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திர வித்யாலயா பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு 9-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் கையில் நீல திமிங்கலம் போல் ரத்தக் கீறல்கள் காணப்பட்டன. 


உடனே அந்த மாணவர்களை ஆசிரியர்கள் மீட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கைகளில் இருந்தது, கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயம் என தெரிவித்தனர். ஆனால் திமிங்கலம் போல் காணப்பட்டதால் மாணவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

14 மாணவர்கள் மற்றும் மாணவிகள்  என மொத்தம் 20 பேர் கைகளில் இது போன்ற கீறல்கள் காணப்பட்டது. அவர்களை மீட்ட ஆசிரியர்கள் கவுன்சிலிங் நடத்தி புளுவேல் விளையாட்டின் ஆபத்து பற்றி எடுத்துக்கூறினார்கள். அதை மாணவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

இந்த பள்ளியில் மொத்தம் 3000 மாணவர்கள் படிக்கிறார்கள். மற்ற மாணவர்களையும் புளுவேல் விளையாட்டில் ஈடுபடக்கூடாது என்று விழிப்புணர்வூட்டுமாறு கூறி அனைத்து துறை ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இது போல் கல்வி அதிகாரிகளுக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் இது போன்ற சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
Read More