Latest News
Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

November 27, 2020

எரிமலைச் சாம்பலில் கிடைத்த ரோமப் பேரரசின் ஆண்டான் - அடிமை உடல்கள்
by Editor - 0


ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய ரோமப் பேரரசின் பாம்பேய் நகரத்தை அழித்த, எரிமலைச் சீற்றத்தில் இறந்த, இரண்டு மனிதர்களின் எச்சங்களை இத்தாலியிலுள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதில் ஒருவர், அநேகமாக உயர்ந்த அந்தஸ்த்தைக் கொண்டிருந்தவராக இருக்கலாம் என்றும் மற்றவர் அவரது அடிமையாக இருக்கலாம் என்றும் பாம்பேய் தொல்பொருள் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் எரிமலை வெடித்துச் சிதறியபோது தஞ்சமடைய இடம் தேடி இருக்கலாம். அப்போது, எரிமலைக் குழம்பால் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என பாம்பேய் தொல்பொருள் பூங்காவின் இயக்குநர் மாசிமோ ஒசன்னா கூறுகிறார்.


Read More

October 03, 2020

கெஹலிய ரம்புக்வெல பதிலடி கொடுத்த ஊடகவியலாளர்
by Editor - 0


திலீபன் உன்னதமான தியாகி.தமிழ் மக்களிற்கு நீதி கோரியே அவர் உண்ணாவிரதமிருந்தார்.அவரை சாதாரண போதைபொருள் வியாபாரியுடன் ஒப்பிட்டதை கண்டித்துள்ளனர் யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்கள்.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான தியாக தீபம் திலீபனை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாதென, வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் கெஹலிய, யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே, கேள்வியொன்றிற்கு இவ்வாறு தெரிவித்திருந்தார்.

பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை நினைவு கூருவது நிரந்தர சமாதானத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துமெனவும் ஆகையால் அத்தகைய நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் கூறினார்.

'தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது தடைசெய்யப்பட்ட பங்கரவாத அமைப்பாகவே இருக்கின்றது. அவ்வாறு தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பின் உறுப்பினரை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாது. அதனடிப்படையிலையே தீலிபனை நினைவு கூருவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.


'மேலும் ஒசாமா பில்லேடன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் கொல்லப்பட்டிருக்கின்றார். அவருக்கு அமெரிக்காவில் சிலை வைக்க முடியாது. அது போலவே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராகவே திலீபனும் காணப்படுகின்றார். ஆகையினால் அவருக்கு சிலை வைக்கவோ, நினைவு கூரவோ முடியாது.

'இதேவேளை, இன்று திலீபனுக்கு நினைவேந்தல் என்றும் இது போல இன்று ஒருவர் நாளை ஒருவர் என நினைவேந்தல் செய்ய முற்படலாம். அதனாலே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களை நினைவு கூர தடை விதிக்கப்படுகிறது' என்றார்.

இதனையே குடாநாட்டு ஊடகவியலாளர்கள் சார்பில் அவர் முன்னிலையிலேயே எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டமை அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
Read More

September 20, 2018

உண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா?
by admin - 0

'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா? ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்லாமிய சட்டத்திட்டத்தின் படி ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். பலரும் ஹலால் என்றால் சுத்தம் என்று நினைக்கிறோம். ஆனால் அது தான் தவறு. ஹலால் என்பதன் உண்மையான அர்த்தமே வேறு.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஹலால் என்பது உணவுக்காக கொல்லப்படும் விலங்குகளின் கொல்லும் முறையைக் குறிக்கும். அந்த முறையின் படி உண்ணும் விலங்குகள் கொல்லப்பட்டால் மட்டுமே இஸ்லாமியர்கள் அந்த இறைச்சியை உண்பார்கள். புரியவில்லையா? சரி, இதனைப் பற்றி விரிவாக காண்போம் வாருங்கள்.

என்ன நன்மை?

ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும் போது, கால்நடைகளில் உடலில் உள்ள அனைத்து ரத்தமும் வெளியேற்றப்படும். இதனால் இரத்தத்தின் மூலம் நோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்படும்.

கூர்மையான கத்தி

ஹலால் முறையில் அறுக்கப் பயன்படும் கத்தி மிகவும் கூர்மையாக இருக்க வேண்டும். மேலும் அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது குறைவான வலியை உணருமாறு மிகவும் வேகமாக அறுக்க வேண்டும்.

நரம்பு மண்டலம் அறுபடக்கூடாது ஹலால் முறையில் வெட்டும் போது கால்நடைகளின் மூச்சுக்குழாயும், இரத்தக்குழாயும் ஒரே நேரத்தில் அறுக்கப்பட்டு உயிரிழக்கச் செய்ய வேண்டும். முக்கியமாக இப்படி செய்யும் போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் வெட்டப்படாமல் இருக்க வேண்டும்.

தண்டுவடம் அறுபடக்கூடாது 

ஹலால் முறையில் வெட்டும் போது, கால்நடைகளின் தண்டுவடம் துண்டிக்கப்படால் இருக்க வேண்டும். ஏனெனில் தண்டுவடம் துண்டிக்கப்பட்டால், இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்கள் பாதிப்பிற்குள்ளாகி இதயத்தின் செயல்பாடு நின்று போகும் நிலை ஏற்படும். இப்படி இதயம் நின்றுபோனால், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைப்பட்டு அங்கேயே தங்கிவிடக்கூடும்.


இரத்தம் வெளியேற்றப்படவும் 

பொதுவாக உடலில் கிருமிகள் உருவாதற்கு காரணம் இரத்தம் தான். ஆனால் ஹலால் முறையில் இரத்தம் முழுவதும் வெளியேற்றப்படுவதால், கால்நடைகளின் மூலம் எவ்வித கிருமிகளும் உடலினுள் நுழையாது.

விரைவில் கெட்டுப் போகாது 

ஹலால் முறையில் கால்நடைகளை வெட்டுவதால், இறைச்சி விரைவில் கெட்டுப் போகாமல், நீண்ட நேரம் இருக்கும். இதற்கு காரணம், வெட்டும் போது கால்நடைகளின் இரத்தம் இறைச்சியில் கலந்துவிடாமல் இருப்பது தான்.

கால்நடைகளுக்கு வலி ஏற்படுவதில்லை 

சாதாரணமாக கால்நடைகளைக் கொல்லும் போது அவைகளுக்கு மிகுந்த வலி ஏற்படும். ஆனால் ஹலால் முறையில் வெட்டும் போது, வலியை உணர வைக்கும் நரம்பு முதலில் வெட்டப்படுவதால், அவை வலியை உணர்வதில்லை

வெட்டும் போது கால்நடைகள் ஏன் துடிக்கிறது? 

ஹலால் முறையில் வெட்டும் போதும் கால்நடைகள் துடிப்பதற்கு காரணம், வலி அல்ல. உடலில் இருந்து அனைத்து இரத்தமும் வெளியேற்றப்படுவதால், தசைகள் சுருங்கும் போது, கால்நடைகள் துடிப்பது போன்றும், துள்ளுவது போன்றும் நமக்கும் தெரிகிறது.


ஆய்விலும் உறுதி 

இதனை உறுதி செய்யும் விதமாக மேற்கொண்ட ஆய்வில், ஹலால் முறையில் வெட்டிய கால்நடைகள், மற்ற முறையில் வெட்டப்பட்ட கால்நடைகளை விட மிகக்குறைந்த அளவிலேயே வலியை உணர்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.



Read More

August 05, 2017

யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது
by admin - 0


குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிராவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி வைத்திருந்தது. அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகிலுள்ள பல நாடுகளிலிருந்து வந்த ஆராச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், முழுமையான முடிவுகளைப் பெறமுடியவில்லை.


அன்று, பிற்பகல் 2.30 மணி, 23 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2016 ஆம் ஆண்டு. குடாநாட்டின் வெப்பநிலை 35 பாகை செல்ஸியஸைக் காட்டியது. ஆனால், குடாநாட்டில் மிகவும் ஆழமான பகுதியில், நீருக்கடியில் அதன் வெப்பறிலை 26 பாகை செல்சியஸ் எனப் பதிவாகியது.


ஆம்! அன்றுதான் பல புதிர்களையும் இரகசியங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த நி​லாவரைக் கிணற்றின் ஆழம் அறியப்பட்டது.




இலங்கை கடற்படையின் சுழியோடிகள், ரோபோக்களின் உதவியுடன் நிலாவரைக் கிணற்றின் ஆழத்தை அறியும் வண்ணம், சகல நவீன பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றியவாறு கிணற்றுக்குள் இறங்கினார்கள்.

கிணற்றுக்குள் 55.5 மீற்றர் (182 அடி)​ சென்றபோது, கீழ்மட்டம் தென்பட்டது. நன்றாக வளர்ந்த பனை அல்லது தென்னை மரம் சராசரியாக 90 அடி உயரம் வரை காணப்படும். அப்படிப் பார்த்தால், சராசியாக இரண்டு பனை அல்லது தென்னை மரங்களின் உயரம் கொண்டதாக இந்தக் கிணற்றின் ஆழம் காணப்படுகின்றது.

கிணற்றின் அடிப்பாகத்தில் மூன்று மாட்டு வண்டிகள் காணப்படுகின்றன என்பது சுழியோடிகள் கொண்டுசென்று ரோபோக்கள் எடுத்த படங்களின் மூலம் தெரியவந்தது. ஒரு வண்டில் முற்றாகச் சிதைவடைந்த நிலையிலும் மற்றையவை மாட்டு வண்டிகள் என உருவத்தை அடையாளம் காணக்கூடியவாறும்  காணப்படுகிறது. இந்த மாட்டு வண்டிகள் கிணற்றுக்குள் எவ்வாறு வந்தன அல்லது விழுந்தன என்பது தொடர்பில் எதுவித தகவல்களும் கிடையாது. வண்டில்களின் நிலையை வைத்துப் பார்க்கும்போது, இந்தச் சம்பவம், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கலாம் என அனுமானிக்க முடிகிறது.

ரோபோக்கள் செய்த ஆய்வில், கிணற்றின் ஆழமான இடங்களில் பல திசைகள் நோக்கி, குகைகள் போன்று பல சுரங்க வழிகள் காணப்படுகின்றன. இவற்றில் சில இடங்களில் வேகமானதும் சில இடங்களில் சாதாரணமானதுமான நீரோட்டங்கள் காணப்படுகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.

நிலாவரைக் கிணற்றுக்குள் எலுமிச்சம்பழத்தைப் போட்டால், அதை சில மணிநேரத்தின் பின்னர், கீரிமலைத் தீர்த்தக் கேணியில் எடுக்கலாம் என சிறுவயதில் கேள்விப்பட்டதுண்டு. அதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதை ரோபோக்களின் ஆய்வுகள் நிரூபணம் செய்கின்றன. ஏனெனில், கிணற்றில் இருந்து, பல திசை நோக்கிச் செல்லும் சுரங்கப்பாதைகளின் ஊடான நீரோட்டங்கள் காணப்படுகின்றன. கீரிமலைக் கேணியின் தென்கீழ் மூலையில், ஒருவர் உள்ளே நுழைந்து செல்லக்கூடிய அளவுக்கு குகை ஒன்று காணப்படுவதை இப்பொழுதும் பார்க்கமுடியும். அதனூடாகவே கேணிக்கு நல்ல தண்ணீர் வருகின்றது. இந்தக் குகைக்கும் நிலாவரைக் கிணற்றில் ரோபோக்கள் உறுதிப்படுத்திய குகைக்கும் இடையிலான நீரோட்டத்தொடர்பு இருப்பதை உய்ந்தறிய முடிகிறது.

நிலாவரைக் கிணற்றுக்கு நேரடியான நிலத்தடி நீர் தொடர்பு இருப்பதனால் வரட்சின்போதும் மழைக்காலத்தின்போதும் நீர் மட்டம் குறைவதோ கூடுவதோ கிடையாது.

இலங்கையின் வடபகுதியின் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைத்தோற்ற அமைப்பே நிலத்தடியில் காணப்படும் குகைகளுக்கான காரணமாகும். இதுகுறித்து பேராசிரியர் சிவச்சந்திரனின் ‘ நிலாவரைக் கிணறு ஜீவநதியா’ என்கிற தனது கட்டுரையில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

‘யாழ்ப்பாணக் குடாநாடு உட்பட, மன்னாரிலிருந்து பரந்தன் முல்லைத்தீவை இணைக்கும் கோட்டுக்கு வடக்காக உள்ள பிரதேசங்கள் யாவும் மயோசின் காலம் என்று புவிச்சரிதவியலாளர்களால் வழங்கப்படுகின்றது. சுண்ணக்கற்பாறைகள் உருவான காலத்தில் இவை தோன்றியவையாகும். அக்காலத்தில் இப் பிரதேசங்கள் கடலிலிருந்து மேலுயர்த்தப்பட்டன. இதனாலேயேதான் யாழ்ப்பாணப் பகுதிகளில் கிணறு தோண்டும்போது, சங்கு, சிப்பி போன்ற கடல் வாழ் உயிரினங்களின் சுவடுகளைக் காணக்கூடியதாக உள்ளது.

இக்கடல் உயிரினச்சுவடுகள் நீண்ட காலமாக இடம்பெற்ற அமுக்கத்தாலும் பௌதிக இரசாயன மாற்றங்களினாலும் சுண்ணப்பாறைகளாக உருமாற்றம் பெற்றன. சுண்ணப் பாறைகள் வன்னிப்பிரதேசத்தில் மிக ஆழத்திலும் யாழ்ப்பாணத்தின் வடகரைப்பகுதிகளில் குறிப்பாக பலாலி, தெல்லிப்பழை, காங்கேசன்துறைப் பகுதிகளில் மேற்பரப்பிலும் காணப்படுகின்றன. இப்பாறைப்படைக்கு மேல் மண் படிவுகள் சில அடி முதல் 30 அடி வரையான கன பரிமாணத்தில் படிந்துள்ளன. ஓர் அங்குல மண் படிவு உருவாவதற்கு குறைந்தது 100 வருடங்கள் செல்லும் என புவிச்சரிதவியலாளர்கள் கணிப்பிட்டுள்ளனர்.

ஒழுங்குமுறையற்று குடாநாட்டு மண் வளத்தை சுரண்டுவோர் இதைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுண்ணக்கற்பாறை அடிப்படைப் பாறையாக அமைந்திருப்பதனாலேயே இங்கு நாம் தரைக்குக்கீழ் இருந்து கிணறுகள் மூலம் நீரைப்பெற முடிகின்றது. இங்கு ஆதிகாலம் முதல் குடியிருப்புகள் தோன்றுவதற்கும் வரண்ட பிரதேசமாக இருப்பினும் நெருக்கமாக மக்கள் வாழ்வதற்கும் நீர் இறைப்பை நம்பிய விவசாய நடவடிக்கைகள் மேலோங்கியிருப்பதற்கும் இங்கு தரைக்கீழ் நீரை இலகுவில் பெறக்கூடியதாய் இருந்தமையே காரணமாகும்.

புவிச்சரிதவியலாளரால் குடாநாட்டில் சுண்ணக்கற்பாறை தரையின் கீழ் நீரோடும் குகைகள் அடையானம் காணப்பட்டுள்ளன. மழையால் பெறப்படும் நீர், நிலத்துக்குள் ஊடுருவிச்சென்று, கடினமான அடித்தள சுண்ணக்கற்பாறைப் படைகளில் தங்கி நின்று, தரைக்கீழ் நீராகக் காணப்படுகின்றது. கிணறு தோண்டும் போது இத்தரைக்கீழ் நீரே ஊற்றாக கிணற்றுக்குள் வந்து தேங்குகின்றது.

இவ்வாறான ஊற்றுக் கண்கள் போன்று, உள்ளே அமைந்துள்ள சிறு துளைகள், தொடர் துளைகள், வெடிப்புகள் என்பன நீண்ட காலமாக இடம்பெறும் இரசாயன அழிதலுக்கு உட்பட்டு, பெரிய குகைகளாக உருமாறி விடுகின்றன. இக்குகைகள் சில அடி முதல் பல மைல் நீளம் வரை ஒரே தொடராகத் தரைக்குக் கீழே அமைந்திருக்கின்றன.

குகை மேலும்மேலும் அரிக்கப்பட, அதன் பரிமாணம் அதிகமாவதால் குகையின் மேற்பரப்பு இடிந்து வீழ்கின்றது. இவ்வாறு உருவான ஒரு குகைப்பள்ளமே நிலாவரைக்கிணறு. இவ்வாறு, மேற்பரப்பு இடிந்து வீழ்ந்ததால் உருவாகிய குகைப்பள்ளங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பகுதிகளில் காணப்படுகின்றன.

குரும்பசிட்டி பேய்க் கிணறு, புன்னாலைக்கட்டுவன் குளக்கிணறு, அல்வாய் மாயக்கை குளம், கரவெட்டி குளக்கிணறு, ஊரணி வற்றாக்கிணறு, கீரிமலைக்கேணி, நல்லூர் யமுனா ஏரி, மானிப்பாய் இடிகுண்டு, ஊரெழுவில் பொக்கணை போன்றவையாகும்.’
நிலாவரைக் கிணற்றுக்குள் 18.3 மீற்றர் (60 அடி) வரையிலுமே நல்ல தண்ணீர் காணப்படுகின்றது. ஆழம் செல்லச்செல்ல நீரில் உப்புத்தன்மையின் செறிவு அதிகரித்துச் செல்வதாக ஏற்கெனவே நடத்திய பல ஆய்வுகளில் அறியவந்தது.

1965 இல் நீர்வள வடிகாலமைப்புச் சபையினர், நிலாவரைக் கிணற்றில் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி, 10 மணித்தியாலங்களில் 30, 000 – 40, 000 கலன் நீர் அக்கிணற்றில் இருந்து இறைக்கப்பட்டது. இதற்கு மேலும், நீர் இறைக்கப்படின் உப்பு நீர் மேலோங்கி வருவது அவதானிக்கப்பட்டு அம்முயற்சி நிறுத்தப்பட்டது. இதற்காக, மட்டக்களப்பிலிருந்து நீராவி இயந்திரம்  தருவிக்கப்பட்டே, அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைக்கீழ் நீர்வளம் உப்பு நீரின் மேல் மிதப்பதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. எனவே, நல்ல நீர் கிடைக்கும் கிணறுகளில் இருந்து அதிகளவு நீரை வெளியேற்றுவோமாயின் அவை உப்பு நீர்க்கிணறுகளாக மாறிவிடும் ஆபத்துக் காணப்படுகிறது. இன்று குடாநாட்டின் பலபகுதிகளில் இந்தநிலைமை உருவாகிவருகிறது.

பெரும்பாலும் மழைக்காலங்களில், குடாநாட்டில் தரைக்குக் கீழாக அமைந்துள்ள சுண்ணக்கற் குகைகள் மூலம், தரைக்கீழ் நீரின் பெரும்பகுதி வீணாகக் கடலைச் சென்றடையும் நிலை பல இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறிப்பாக, கெருடாவில், கீரிமலை போன்ற இடங்களைக் குறிப்பிடலாம். எனவே இவ்வாறான குகைகளின் உள்ளே அணைகளைக் கட்டி, அல்லது நன்னீர் தேக்கங்களை ஏற்படுத்தி, நிலத்தடி நீர் கடலினுள் செல்வதைத் தடைசெய்தல் வேண்டும். யாழ்ப்பாணக்குடாநாட்டின் வளமும் வாழ்வும் இத்தரைக்கீழ் நீர் வளத்தின் கொள்ளளவை அதிகரிப்பதிலேயே பெரிதும் தங்கியுள்ளது.

கி. பி 1824 இல், சேர் எட்வேட்பான்ஸ் எனும் தேசாதிபதியின் கட்டளைப்படி, யாழ்ப்பாண உதவிக ஆளுநராக சேர் டைக் என்பவர் நியமிக்கப்பட்டார்.

 யாழ்பாணத்தின் அபிவிருத்திக்காக தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்து, பல வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். இவரை, மக்கள் ‘யாழ்பாண ராசா’  என செல்லமாக அழைத்தார்களாம்.  டைக், பதவியேற்ற 1824 இல் அந்த வருடமே நிலாவரைக் கிணற்றை மையப்படுத்திய நீர்பாசனத் திட்டம் பற்றி அவர் திட்டம் வகுத்ததாக ஆங்கிலேயரின் யாழ்ப்பாண நிர்வாகக் குறிப்புகளில் காணக் கிடைக்கிறது.

இன்றும் நிலாவரைக் கிணற்றுக்கு மேற்குப்புறமாக உள்ள சிறுப்பிட்டி, மேற்குப்புறமாக உள்ள அச்செழு, ஈவினை  கிராமங்கள் உட்பட அருகிலுள்ள நவகிரி, புத்தூர், கலைமதி ஆகிய கிராமங்களுக்கான விவசாய முயற்சிகளுக்கான நீர், நிலாவரைக் கிணற்றிலிருந்தே பெற்றுக்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

  1890 இல் நிலாவரையிலிருந்து யாழ்ப்பாண நகருக்குத் தண்ணீர் கொண்டு செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பின்னர் இந்தத் திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டமையால் அது கைவிடப்பட்டது.

வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, ஜே/ 275 கிராமசேவகர் பிரிவுக்குள் நிலாவரைக்கிணறு அமைந்துள்ளது. யாழ்ப்பாண நகருக்கு வடக்கு திசையில் 16 கிலோமீற்றர் தொலைவில், அச்சுவேலி நோக்கிச் செல்லும் இராசா வீதி, புத்தூர் பருத்தித்துறை நெடுஞ்சாலை சந்திக்கும் சந்தியில் நிலாவரைக்கிணறு அமைந்துள்ளது.

கிணறு அமைந்துள்ள பகுதி தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்துக்குச் சொந்தமானதாகும். இதன் பராமரிப்பு பணிகளை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை மேற்கொள்கின்றது.  இருந்தபோதிலும், நிலாவரைக் கிணற்றின் நீர் வழங்கும் பணிகள், வாராவத்தை குடிநீர் விநியோகத்திட்டம் என்ற பெயரில் தேசிய வடிகாலமைப்பு, குடிநீர் அதிகார சபையால் மேற்கொள்ளப்படுகிறது.

மருது, வேம்பு, வாகை போன்ற விருட்சங்கள் உயர்ந்து, வளர்ந்து சோலையாக நிழல் பரப்பி நிற்பதும் மனதுக்கு இனிமையான அமைதியான சூழலும் நிலாவரைக் கிணற்றின் அதிசயத்துக்கு அப்பால் மக்களை இந்த இடம் தன்பால் இழுக்கின்றது.

2009 ஆம் ஆண்டு போர் ஓய்வுக்கு முன்னர், இந்தக் கிணற்றை பாடசாலை மாணவ மாணவியர் உட்பட, ஒருசில உள்ளூர் வாசிகள் வந்து பார்த்துச் செல்வார்கள். இவர்களை விட, வழிப்போக்கர்களும் விவசாயிகளும் இந்தச் சோலையில் இளைப்பாறிச் செல்வார்கள்.

போர் முடிவுற்ற பின்னர், தென்பகுதி சுற்றுலாப்பயணிகளும் புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களும் குடாநாட்டுக்கு வரும்போது, சென்று பார்க்கும், இளைப்பாறும் முக்கிய சுற்றுலா இடமாக    இப்போது  நிலாவரை கிணற்றை அண்டிய சுற்றாடல் மாறிவிட்டது.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில்  குடாநாட்டு பனை உட்பட்ட உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் குளிர்பானக் கடைகளும் இங்கு வியாபாரத்தில் ஈடுபடுகின்றார்கள்.

நிலாவரைக் கிணற்றுக்கு அருகில் சிவன் கோவில் ஒன்றும் காணப்படுகின்றது. இது மிகவும் புராதனமான சிவாலயமாகும். யாழ்ப்பாண வரலாற்றைக் கூறும் இலக்கிய நூலான தட்சண கைலாய புராணத்தில், இந்த சிவாலயம் குறித்த விவரங்கள் காணப்படுகின்றன. தட்சண கைலாய புராணத்தில் ‘நவசைலேஸ்வரம்’ எனக் குறிப்பிடப்படும் ஆலயம் நிலாவரையில் அமைந்துள்ள சிவன் ஆலயமாகத்தான் இருக்க வேண்டும் என்ற தற்துணிபு பல சமய, வரலாற்று அறிஞர்களிடம் காணப்படுகின்றது.

நிலாவரை தொடர்பான கர்ணபரம்பரைக் கதையும் இராமாயணத்துடன் தொடர்புபட்டதாகக் காணப்படுகிறது. இராமன், சீதையை மீட்பதற்காக இராவணனுடன் போர் புரிவதற்கு, வானரப் படைகளுடன் இலங்கை வந்தபோது, வானரப்படைகளின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தனது அம்பை ஊன்றி, நீர் எடுத்த இடமே இது என்று  அந்த கர்ண பரம்பரைக்கதை கூறுகிறது.

எது எவ்வாறாயினும், நிலாவரைக் கிணறு, குடாநாட்டில் ஒரு பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட  வேண்டிய தொட்டுணரக் கூடிய மரபுரிமைச் சொத்தாகும்.
அது, இன்று பெற்றிருக்கும் பிரபல்யம், சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய தனித்துவம் போன்றவை காரணமாக இந்தப் பகுதி சுற்றுலாவுக்குரிய  வசதிவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, இங்கு வரும் மக்கள் சந்தோஷமாகத் தமது பொழுதைப்போக்கிச் செல்ல வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

தரமான உணவுவிடுதிகள், சிறுவர் பூங்கா, தங்கும் விடுதிகள் அத்துடன் பாதுகாப்பு போன்ற உல்லாசப் பயணிகள் எதிர்பார்க்கும் வசதிவாய்ப்புகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு திட்டங்கள் வகுத்துச் செயற்படுத்தப்படுமானால் இப்பகுதில் வேலைவாய்ப்பற்று இருக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிைடப்பதுடன் பொருளாதார முன்னேற்றத்துக்கான அடிப்படைகளும் உருவாக்கப்படுவதாக அமையும். இருக்கும் வளத்தை நிறைவாகவும் திறமையாகவும் பயன்படுத்தினால் முன்னேற்றமும் வளர்ச்சியும் சாத்தியமே.

படப்பிடிப்பு: சமன்த பெரேரா – நன்றி – மிரர்…

Read More

May 31, 2017

தமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 36 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன -31/05 -01/06/1981
by admin - 0

தமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 36 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன -31/05 -01/06/1981
 
யாழ்ப்பாண நகருக்கு பெருமை சேர்க்கும் விடயமாகட்டும்,அழகாய் கூறும் விடயமாகட்டும் எது என்றாலும் எமது பொது நூலகம் தலை நிமிர்ந்து நிக்கிறது. யாழ்பாணம் கல்வி கலாச்சாரத்துக்கு முக்கியமான ஒரு நிலையம் என்றால் அது மிகையாகாது.அதைவிட கலாச்சாரம் இன்று கேள்விகுறியானாலும் சில பல இடங்களில் அது வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த எமது பண்பாடு, கலாச்சாரம் என்பவற்றிலும், கல்வியிலும் முக்கியம் வகிக்கும் யாழ் பொது நூலகம் பற்றி ஒரு நோக்கு..
நூலக வரலாறு.------------------------
 

இந்த நிறுவனத்துக்கான கருப்பொருள் க.மு. செல்லப்பா என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது. இந்த செல்லப்பா அச்சுவேலியை சேர்ந்தவர், யாழ்ப்பான நீதிமன்றத்தில் கரியதரிசியாக இருந்தவர். அதாவது சக்கடத்தார். நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்திவந்த நூல் நிலையமே இன்று விசாலமாக வளந்துள்ளது.இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், 1934ஆம் ஆண்டு ஆனி மாதம் 9ஆம் திகதி ஐசாக் தம்பையா அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றே பொது நூலகத்தின் தோற்றத்திற்கு அடிகோலியது. இக்கூட்டக் காரியதரிசி திரு. க. மு. செல்லப்பா அவர்கள் சிரமப்பட்டுத் திரட்டிய 184 ரூபா 22சதம் தான் முன்னோடியான பொது நூலகம் ஒன்றிற்கான மூலதனமாய் அமைந்தது. அன்றைய காலத்தில் அது ஒரு பெரிய மூலதனம் தான்.இதன் வழி ஆஸ்பத்திரி வீதியில் வாடக அறை ஒன்றில் 844 நூல்களுடனும் 36 பருவ வெளியீடுகளுடனும், 1934 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சிறியதொரு பொது நூலகம் வசதியின்றி இடர்ப்பட்ட போது அதனை யாழ்ப்பாணப் பட்டின சபை பொறுப்பேற்று 1-1-1935 இல் வாடி வீட்டிற்குத் தெர்கிலுள்ள மேல் மாடிக்கு இடமாற்றஞ் செய்யப்பட்டு, அங்கே இயங்கி வந்தது.சகல வசதிகளையும் கொண்ட நவீன பொது நூலகக் கட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகள் 1952ஆம் ஆண்டு ஆனி மாதம் 14ஆம் திகதி சாம் ஏ. சபாபதி அவர்களின் தலைமையில், நடைபெற்ற ஒரு மகாநாட்டினை அடுத்து ஆரம்பிக்கப்பட்டன. புதிய நூலகக் கட்டிடடத்தை அமைப்பதில் அதி வண பிதா லோங் அவர்கள் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். அவர்களது முயற்சியின் மூலம் நூலகத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த கலாநிதி எஸ். ஆர். ரங்கநாதன் அவர்களின் ஆதரவும் கிடைத்தது.
 

நூலகத்தின் அமைப்பிற்கான திட்டங்களை வகுத்துக் கொடுக்க சென்னை அரசின் கட்டிடக் கலை நிபுணர் கே. எஸ். நரசிம்மன் அவர்கள் வந்து வரைபடங்களைத் தயாரித்து உதவினார். கட்டிட அடிக்கல்நாட்டு விழா 1953ஆம் ஆண்டு பங்குனி மாதம் 29ஆம் திகதி நடைபெற்றது. திராவிடக் கலயம்சம் பொருந்திய எழில் மிகு அறிவுக் கோயில் ஒன்று வெகு பொது மக்களின் நிறைவான ஆதரவுடன் உருப்பெற ஆரம்பித்தது.

பொது நூலகத்தின் முதற்கட்டம் பூர்த்தி செய்யப்பட்டு 11.10.59இல் அதி விமரிசையாக அப்போது யாழ்முதல்வராக இருந்த முதல்வர் அ.த.துரையப்பா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நூலகத்தின் ஏனைய கட்டடடங்களும் பூர்த்தி செய்யப்பட்டன. பூரணத்துவம் பெற்று இயங்கி வந்த இந்நூலகத்தில் நூலகர் நூலகர் உட்பட 33 பேர் கடமையாற்றி வந்தார்கள்.
பொது நூலகம் எரிப்பு.
 
......................................
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. நூலகம் எரிக்கப்பட்டது தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி விட்டது.நூலகம் எரியும் செய்தியை கேட்டு சென் பற்றிக்ஸ் ஆசிரியரும் புலவருமான சங். பித கலாநிதி டேவிட் அவர்கள் மனவதிர்ச்சியில் தம் உயிரை நீத்தார்.

1981 ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட பொது நூலகத்தை திருத்தாது யாழ் மாநகரசபை அதை ஒரு அழிப்பின் சின்னமாக வைத்திருந்தது. அதன் பின் பக்கத்தில் ஒரு புதுக்கட்டிடத்தை முன்னிருந்த கட்டிடத்தைப் போல் கட்டுவதற்கு தீர்மானித்தது. இப்பணிக்க முழுநேர பொறியிலராக நியமிக்கப்பட்டவர் பொறியியலாளர் திரு ந. நடேசன் ஆவார். அக்கட்டிடத்தின் கட்டிடக் கலைஞராக நியமிக்கப்பட்டவர் திரு.வி.எஸ்.துரைராஜா ஆவார்.1984 ஆம் ஆண்டு யூன் மாதம் அக்கட்டிட வேலைகள் முடிந்தன. குறைந்தளவான நூற்தொகுதிகளுடன் நூலகம் மீள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 1988 ஆம் ஆண்டு ஆரம்பித்த யுத்தத்தில் புதிய கட்டிடமும், ஏற்கனவே எரிக்கப்பட்ட கட்டிடமும் பாரிய சேதத்துக்குள்ளாயின.

பதின்னான்கு ஆண்டுகளின் பின் 1999 ஆம் ஆண்டு கட்டிடத்தைப் புனரமைக்கத் தீர்மானிக்கப்பட்டு மீண்டும் வி.எஸ்.துரைராஜா அவர்களை நியமித்து. முன்பிருந்த கட்டிடம் போல அமைக்க இடிந்த பாகங்களைத் தேடி அவைகளைப் படமெடுத்து, வரைந்து கட்டிடத் தோற்றத்தை அமைத்தார் இவர்.
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள அரசபடைக் குழுவொன்றால் இடம்பெற்றது.இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர்.

நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது. யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு,
மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது.யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
எரியும் நினைவுகள் 1


எரியும் நினைவுகள் .2


எரியும் நினைவுகள் .3


எரியும் நினைவுகள் .4


எரியும் நினைவுகள் .5


புத்தரின் படுகொலை
நேற்று என் கனவில்
புத்தபெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக்கொன்றனர்.
யாழ் நுலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!
இரவின் இருளில் அமைச்சர்கள் வந்தனர்.
"எங்கள் பட்டியலில் இவர் பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?"
என்று சினந்தனர்
"இல்லை ஐயா
தவறுகள் எவையும் நிகழவே இல்லை
இவரைச்சுடாமல்
ஓர் ஈயினைக்கூடச்
சுடமுயாது போயிற்று எம்மால்
ஆகையால்த்தான்"
என்றனர் அவர்கள்
"சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை"
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.
சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச்சென்றனர்
தொண்ணுறாயிறம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்.
சிகாலோகவாத சூத்திரத்தினைக் கொழுத்தி
எரித்தனர்
புத்தரின் சடலம் அஸ்த்தியானது
தம்ம பதமும்தான் சாம்பரானது

கவிஞர் எம்.ஏ.நுஃமான்யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட போது..

https://www.facebook.com/eelamranjanvot/videos/10155708996975637/?pnref=story
Read More

May 08, 2017

கொரிய மக்களின் தெய்வம் ஒரு தமிழிச்சி- மறைக்கப்பட்ட தமிழர்கள் வரலாறு
by admin - 0

தமிழர் வரலாறு எப்படி மறைக்கப்பட்டது, திரிக்கப்பட்டது ...ஒரு உதாரணம்.
 
கொரியநாட்டின் மன்னன் சுரோவை மணந்தவர் நெடுந்தொலைவில் உள்ள ஒரு நாட்டின் இளவரசி. அவர் படகுகள் மூலமாக கொரியாவுக்குச் சென்று மன்னனை மணந்தார். அந்த இளவரசியின் படகு புறப்பட்ட இடம் ஆயுத்த, இதுதான் கிடைத்த தகவல்கள். 

இங்கேதான் டிவிஸ்ட் வைத்தார்கள் நாக்பூர் உருவாக்கிய வரலாற்றாய்வாளர்கள். 

அந்த இளவரசி அயோத்தியாவின் இளவரசி. அவர்தான் கொரிய மன்னனை மணந்தவர் என்று புத்தகம் எழுதியதுடன், கொரியர்களையும் நம்பவைத்து அயோத்தியாவில் நினைவு மண்டபம் வரை எழுப்பிவிட்டார்கள்.

பேராசிரியர் கண்ணன் இதுபற்றிய ஆய்வுகளைத் தொடங்க, கடல்சார் பண்பாட்டாய்வாளர் அய்யா ஒரிஸ்ஸா பாலு அவர்கள்  இதை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்று ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து ஒரு பெருமுயற்சி எடுத்து இதுபற்றி ஆய்வு மேற்கொண்டபோது அயோத்தியாவில் கடலே இல்லை என்பதில் தொடங்கி  அந்த இளவரசி மற்றும் அவரது வழிவந்தவர்கள் ஆகியவர்களைப் பற்றியெல்லாம் ஆய்வு மேற்கொண்டபோது, அந்த இளவரசியின் பெயர் செம்பவளம், அவர் புறப்பட்ட இடம் ஆயுத்த என்று அப்போது அழைக்கப்பட்ட தற்போதைய கன்னியாகுமரிப் பகுதி என்பதையும் நிரூபித்தனர்.

இதற்கேற்றார்போலவே, இரு நாட்டு கலாச்சார, பண்பாடு, மொழிக்கலப்பும் உள்ளதையும் பல தரவுகள் மூலமாக நிரூபித்தனர்.

இதை கொரியர்களும் ஏற்றுக்கொண்டதுடன், கொரிய துணைத் தூதரகம் இதுபற்றிய தெளிவான வரையறையைக் கொண்டுள்ளதுடன், கொரியாவில் பலலட்சம் பேர் வணங்கும் வகையிலான கடவுளுக்கு ஒப்பானவர் செம்பவளம் ஒரு தமிழச்சி என்பதை ஏற்றுக்கொண்டார்கள்.

செம்பவளம், படகு மூலமாகச் செல்லும்போது படகை (Balance) சமநிலை செய்வதற்காகக் கொண்டு சென்ற பவளப்பாறைகளை இன்னமும் வைத்து வணங்கிக்கொண்டிருக்கிறார்கள் கொரியர்கள். 

தமிழின் வேர்கள் மிக ஆழமானவை, அறிவார்ந்தவை....தொடர்ந்து தேடுவோம்.

- விஷ்வா விஸ்வநாத்
Read More

April 06, 2017

ஆமையின் ஓட்டுக்குள் கண்காணிப்பு ' Camera '
by admin - 0

இன்னும் சில ஆண்­டு­களில் இப்­படி நடக்­கலாம். நாட்டின் எல்­லையில் அந்த இரவு நேரத்தில் இரா­ணுவ வீரர்கள் காவல் காத்துக் கொண்­டி­ருப்­பார்கள். அப்­போது, அவர்கள் நின்று கொண்­டி­ருக்கும் அந்த புல்­வெ­ளி­களின் ஊடே ஒரு ஆமை மெது­வாக நகர்ந்து வரும். ஆமை தானே போகி­றது என அவர்கள் அதைப் பெரி­தாக கண்டு கொள்­ளாமல் இருப்­பார்கள். அது உயி­ருள்ள ஆமையா என்று வேண்­டு­மானால் அவர்கள் சந்­தேகம் கொண்டு ஆராய்ந்துப் பார்க்­கலாம். அது உயி­ருள்ள ஆமை என்­றதும் அதைக் கீழே விட்­டு­வி­டு­வார்கள். அவர்­க­ளுக்குத் தெரி­யாது, அந்த ஆமையின் மூளை முழுக்க முழுக்க ஒரு மனி­தனின் கட்­டுப்­பாட்டில் இருக்­கி­றது என்­பது. தம் எல்­லை­யி­லி­ருக்கும் இராணுவ முகாம்­களை வேவு பார்க்க அது வந்­தி­ருக்­கி­றது என்­பது. சம­யத்தில், மனித வெடி­குண்டு போல், அது ஆமை வெடி­குண்­டா­கவும் மாறலாம். ஏனெனில், அதைக் கட்­டுப்­ப­டுத்­து­வது ஒரு மனித மூளை.

இது என் கற்­ப­னையோ, சினிமாக் கதையோ அல்ல. இது இன்­றைய அறி­வியல் கண்­டு­பி­டிப்பு. இயந்­தி­ரங்­களை உரு­வாக்கி, அதைக் கட்­டுப்­ப­டுத்­து­வதில் பெரிய அறி­வியல் ஆச்­சரி­யங்கள் இனி கிடை­யாது. உயி­ருள்ள உயி­ரி­னங்­களின் மூளையை ஊடு­ருவி அதைத் தன் கட்­டுப்­பாட்­டிற்கு கொண்டு வரும் ஆராய்ச்­சியில் பல நாட்டு ஆராய்ச்­சி­யா­ளர்­களும் ஈடு­பட்டு வரு­கி­றார்கள். இது­வரை பூச்­சி­களை வைத்து இது போன்ற ஆராய்ச்­சி­களை மேற்­கொண்டு வந்­தனர். தற்­போது, ஆமையைக் கொண்டு இந்த ஆராய்ச்­சியை வெற்­றி­க­ர­மாக செய்து முடித்­தி­ருக்­கி­றார்கள் தென் கொரிய விஞ்­ஞா­னிகள்.

மனி­தர்­களின் தலையில் "ஹெட் மவுண்டட் டிஸ்­பிளே " (Head Mounted Display) ஒன்று மாட்­டப்­படும். இதில் BCI எனப்­படும் " Brain Computer Interface" மற்றும் CBI " Computer Brain Interface" ஆகி­யவை இணைக்­கப்­படும். இவை மனித மூளையை கணி­னிக்கும், கணி­னியின் உத்­த­ர­வு­களை மூளைக்கும் கடத்தும் கரு­வி­யாக செயற்படும். அதே போன்று ஆமையின் முதுகில் ஒரு கெமரா, வைஃபை ட்ரான்ஸ்­சீவர், கம்ப்­யூட்டர் கொன்ட்ரோல் மாட்யூல் மற்றும் ஒரு பேட்­டரி ஆகி­யவைப் பொருத்­தப்­பட்­டி­ருக்கும். மேலும், கூடு­த­லாக ஒரு அரை - உருளை (Semi-Cylinder) வடி­வி­லான உணர் கரு­வியும் (Sensor) அதன் முதுகில் பொருத்­தப்­பட்­டி­ருக்கும்.

ஆமையின் முது­கி­லி­ருக்கும் கெம­ரா­வி­லி­ருந்து அதன் சுற்­றத்தை HMD பொருத்­திய மனி­தரால் உணர முடியும். இதைக் கண்டு அந்த மனிதர் ஒரு ஆமை­யாக மாறிட முடியும். அதா­வது, " நெய்­நிகர் யதார்த்தம்" (Virtual Reality) போன்ற முறையில், அவன் இருக்கும் இடத்­தி­லி­ருந்தே ஆமை இருக்கும் இடத்­திற்குப் போனது போன்ற உணர்வு ஏற்­படும். அவ­னிடம் இருக்கும் BCI மற்றும் CBI அந்த மனி­தனின் எண்­ணங்­களை EEG சிக்­னல்­க­ளாக மாற்றி ஆமைக்கு சென்­ற­டையச் செய்யும். அதன் முது­கி­லி­ருக்கும் உணர் கருவி (Sensor), மனிதன் செலுத்த நினைக்கும் திசை­களை அவை­க­ளுக்கு உணர்த்தும். அதன்­படி, அந்த ஆமையும் நகர்ந்து செயற்­படும்.

உலகில் எத்­த­னையோ உயி­ரி­னங்கள் இருக்க ஆமையை ஏன் இதற்கு தேர்ந்­தெ­டுத்­தார்கள் என்ற கேள்­வியும் எழு­கி­றது. ஆமைக்கு இயற்­கை­யி­லேயே இருக்கும் அறி­வாற்றல், தடை­களை கண்­டு­ணர்ந்து நகரும் இயல்பு, ஒளி­களின் அலைக் கீற்றை வேறு­ப­டுத்த முடி­கிற திறன் ஆகி­ய­வையே இந்த ஆராய்ச்­சிக்கு இதை தேர்ந்­தெ­டுக்க கார­ணங்­க­ளாக ஆராய்ச்­சி­யா­ளர்கள் சொல்­கி­றார்கள்.

இன்னும் சில ஆண்­டு­களில் இப்­ப­டியும் நடக்­கலாம். மனிதன் அடைய முடி­யாத ஆழ்­க­டலில் எத்­த­னையோ ஆச்­ச­ரி­யங்கள் புதைந்துக் கிடக்­கின்­றன. ஒரு ஆமையாய் மாறி மனிதன் ஆழ்­க­டலில் பய­ணித்து பல கேள்­வி­க­ளுக்­கான விடை­களைக் கண்­ட­றி­யலாம். மாய­மான MH 370 மலே­சிய விமா­னத்தைக் கண்­டு­பி­டிக்­கலாம், சிதம்­பரம் பகு­தியில் பறந்து கொண்­டி­ருந்த போது மாய­மான டோர்னியர் விமானத்தைத் தேடிக் கண்டுபிடிக்கலாம். இப்படி இந்த ஆராய்ச்சியின் எதிர்காலம் எதுவாகவும் இருக்கலாம். அறிவியல் ஆராய்ச்சிகள் அழிவிற்கானவை அல்ல... முதல் பத்தியை தேர்ந்தெடுப்பதா, கடைசிப் பத்தியைத் தேர்ந்தெடுப்பதா என்பது மனிதர்களின் கைகளில் தான் இருக்கின்றது .
Read More

January 01, 2017

செவ்வாயில் சிலந்திக்கு இணையான மிகப் பெரிய உயிரினம்!
by admin - 0

 

செவ்வாய்க் கிரகத்தில் சிலந்திக்கு இணையான உயிரினம் ஒன்று தென்பட்டதாக வேற்று கிரகவாசிகள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமான புகைப்படங்களை நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் சிலந்திக்கு இணையான ஒரு பெரிய உயிரினம் தென்படுவதுடன் அது பாறையல்ல என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


இதனை சிலர் நத்தை என்றும் சிலர் சிலந்தி என்றும் வேறு சிலர் இது நான்கு கால்களை கொண்ட குரங்கை போல் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

ஆய்வாளர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து செவ்வாய்க் கிரகத்தில் தென் பட்ட பல உருவங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் இன்னும் கால் பதிக்கவில்லை என்பதால், அங்குள்ள உயிரினங்கள் சம்பந்தமான உண்மைகள் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


எது எப்படி இருந்த போதிலும் செவ்வாயில் அண்மையில் தென்பட்ட உயிரினம் தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ள போதும், நாசா நிறுவனம் செவ்வாய்க் கிரகத்தில் உள்ள உயிரினம் தொடர்பான உண்மையை மறைப்பதாகவும் ஆய்வாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Read More

November 03, 2016

டிசம்பர் இறுதியோடு வாட்ஸ்அப் இல்லையாம்..!! இளைஞர்களுக்கு பேரிடி
by admin - 0

டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் சில வகை கையடக்க தொலைபேசிகளுக்கு வாட்ஸ்அப் சேவை கிடைக்காது என வாட்ஸ்அப் நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எந்த வகையான தொலைபேசிகளுக்கு வாட்ஸ்அப் சேவை தடையாகப்போகின்றது என்று உங்களுக்கு தெரியுமா?
சிம்பியான் ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட தொலைபேசிகள்
பிளாக்பெர்ரி ஓ எஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10
நோக்கியா எஸ் 40
நோக்கியா எஸ் 60
ஆன்டிராய்ட் வெர்சன் 2.1 மற்றும் 2.2
வின்டோஸ் போன் 7.1
ஆப்பிள் ஐபோன் 3 ஜிஎஸ், ஐஓஎஸ் 6 ஆகிய தொலைபேசிகளில் தான் வாட்ஸ்அப் சேவை டிசம்பர் 31க்கு பிறகு கிடைக்காது.
Read More

August 22, 2016

தேனை எந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்
by admin - 0

தனியாக மட்டுமின்றி தேனை வேறு பொருட்களுடன் கலந்து உண்ணும் போது கூட அதன் பயன்கள் பலவகைப்படும். அவை என்னவென்று பார்க்கலாம்.

* பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட இதயம் பலம் பெரும்.

* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.

* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.

* எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

* நெல்லிக்காய் சாருடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

* ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

* தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து சாபிட்டால் குடல் புண், வாய்ப்புண் ஆறும்.

* இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.

* கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை போகும்.

* தேனுடன் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும், வீக்கம் குறையும்.
Read More

March 14, 2016

பெர்­முடா முக்­கோண பிராந்­திய அனர்த்த மர்­மத்­துக்­கான கார­ணத்தை கண்­டு­பி­டித்­துள்­ள­தாக விஞ்­ஞா­னிகள் அறி­விப்பு
by admin - 0

அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தில் பெர்­முடா முக்­கோணம் (சாத்­தானின் முக்­கோணம்) என அழைக்­கப்­படும் பிராந்­தி­யத்தில் பய­ணிக்கும் கப்­பல்­களும் அதற்கு மேலாக பறக்கும் விமா­னங்­களும் மர்­ம­மான முறையில் காணா­மல்­போ­வது நீண்ட கால­மா­கவே எவரும் அறி­யாத புதிராக இருந்து வரு­கி­றது.
இந்­நி­லையில் மேற்­படி பெர்­முடா முக்­கோணப் பிராந்­தி­யத்தில் சமுத்­தி­ரத்தின் அடியில் பாரிய எரி­மலை வாய்கள் இருப்­பதை கண்­டு­பி­டித்­துள்­ள­தா­கவும் அந்தப் பிராந்­தி­யத்தில் கப்­பல்­களும் விமா­னங்­களும் மர்­ம­மாக மறை­வ­தற்கு மேற்­படி எரி­மலை வாய்­களே காரணம் என நம்­பு­வ­தா­கவும் விஞ்­ஞா­னிகள் தெரி­விக்­கின்­றனர்.

இயற்கை எரி­வாயு வளம் மிக்க நோர்­வேயின் கடற்­க­ரைக்கு அப்பால் சமுத்­தி­ரத்தில் அரை மைல் அக­லமும் 150 அடி ஆழமும் கொண்ட மெதேன் வாயுவால் நிரம்­பிய பாரிய எரி­மலை வாய்கள் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக நோர்­வேயின் ஆர்டிக் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னிகள் கூறு­கின்­றனர்.

மேற்கு மத்­திய பாரென்ட்ஸ் கடலின் கீழுள்ள பெருந்­தொ­கை­யான எரி­மலை வாய் கள் கார­ண­மாக அவற்­றி­லி­ருந்து அள­வுக்­க­தி­க­மான மெதேன் வாயு வெளி­யி­டப்­ப­டு­வதால் அந்தப் பிராந்­தி­யத்­தி­லான சமுத்­திர மேற்­ப­ரப்பு சூடாகி அந்த மேற்­ப­ரப்­பிலும் அதற்கு மேலும் பய­ணிக்கும் பொருட்­கள் சமுத்­திர அடித்­த­ளத்தை நோக்கி உள்­வாங்­கப்­ப­டு­வ­தாக அவர்கள் தெரி­விக்­கின்­றனர்.

பெர்­முடா முக்­கோணப் பிராந்­தியம், வட அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தில் பிரித்தானியா வின் கடலுக்கு அப்பாலான பிராந்தியங்களி லிருந்து அமெரிக்க புளோரிடா கடற்கரை மற் றும் புயர்ரோ றிக்கோ வரையான பிரதேசத்தை உள்ளடக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Read More

February 12, 2016

ஈர்ப்பு சக்தி அலைகள் ஏன் முக்கியமானவை?- ஐந்து காரணங்கள்
by admin - 0

பேரண்டத்தில் ஏதாவது ஒரு பெரும் சம்பவம் நிகழும்போது இந்த ஈர்ப்புசக்தி அலைகள் உருவாக்கப்படுகின்றன- உதாரணமாக, நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறும்போதோ அல்லது கருந்துளைகள் மோதிக்கொள்ளும்போது போன்ற நிகழ்வுகள்.
அவ்வாறு நிகழும்போது, அவை அண்டவெளியில் மெலிதான அலைகளை உருவாக்கி , அந்த அலைகள் ஒளியின் வேகத்தில் பயணிக்கும்போது , காலத்தையும் இடத்தையும் இழுத்துக்கொண்டும், அழுத்திக்கொண்டும் பயணிக்கின்றன.


இவை ஏன் முக்கியமானவை என்பதற்கு ஐந்து காரணங்களைக் கூறுகிறார் பிபிசியின் அறிவியல் செய்தியாளர் பல்லவ் கோஷ்:
1. இந்த ஈர்ப்பு சக்தி அலைகள்தான் கடந்த நூற்றாண்டின் இயல்பியல் விஞ்ஞானி ஆல்பெர்ட் ஐன்ஸ்டின் முன்வைத்த பொதுச் சார்பியல் தத்துவத்தில் எதிர்வு கூறியவற்றில் கடைசியாக நிரூபணமாகியிருக்கும் விஷயம்.
2. ஆனால் ஐன்ஸ்டைன் இந்த ஈர்ப்பு சக்தி அலைகள் கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு மிகவும் பலவீனமானதாக இருக்கும் என்று கூறியிருந்தார். அது தவறாகிவிட்டது. இப்போது அந்த அலைகளை இக்கால விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
3.இதன் மூலம் இனி அண்ட வெளியை முற்றிலும் புதிய கோணத்தில் நம்மால் பார்க்க முடியும். சாதாரண தொலைநோக்கிகளால் பார்க்கமுடியாத வகையில் நம்மால் பார்க்க முடியும். இனி நம்மால் கருந்துளைகளைக் காணமுடியும், அண்டவெளியில் மேலும் ஆழமாகச் சென்று பார்க்க முடியும் மற்றும் அண்டம் உருவாகியதாகக் கூறப்படும் பெரு வெடிப்பு தருணம் வரை கூட காலத்தில் மேலும் பின்னோக்கிப் பயணம் செய்ய முடியும் என்று நம்புகிறார்கள்.
4.மேலும் ஈர்ப்பு சக்தி எப்படி உண்மையில் வேலை செய்கிறது என்று நம்மால் கண்டுபிடிக்க முடியும்.
5.இதன் மூலம் இயல்பியல் விஞ்ஞானிகளால் எல்லாவற்றையும் விளக்கும் ஒரு கொள்கையை உருவாக்க முடியும் .

Image copyrightReuters
Image captionஸ்டீபன் ஹாக்கிங்

ஐன்ஸ்டைன் இருந்திருந்தால், இந்த கண்டுபிடிப்பு குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்

கருந்துளைகள் குறித்த ஆராய்ச்சிகளில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் இயல்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், இந்த கண்டுபிடிப்பு அறிவியல் வரலாற்றில் மிகமுக்கியமானது என்கிறார்.
" அண்டத்தை ஆராய்வதில் முற்றிலும் புதிய ஒரு வழியை இந்த ஈர்ப்பு சக்தி அலைகள் தருகின்றன. அந்த அலைகளைக் கண்டுபிடிப்பது என்பது விண்ணியலை புரட்சிகரமான வகையில் மாற்றக்கூடிய வல்லமை படைத்தது. இந்த கண்டுபிடிப்புத்தான், கறுந்துளைகள் இணைவதைக் காட்டும் முதல் கண்டுபிடிப்பு", என்றார் ஹாக்கிங்.

BBC
Read More

February 07, 2016

உலகமே அலறித் துடிக்கும் வேளையில் ஸிகா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த தமிழர்
by admin - 0

உலகில் முதன்முறையாக 'ஸிகா' வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
இப்போது தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் ஸிகா வைரஸ், கால் பதித்துள்ளது. கர்ப்பம் தரித்த பெண்களை ஸிகா வைரஸ் தாக்கினால், பிறக்கக்கூடிய குழந்தைகள் பிறவிக்குறைபாடுகளை கொண்டிருக்கும். குறிப்பாக தலை சிறியதாக இருக்கும், மூளை பகுதியில் பாதிப்பு இருக்கும். பிரேசில் நாட்டில் மட்டும் இப்படி 4,074 குழந்தைகள் சிறிய தலைகளுடன் பிறந்துள்ளதால், அங்கு பெண்கள் கர்ப்பம் அடைய வேண்டாம் என இப்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தெற்கு அமெரிக்காவின் கொலம்பியா பகுதியில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஸிகா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 3177 பேர் கர்ப்பிணிப் பெண்கள் என்பதால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இங்கு மட்டும் மேலும் 6 லட்சம் பேர் ஸிகா பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சுமார் 40 லட்சம்பேரை ஸிகா வைரஸ் தாக்கும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கினால் அதற்கு சிகிச்சையும் இல்லை. வராமல் தடுப்பதற்கு தடுப்பூசியும் இல்லை என்பதால் உலக நாடுகள் அலறுகின்றன.
உலக சுகாதார நிலையம் சர்வதேச அவசரநிலையை பிரகடனம் செய்து உள்ளது. ஒருபுறம் உலக நாடுகள் தடுப்பு மருந்துக்கான தேடுதலில் தீவிரம் காட்டி வருகின்றன. மற்ற உலக நிறுவனங்கள் ஸிகா வைரஸ் தடுப்புக்கான மருந்தை கண்டுபிடிக்க ஆராய்ச்சியில் களம் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஸிகா வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் சர்வதேச லிமிடெட் ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மிகவும் முக்கியம் வாய்ந்த நடவடிக்கையாக ஐதராபாத் ஆய்வு விஞ்ஞானிகள் உலகில் முதன்முறையாக ஸிகா வைரசுக்கு எதிராக இரண்டு விதமான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். 
பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான டாக்டர் கிருஷ்ணா எல்லா இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடையே பேசுகையில், “உலகில் முதலாவதாக ஸிகா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடித்த நிறுவனம் நாமாக இருக்கலாம், சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பே மருந்தை பாதிக்கப்பட்ட நபருக்கு செலுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது,” என்று கூறியுள்ளார்.
உலகில் ஸிகா வைரஸ் நோய்த்தொற்று தோன்றுவதற்கு முன்னதாக கடந்த ஆண்டிலேயே அதிகாரப்பூர்வமாக 'ஸிகா' வைரஸ் மாதிரியை இறக்குமதி செய்து இரண்டு விதமான தடுப்பு மருந்துகளை தயாரித்துள்ளோம். இந்த மருந்தை விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் அளித்து பரிசோதிக்க இந்திய அரசின் ஆதரவை நாடியுள்ளோம். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் உதவிசெய்ய முன்வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், பாரத் பயோடெக் 'ஸிகா' வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடித்து உள்ளதாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை நாங்கள் அறிவியலாளர்கள் கருத்தின்படி ஆய்வுசெய்ய வேண்டும், ஆய்வை மேலும் முன்நோக்கி எடுத்துசெல்லும் சாத்தியத்தை பார்க்கவேண்டும். இது 'மேக் இன் இந்தியா' தயாரிப்புக்கு ஒருநல்ல உதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இதுவரை 'ஸிகா' வைரஸ் தாக்கம் யாருக்கும் ஏற்படவில்லை. இந்நிலையில் இந்த புதிய தடுப்பு மருந்து உலக அளவில் பெரும் வரவேற்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இந்த ஸிகா வைரஸ் நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்த விஞ்ஞானியான கிருஷ்ணா எல்லா என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் அமெரிக்காவில் உள்ள ஹவாய் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் பட்டம்பெற்று தாவர தடயவியலில் ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றார். தெற்கு கரோலினாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
அப்போது, இவரை தனது தாய்நாடான இந்தியாவுக்கு திரும்பிவந்து ஏதாவது நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு கிருஷ்ணாவின் தாயார் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு எளிதில் சம்மதிக்காத கிருஷ்ணாவிடம் அவரது தாய் என்ன கூறினார் தெரியுமா..?
மகனே, உன் வயிற்றின் அளவு வெறும் ஒன்பது அங்குலம்தான். நீ எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும், அதற்குமேல் உன்னால் சாப்பிட முடியாது. நீ நம் நாட்டுக்கு திரும்பிவந்து என்ன வேண்டுமானாலும் செய். என் இறுதி மூச்சுள்ளவரை உன்னை பட்டினியாக கிடக்க விடாமல் உனக்கு சாப்பாடு கிடைக்க நான் வழி செய்கிறேன் என கூறிய கிருஷ்ணா எல்லாவின் தாயார் அவரது மனதை மாற்றினார்.
பின்னர், ஒருவித வைராக்கியத்துடன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய இவர், ஐதராபாத்தில் பாரத் பயோடெக் என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் பொருளாதார முதலீடு உள்ளிட்ட பல்வேறு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்ட கிருஷ்ணா எல்லா, இன்று 10 கோடி அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் நிர்வாகத்தின் தலைவராக சப்தமில்லாமல் பல சாதனைகளை செய்து வருகிறார்.
புதிய நோய்கள் உருவாவதற்கு முன்னரே அவற்றுக்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் அதிக முதலீட்டை செலவிட்டுவரும் கிருஷ்ணா எல்லாவின் தீவிர முயற்சியின் விளைவாக உலகிலேயே மிக குறைந்த விலையில் ஹெபிடைட்டிஸ் பி வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை இவரது நிறுவனம் கண்டுபிடித்தது.
போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதத்தை தடுக்கும் சொட்டு மருந்து, ரோட்டா என்ற வைரஸால் ஏற்படும் வயிற்றுப்போக்கு நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து ஜப்பானிய என்செபாலிட்டிஸ் எனப்படும் கொசுவால் பரவும் வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தையும் இவரது தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை நாடு முழுவதும் 3.5 பில்லியன் யூனிட் போலியோ சொட்டு மருந்தை இந்த நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.
உலகையே அச்சுறுத்திய சிக்கன் குன்யா நோய்க்கு காரணமான வைரஸ் கிருமி எது? என்பதை இவரது ஆய்வகம்தான் முதன்முதலாக கண்டுபிடித்தது.
தற்போது, ஸிகா நோய்க்கு எதிரான இரண்டுவகை தடுப்பு மருந்தை கண்டுபிடித்து, ‘மேக் இன் இந்தியா’ என்ற லேபிளுடன் உலக நாடுகளுக்கு அனுப்பவுள்ள கிருஷ்ணா எல்லாவின் சாதனை முயற்சியில் அவர் வெற்றிபெற வாழ்த்த வேண்டியது, தமிழர்கள் என்ற வகையில் நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும்!
Read More

December 21, 2015

மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு
by Unknown - 0

பூமியை போன்றே, மனிதர்கள் வாழ ஏற்ற சூழலில் ‘உல்ப் 1061′ ( Wolf 1061) எனும் புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது பூமியிலிருந்து 14 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்ததாவது: மனிதர்கள் வசிப்பதற்குத் தகுதியான கிரகங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டதில், பூமியை ஒத்த சூழல் கொண்ட 3 கிரகங்களை கண்டறிப்பட்டன.

ஒரு சிறு நட்சத்திரத்தை இம்மூன்று கிரகங்களும் சுற்றி வருகின்றன நட்சத்திரத்திற்கு ‘உல்ப் 1061′ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது புவியிலிருந்து 14 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

இம்மூன்று கிரகங்களின் நிலப்பரப்பும் பாறை போல கடினமாக இருக்கக்கூடும் எனத் தெரிகிறது. குறிப்பாக நடுவில் உள்ள கிரகத்தின் தன்மை, பூமியைப் போலவே உள்ளது. அந்த கிரகத்திற்கு ‘உல்ப் 1061சி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது பூமியைவிட 4 மடங்கு பெரியதாக இருக்கும். இங்கு திரவ வடிவில் நீர் இருக்கவும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற சூழல் உள்ள கிரகங்கள் இதற்கு முன்பு கண்டறியப்பட்டாலும், அவை ‘உல்ப் 1061′ நட்சத்திரத்தைவிட இரு மடங்கு தொலைவில் உள்ளன.
Read More

November 27, 2015

மீன்களுக்கும் காய்ச்சல் வரும்: ஆய்வில் தகவல்
by Unknown - 0

சில குறிப்பிட்ட வகை மீன் இனங்களுக்கும் காய்ச்சல் வரும் என சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாக இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து, 72 ‘ஜீப்ராமீன்’ வகை மீன்களை ஆய்வு செய்தனர். இந்த மீன்களை சரிபாதியாக பகுத்து, ஒரு பகுதியை அவை ஏற்கனவே இருக்கும் மீன் தொட்டியிலும், மற்றொரு பகுதியை இயல்பை விட ஒரு செல்சியஸ் குளிர்மையான தண்ணீரிலும் விட்டனர்.

பின்னர், அனைத்து மீன்களையும், பல்வேறு சூடான பகுதிகள் அடங்கிய மீன் தொட்டியில் விட்டனர். எளிமையாக அவை நீந்திச் செல்ல இந்த மீன் தொட்டி உதவியது. எனினும், முன்னர் குளிர்மையான நீரில் விடப்பட்டிருந்த மீன்கள் மன அழுத்தத்துக்கு ஆளானதால், அனைத்து மீன்களும் உள்ள தற்போதைய தொட்டியில், சூடு நிறைந்த பகுதியை சூழ்ந்துகொண்டு, தமது உடலின் வெப்ப நிலையை இரண்டு முதல் நான்கு செல்சியஸ் அதிகரித்துக்கொண்டன.

இதன் மூலமாக மீன்கள் உணர்வுசார் காய்ச்சலுக்கு (எமோஷனல் ஃபீவர்) உள்ளாவதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். மற்ற பாலுட்டிகளில் உணர்வுசார் காய்ச்சல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் மீன்களை ஆய்வு செய்ய எண்ணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

November 25, 2015

நோயாளி குணமடையும் வேகத்தை இரத்த மாதிரி மூலம் அறியலாம்: ஆய்வு முடிவு
by Unknown - 0

இரத்தத்தின் வெள்ளை அணுக்களைக் கொண்டு அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோயாளி பழைய நிலையை அடையும் காலத்தைக் கணக்கிட முடியும் என சமீபத்திய ஆய்வு மூலமாக தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சியில் அறுவை சிகிச்சைக்கு முன்னர் நோயாளியிடமிருந்து இரத்த மாதிரி பெறப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு தயாராகும் நோயாளிகளின் உடலிலிருந்து சேகரிக்கப்பட்ட இரத்த மாதிரியில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவீட்டைக்கொண்டு குணமாகும் விகிதத்தைத் தெரிந்துகொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தில்லாத இடுப்பு அறுவை சிகிச்சை செய்யவிருந்த சுமார் இருபத்தைந்து நோயாளிகளிடம் சேகரிக்கப்பட்ட இந்த இரத்த மாதிரியில் உள்ள வெள்ளை அணுக்களின் விகிதம் மூலமாக நோயாளிகள் பூரணமாக குணமடைய எடுத்துக்கொள்ளும் கால அவகாசத்தை தெரிந்துகொள்ள உதவும் என கருதப்படுகின்றது.

சிறிய அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்முடிவு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எப்போது சிகிச்சையளிக்க ஆரம்பிக்கலாம் என்பதை கணக்கிட ஏதுவாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வை மேற்கொண்டு, சுமார் 80 நோயாளிகளிடம் நடத்த உள்ளதாக ஆய்வுக் குழு குறிப்பிட்டுள்ளது.


Read More

November 10, 2015

செவ்வாய்க்கு அனுப்ப ஆட்களைத் தேடுகிறது நாசா!
by Unknown - 0

செவ்வாய் கிரகம் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள விண்வெளி வீரர்களை நாசா தேடி வருகிறது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, இதற்காக அமெரிக்க குடியுரிமை பெற்ற விமானிகள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினரிடமிருந்தும் விண்ணப்பங்களை எதிர்பார்த்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரை இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என நாசா அறிவித்துள்ளது.

விண்வெளிப் பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவோர் குறித்த விபரங்கள் 2017 ஆம் ஆண்டு மத்தியில் அறிவிக்கப்படும்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், அவர்களது பணிக்காலத்தில் நான்கு முறை அமெரிக்க விண்வெளி ஓடங்களில் விண்வெளிக்கு அனுப்பப்படுவர்.

விண்வெளிக்கு அனுப்புவதற்காக இதுவரை 300 பேரை நாசா தேர்ந்தெடுத்துள்ளது.

நாசாவின் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, பொறியியல், உயிரியல், இயற்பியல் ஆகிய ஏதாவது ஒன்றில் குறைந்தபட்சம் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Read More

November 05, 2015

சூரியனின் மின்காந்த அலைத்தாக்குதலால் ஸ்தம்பிக்கும் பூமி: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
by Unknown - 0

சூரியனில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைத் தாக்குதலால் பூமியின் தொலைத்தொடர்புகள் முற்றிலுமாக ஸ்தம்பிக்கும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதனை எதிர்கொள்வது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது.

2020 அல்லது 2022ம் ஆண்டுகளில் இந்தத் தாக்குதல் நடக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டு இதே போன்ற ஆபத்து ஒன்று பூமியை அச்சுறுத்தியது. ஆனால், அப்போது அதிர்ஷ்டவசமாக பூமி அதிலிருந்து தப்பியது.

ஆனால், இம்முறை இந்த ஆபத்திலிருந்து பூமி தப்புவது கடினம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்த மின்காந்த அலைத் தாக்குதல் நடக்க 12 சதவீதம் மட்டுமே வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டாலும், தாக்குதல் நடந்தால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என அமெரிக்கா இப்போதே ஆராயத் தொடங்கிவிட்டது.

ஏற்கனவே 1959 ஆம் ஆண்டு இதேபோன்ற தாக்குதல் சம்பவம் ஒன்றை பூமி சந்தித்தது. அப்போது தொலைத்தொடர்புகள், மின்சார வசதி ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டன. மின்சார நிலையங்கள், டிரான்ஸ்பார்மர்கள் ஆகியவை தீப்பற்றி எரிந்து நாசமாயின.

அமெரிக்கா, மொரக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள் இந்த தாக்குதலில் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. ஆனால், அப்போது இருந்ததைக் காட்டிலும் தற்போது தொழில்நுட்பம் மேலும் முன்னேறிவிட்டது. இதனால் தற்போது பாதிப்பு மேலும் பல மடங்கு இருக்கும் என அஞ்சப்படுகிறது.

குறிப்பாக மற்ற நாடுகளை விட அமெரிக்கா இந்தத் தாக்குதலால் பெரும் அழிவைச் சந்திக்கும் எனக் கூறப்படுகிறது.

இத்தகைய மின்காந்த அலைத்தாக்குதல்கள் வழக்கமாக நோர்வேக்கு மேலே வடக்கு திசையில் ஒளி வெள்ளமாக நடைபெறுவது வழக்கம் தான். இதனை அரோரா மோரியாலிஸிஸ் என்கிறார்கள். அதாவது வடதிசை வெளிச்சம் என இதற்குப் பொருள்.

இந்த மின்காந்த அலைத் தாக்குதல் நடந்தால் உலகம் முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கும். அதுவும் சில நாட்கள் அல்ல, பல மாதங்கள். செல்போன் முதற்கொண்டு நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் எதையும் பயன்படுத்த முடியாது போகும்.
Read More

October 29, 2015

சனியின் துணைக்கோளை நெருங்கிச் செல்லும் நாசா விண்ணோடம்
by Unknown - 0

நாசாவினால் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஏவப்பட்ட விண்ணோடம் ஒன்று, சனிக்கிரகத்தின் துணைக்கோள்களில் ஒன்றான இன்செலடஸினின் சிறந்த காட்சியை படமெடுக்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன் இரவு, காசினி என்று அழைக்கப்படும் இந்த விண்ணோடம், சனிக்கிரகத்தின் துணைக்கோள்களில் ஒன்றான இன்செலடஸினின் தென் துருவத்திலிருந்து பெருமளவு நிராவி வெளிப்படும் இடத்தை ஊடறுத்துச் செல்லவிருக்கிறது. அப்போது ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் இன்செலடஸின் மேற்பரப்பை இந்த விண்ணோடம் காணமுடியும், படமெடுக்க முடியும்.

உறைநிலையில் இருக்கும் இன்செலடஸின் கோளின் மேற்பரப்புக்கு அடியில் திரவக் கடல் ஒன்று இருப்பதாக நம்பப்படுகிறது.

சூரிய குடும்பத்திற்குள் உயிர்கள் தோன்றி வாழ்வதற்கு ஏதுவான இடங்களில் ஒன்றாக இன்செலடஸ் கோள் கருதப்படுகிறது.
Read More

WT 1190 F விண் பொருள் அல்ல-நாளை அதிகாலை கிரக நகர்வுகளால் வானில் விநோதம்
by Unknown - 0

நவம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கையின் தென்பகுதிக் கடலில் விழக்கூடிய சாத்தியம் உள்ளதாகக் கூறப்படும் செய்மதிச் சிதைவு, விண் பொருள் அல்லவென அடையாளம் காணப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

WT 1190 F எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிதைவு குறித்து பிரித்தானியாவின் டெய்லி மெயில் உள்ளிட்ட பல்வேறு இணையத்தளங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன.

இந்த சிதைவு தொடர்பில் வினவியபோது, 2012ஆம் ஆண்டிலிருந்து அந்த பொருள் விண்வெளியில் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், அதனடிப்படையிலான ஆராய்ச்சிகளின் பிரகாரம் அது விண்பொருள் அல்லவென உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆதர் சீ கிளார்க் நிலையத்தின் விஞ்ஞானி ஒருவர் குறிப்பிட்டார்.

நவம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கை நேரப்படி முற்பகல் 11.50 அளவில் தென்பகுதி கரையோரத்திலிருந்து 65 கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள கடலில் இந்த பாகம் விழக்கூடிய சாத்தியமுள்ளதாகவும், அது விழக்கூடிய சரியான இடம் தொடர்பில் விஞ்ஞானிகள் தொடர்ந்தும் ஆய்வுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிதைவின் நகர்வு குறித்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் சிலர் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எவ்வாறாயினும், இந்த சிதைவினால் இலங்கைக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்பட மாட்டாதென நட்சத்திர சாஸ்திரவியலாளர்கள் கருதுகின்றனர்.

நட்சத்திர சாஸ்திரவியல் தொடர்பில் ஆர்வம் காட்டுகின்றவர்களுக்கு நாளை அதிகாலை அபூர்வ சந்தர்ப்பமொன்று கிட்டவுள்ளது.

மூன்று கிரகங்கள் ஒன்றுக்கொண்டு மிகவும் நெருக்கமாக பயணிக்கும் அபூர்வ காட்சியை அவதானிக்கும் சந்தர்ப்பம் நாளை அமையவுள்ளது.

இதன் பிரகாரம் வியாழன், செவ்வாய் மற்றும் வெள்ளி கிரகங்கள் ஒன்றுக்கொன்று மிக அருகில் நகருமென ஆதர் சீ கிளார்க் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாளை அதிகாலை 4 மணியளவில் கிழக்கு வான் பரப்பிலிருந்து 15 முதல் 20 பாகைக்கு இடையில் இந்த கிரக நகர்வுகளைக் கண்காணிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முக்கோண வடிவிலான இந்த கிரகங்களின் அமைவினை சாதாரண கண்காளால் பார்வையிட முடியும் எனவும் ஆதர் சீ கிளார்க் நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Read More