Latest News
Showing posts with label தமிழகம். Show all posts
Showing posts with label தமிழகம். Show all posts

April 09, 2025

தமிழக அரசியலில் புதிய கட்டமைப்பு – பாஜக இரண்டு வழித் திட்டத்தில் பயணம்?
by Editor - 0

தமிழக அரசியலில் புதிய கட்டமைப்பு – பாஜக இரண்டு வழித் திட்டத்தில் பயணம்?

தமிழக அரசியல் சூழலில் பெரும் மாற்றத்துக்கான சூழ்நிலை உருவாகி வருகிறது. ஒரு பக்கம் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உயிர் பெறும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இன்னொரு பக்கம், பாஜக – நாம் தமிழர் கூட்டணியை உருவாக்கும் பணி தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சமீபத்தில், அமித் ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி சந்தித்தது முக்கிய பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் இம்முறையில் சாதகமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. எப்போதும் கடுமையாக நடந்து கொள்ளும் அமித் ஷா, இம்முறை இயல்பாக இருப்பது கவனிக்கத்தக்கது.

பேச்சுவார்த்தை முழுக்க முழுக்க அரசியல் குறித்து தான். இதில், எடப்பாடி பேசியதை தம்பிதுரை ஆங்கிலத்தில் அமித் ஷாவுக்கு விளக்கியதாக தகவல்கள் வெளியாகின. முக்கியமாக, "திமுக கூட்டணியை வீழ்த்த அதிமுக பிளவுகள் இல்லாமல் இருக்க வேண்டும். ஓபிஎஸ், சசிகலா, தினகரனை மீண்டும் இணைப்பதில் என்ன தடையாக இருக்கிறது?" என அமித் ஷா கேட்டுள்ளார்.

இதே வேளையில், பாஜக – நாம் தமிழர் கூட்டணி உருவாகும் வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. சீமானை முதல்வர் வேட்பாளராக முன்வைத்து, 80 சீட்டுகள் நாம் தமிழருக்கு, 80 பாஜகவிற்கு, மீதமுள்ள 74 சீட்டுகள் மற்ற கட்சிகளுக்கு என்ற வகையில் ஒரு திட்டம் டெல்லியில் விவாதிக்கப்படுகிறது.

தற்போது தமிழக பாஜகவில் இரண்டு லாபிகள் (அல்லது அணி) உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஒன்று, அதிமுகவுடன் தொடரவேண்டும் என நினைக்கும் அணியினர்.

மற்றொன்று, அதிமுகவை புறக்கணித்து நாம் தமிழருடன் புதிய கூட்டணி உருவாக்க விரும்பும் அணியினர்.

இருபுறத்திலும் களமிறங்கிய நிலையில், 2026 தேர்தல் நேரமாவது எந்த கூட்டணி வெற்றி பெறும்? எந்த அணியின் திட்டம் நிறைவேறும்? என்பதுதான் பார்க்க வேண்டிய கேள்வி.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சீமான் சந்தித்ததாகவும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் ஒரு மணி நேரம் பேசியதாகவும் செய்திகள் பரவின. ஆனால் சீமான் இதை மறுத்துவிட்டார். இதுவும் பாஜக – நாம் தமிழர் கூட்டணி குறித்து பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
Read More

February 05, 2021

பேரறிவாளன் உள்பட 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவை பரிந்துரையை நிராகரித்தார் ஆளுநர்
by Editor - 0

பேரறிவாளன் உள்பட 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவை பரிந்துரையை நிராகரித்தார் ஆளுநர்



பேரறிவாளன் உள்பட 7 தமிழரை விடுவிக்க வேண்டும் என தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிராகரித்துள்ளார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக அரசியலமைப்பு சட்டம் 161 இன்படி தமிழக அமைச்சரவை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் மீது ஆளுநர் எந்தவித முடிவையும் எடுக்காமல் இருந்தார். இதனிடையே பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என மத்திய அரசு முதலில் வாதிட்டது. பின்னர், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியது, தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவு எடுப்பார் என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பேரறிவாளன் விடுதலை தொடர்பான பரிந்துரை மீது ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அவகாசம் வழங்கி, விசாரணையை ஒத்திவைத்தனர். ஆனால், உச்ச நீதிமன்றம் ஆணையட்டு 12 நாட்களாகியும் தமிழக அரசின் பரிந்துரை குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிராகரித்துள்ளார். மேலும் இந்த விடுதலை தொடர்பான முடிவை எடுக்க குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரையை சட்டத்திற்கு உள்பட்டு மத்திய அரசு பரிசீலிக்கும் என்றும் ஆளுநர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 7 பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என இன்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்த நிலையில் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார்.


Read More

February 04, 2021

சசிகலா காரில் அதிமுக கொடி; நடவடிக்கை கோரி டிஜிபி.,யிடம் அமைச்சர்கள் புகார்
by Editor - 0

ஊழல் குற்றச்சாட்டில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று விடுதலையான சசிகலா, காரில் அதிமுக கொடி பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சார்பில் அமைச்சர்கள் டிஜிபி.,யிடம் புகாரளித்தனர்.
vivasaayi.com


ஊழல் குற்றச்சாட்டில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, கடந்த ஜன.,27ல் விடுதலையானார். அதற்கு முன்னதாக அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர், கடந்த 31ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா, மருத்துவமனையில் இருந்து அதிமுக கொடியுடன் கூடிய காரில் புறப்பட்டார். இதற்கு அதிமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

வரும் 8ம் தேதி பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழகம் வரவுள்ளார். இந்நிலையில், அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியதற்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்தனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி மற்றும் மூத்த நிர்வாகிகள் மதுசூதனன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் புகாரளித்தனர். அதில், அதிமுக கொடியை சசிகலா இனி பயன்படுத்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More

January 31, 2021

இது என் தேசம் என் நாடு! யாரும் விலகவில்லை நான்தான் வெளியேற்றினேன்: சீறிய சீமான்!
by Editor - 0


நாம் தமிழர் கட்சியின் களப்போராளிகளுடனான கலந்தாய்வு கூட்டம் வேலூர் மாநகராட்சி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 13 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்களையும் அறிமுகம் சீமான் செய்து வைத்தார்.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “இவ்வளவு நாளாக வேல்- ஐ கையில் எடுக்காத ஸ்டாலின் தற்போது எடுக்க காரணம் என்ன? மக்களுக்கு மிகப்பெரிய பிரச்னையே அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகள் தான். இத்தனை ஆண்டுகளாக மக்கள் பிரச்சனையை தீர்க்க முடியாதவர்கள் 100 நாட்களிலா தீர்க்கப்போகிறார்கள். பா.ஜ.க ஆட்சியின் சாதனை, திட்டங்களை பற்றி பேச ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் எல்லாமே கொடும் திட்டங்கள். வட இந்தியாவில் ராமர், கேரளாவில் ஐயப்பன், தமிழகத்தில் முருகன். நாங்கள் வேல்-ஐ கையில் எடுத்தது பண்பாட்டு மீட்சி, ஆனால் பா.ஜ.க, திமுக ஸ்டாலின் வேலை கையில் எடுத்தது தேர்தலுக்காக மக்களை இழுக்கவே. தமிழ் இறை அனைவருக்கும் சொந்தம். இத்தனை ஆண்டுகளாக ஸ்டாலின் ஏன் வேல்-ஐ கையில் எடுக்கவில்லை. பா.ஜ.கவும் கட்சி தொடங்கி இத்தனை ஆண்டுகளாக வேல்-ஐ கையில் எடுக்கவில்லை. தற்போது எடுப்பது தேர்தலுக்காக என்பது வெளிப்படையாக தெரிகிறது.


வேளாண் குடிமக்களின் கடனை ரத்து செய்யப்பட வேண்டும் என மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம். நாம் தமிழர் கட்சி இந்திய கட்சிகள் மற்றும் திராவிட கட்களுடன் கூட்டணி வைக்காது. தனித்து தான் போட்டியிடும். 7 பேர் விடுதலை என்பது 25 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு தற்போது ஆளுனர் கையெழுத்தில் இருக்கிறது. தற்போது விடுதலை செய்ய வேண்டும். போராடி எப்படியும் விடுதலையை சாத்தியப்படுத்துவோம். தேர்தல் லாபத்திற்காக செய்தாலும் 7 பேரை தயவு செய்து விடுதலை செய்யுங்கள். இந்த முறை வெற்று அறிவிப்பாக இல்லாமல் ஆக்கப்பூர்வமான செயலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டும். 7 பேரை விடுதலை செய்ய வேண்டும். நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரும் வெளியேறவில்லை, நான் தான் வெளியேற்றினேன். அதன் பிறகு அவர்கள் விரும்பிய கட்சியில் சேர்ந்துகொண்டார்கள். நான் யாருக்கும் விளக்கம் அளிக்க வேண்டியது இல்லை. வேண்டும் என்றால் தான் விளக்கம் அளிக்க வேண்டும், வேண்டாம் என்றால் விளக்கி தான் வைக்க வேண்டும். மொத்த சீட்டையும் வெல்ல வேண்டும் என்று தான் உழைத்துக்கொண்டிருக்கிறோம்.

இது என் தேசம் என் நாடு இங்கு வாழுகிற குடிமக்களுக்கான அரசியல் தமிழ் தேசிய அரசியல். இட ஒதுக்கீட்டு கொள்கையில் ராமதாசோடு துணை நிற்பேன். இடஒதுக்கீட்டில் அவர் எப்போதுமே உறுதியாக இருப்பார் அந்த இடத்தில் அவருக்கு ஆதரவாக நான் நிற்பேன்” எனக் கூறினார்.
Read More

January 26, 2021

நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா!
by Editor - 0


சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்தது கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது அவரின் தண்டனை காலத்தை நாளை நிறைவு செய்ய உள்ளார். தற்போது கரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு அவர் விடுதலை செய்யப்படுவார் என்று சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக அவரிடம் 9 மணி அளவில் கையெழுத்து பெறப்பட்டு சிறை நடைமுறைகள் முடிந்த பிறகு சுமார் 10.30 மணிக்கு அவர் விடுதலை ஆவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Read More

December 15, 2020

மீண்டும் வந்தாச்சு குக்கர்.. செம திருப்பங்கள்.. இனி பொங்கல்தான்.. டிடிவி தினகரன் செம
by Editor - 0



பல திருப்பங்களுக்கு பிறகு, பிரஷர் குக்கர் சின்னம் மீண்டும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஆர்.கே.நகரில் யாருக்கு வெற்றி என்று மொத்த இந்தியாவும் உற்று பார்த்தபோதுதான், அதிரடி என்ட்ரி கொடுத்தார் டிடிவி தினகரன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக களம் கண்ட டிடிவி தினகரனுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் பிரஷர் குக்கர். திமுக, அதிமுக என பெரும் ஜாம்பவான் கட்சிகள் களம் கண்டதால், டிடிவி தினகரன் வெற்றியை யாரும் எதிர்பார்க்கவில்லை.


இது எல்லாமும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரைதான். திமுகவை டெபாசிட் இழக்க வைத்து, அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்து, ஜெயலலிதாவின் தொகுதியை எளிதாக வென்றார் டிடிவி தினகரன். பிரஷர் குக்கர் ராசிதான் இத்தனைக்கும் காரணம் என புழகாங்கிதம் அடைந்தனர் அவர் ஆதரவாளர்கள்.

ஆனால், 2 வருஷம்தான். 2019ல், தமிழகத்தில் நடந்த 13 தொகுதி இடைத் தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும் போட்டியிட ஏதுவாக பொதுச் சின்னமாக குக்கர் சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்கக் கோரி, டிடிவி தினகரன் தரப்பு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதிமுக தரப்பின் எதிர்ப்பை பரிசீலித்த நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்தது.

இந்த தேர்தலில் தினகரன் கட்சிக்கு 'பரிசுப் பெட்டி' சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த தேர்தலில் அதிர்ச்சி தோல்விகள் பரிசாக கிடைத்தன. அப்போதுதான் புரிந்தது, குக்கர் சின்னத்தின் முக்கியத்துவம். இந்திய தேர்தல் வரலாற்றிலேயே, இழந்து போன இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையத்திடமிருந்து மீட்டவர் ஜெயலலிதா என்பார்கள் (1991 தேர்தலுக்கு முன்பு). இரட்டை இலை சின்னம்தான் இப்போதும் அதிமுக வெற்றிக்கு முதுகெலும்பாக உள்ளது. இப்போது அதே மாதிரி ஒரு திருப்புமுனை தினகரனுக்கும் நடந்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு அமமுக சின்னமான பிரஷர் குக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் செம குஷியில் உள்ளது தினகரன் தரப்பு. இடைத் தேர்தல் நடந்தபோது, பிரஷர் குக்கர் சின்னத்தை அமமுகவுக்கு வழங்க கூடாது என்று, 300 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரத்தை தேர்தல் ஆணையம் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்தது. அப்படி தடை போட்ட ஒரு சின்னம் இப்போது, மறுபடியும் தினகரன் கைக்கு வந்துள்ளது என்றால் சும்மாவா

Read More

November 05, 2020

எனக்கும், என் அப்பாவின் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது - விஜய் அதிரடி அறிவிப்பு
by Editor - 0

என் தந்தை அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளதை ஊடகங்கள் மூலம் அறிந்தேன், அரசியல் கட்சி விவகாரத்தில் எனக்கும் என் தந்தைக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று நடிகர் விஜய் திட்டவட்டமாக மறுத்துள்ளார். நடிகர் விஜய் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி உள்ளதாகவும் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி ஆரம்பக்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின, அத்துடன் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியின் பெயரை, அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் பரவியது 


இதை விஜய்யின் பிஆர்ஓ ரியாஸ் அகமது இந்த செய்தி பொய் என்று திட்டவட்டமாக மறுத்தார். நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றார். அதேநேரம் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றாலும் விஜய்யின் பெயரில் அரசியல் கட்சி இயக்கத்திற்கு விண்ணபிக்கப்பட்டிருப்பது உண்மை என்றே டெல்லி தரப்பு ஊடகவியலாளர்கள் சொன்னார்கள்.

இது தொடர்பாக விளக்கம் அளித்த விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் அளித்த விளக்கத்தில், அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சிக்கு நான் தான் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன். இது என்னுடைய முயற்சி. இது விஜயின் அரசியல் கட்சி அல்ல" என்று கூறினார்.

இதனிடையே அரசியல் கட்சி விவகாரத்தில் எனக்கும் என் தந்தைக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று நடிகர் விஜய் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இன்று என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகா் அவா்கள் ஓா் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதன் மூலம் அவா் அரசியல் தொடா்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன். மேலும் எனது ரசிகா்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடா்பும் கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடா்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்தநடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு கூறியுள்ளார்.




Read More

October 28, 2020

சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் அறியலாம்
by Editor - 0


சொத்து குவிப்பு வழக்கில் சிறையிலுள்ள சசிகலாவின் விடுதலை தொடர்பான விவாதங்கள், தமிழக அரசியல் களத்தில் பெரிதாக கிளம்பியுள்ளன.

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி சசிகலா விடுதலையாவார் என்று தகவல்அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை பதிலளித்துள்ள நிலையில், 

தன்னைப் பற்றி தகவல்களை மூன்றாம் நபரிடம் வெளியிட வேண்டாம் என்று சசிகலா கர்நாடக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, அபராதத் தொகையை செலுத்துவதற்காக சசிகலா தரப்பு மனுத்தாக்கல் செய்துள்ளது.

ஆனாலும், அதற்கு முன்னதாகவே அவரை வெளியே கொண்டு வரும் நடவடிக்கைகளிலும் டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலா தரப்பினர் இறங்கியுள்ளார்.

கர்நாடக சிறை விதிகளின்படி, செப்டம்பர் இறுதியில் சசிகலா வெளியே வந்தாக வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம், சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக சிறைத்துறையே முடிவெடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

இதற்காக சிறை நிர்வாகத்திடம் சசிகலா தரப்பில் கோரிக்கை கடிதம் எழுதப்பட்டு அது நிலுவையில் உள்ளதாகவும் தெரிகிறது.
Read More

October 19, 2020

முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்
by Editor - 0

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமான 800 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்பது கோரிக்கை. ஈழத் தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர்; இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருப்பவர் என்பதால் முரளிதரன் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க எதிர்ப்பு எழுந்தது.


முரளியின் முதல் அறிக்கை


இதனை அடுத்து முத்தையா முரளிதரன் முதலில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், தமிழனாக நான் பிறந்தது என் தவறா? ஈழத் தமிழருக்கு நான் இப்போதும் உதவி வருகிறேன் என கூறியிருந்தார். ஆனாலும் உலகத் தமிழர்கள் மத்தியில் முத்தையா முரளிதரனுக்கு கடு எதிர்ப்பு நீடித்தது.


நடிக்க வேண்டாம்முரளி மீண்டும் அறிக்கை


இந்த நிலையில் தம்முடைய வரலாற்று படத்தில் விஜய்சேதுபதி நடிக்க வேண்டாம் என முரளிதரன் ஒரு வேண்டுகோள் விடுத்து இன்று மற்றொரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், விஜய் சேதுபதி அவர்களின் கலைபயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்க் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக் கொள்கிறேன் எனவும் முத்தையா முரளிதரன் கூறியிருந்தார்.


விஜய்சேதுபதிக்கு வேண்டுகோள்விஜய் சேதுபதிக்கு முரளி வேண்டுகோள்


மேலும், எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என்று நடிகர் விஜய்சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை என்றும் முரளி கூறியிருந்தார்.


விஜய் சேதுபதி விலகல்விலகினார் விஜய்சேதுபதி


முத்தையா முரளிதரனின் இந்த வேண்டுகோள் அறிக்கையை தமது ட்விட்டரில் ஷேர் செய்து நன்றி வணக்கம் என்று மட்டும் சூசகமாக பதிவிட்டுள்ளார் நடிகர் விஜய்சேதுபதி. இதனால் முத்தையா முரளிதரன் திரைப்படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலகுவது உறுதியாகி உள்ளது.


Read More

July 22, 2020

எவ்வளவு காலம் இழுத்தடிப்பீர்கள்! ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பில் உயர் நீதிமன்றம் அதிரடி
by Editor - 0

கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.

7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் ,ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை தொடர்பில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.

ஆனால் இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், 7 பேர் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளது.

7பேர் விடுதலைக்கான தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் எவ்வளவு காலம் வைத்திருக்க முடியும் என அதிரடியாக கேள்வியெழுப்பியுள்ளது
Read More

July 19, 2020

முருகனைப் பற்றிபேச யாருக்கும் தகுதி இல்லை! கறுப்பர் கூட்டத்துக்கு பதிலடி
by Editor - 0

முருகன் குறித்தான வலையொளி ஒன்றின் ஆபாசப்பேச்சு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலவிதமான விவாதங்களை உருவாக்கி இருக்கிறது.

இந்துக் கடவுளை பழித்துரைத்து இழிவுசெய்யும் நோக்கோடு வெளியிடப்பட்டுள்ள அக்காணொளி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக இருக்கும் முருக கடவுளை கொச்சைப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள அக்காணொளி தொடர்பில் சமூக ஆர்வலர் ஒருவரின் ஆதங்கமாக வருகிறது இக்காணொளி

ibctamil
Read More

July 03, 2020

சாத்தான்குளம்.. சேகரிக்கப்பட்ட ஆதாரம்.. 5 மணி நேரம் காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம்.. பின்னணி!
by Editor - 0

 தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக காவலர் ரேவதி 6 மணி நேரம் வாக்குமூலம் அளித்து இருக்கிறார். கடந்த 19ம் தேதி சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

 கடந்த 19ம் தேதி கைது செய்யப்பட்ட இவர்கள் இரண்டு நாட்கள் கழித்து மரணம் அடைந்தனர். அவர்கள் இருவரும் போலீசாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பலியானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் எஸ்ஐ ராகுகணேஷ், முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், முன்னாள் துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன், முத்துராஜ் ஆகியோர் சிபிசிஐடி மூலம் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.

 இந்த நிலையில் நேற்று மாலை சாத்தான்குளம் வழக்கில் அப்ரூவராக மாறிய ரேவதி விசாரணை செய்யப்பட்டார். தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் இவரிடம் விசாரணை செய்யப்பட்டது. தூத்துக்குடி நீதிமன்றத்தில் முதலில் அவர் விசாரிக்கப்பட்டார் அதன்பின் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டனர். மொத்தம் 5 மணி நேரம் இவர் தனது வாக்குமூலத்தை அளித்து உள்ளார்.

இந்த 5 மணி நேர வாக்குமூலத்தில் ரேவதி முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டதாக கூறுகிறார்கள். இதை தொடர்ந்து இன்று சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் காவலர் மகாராஜன் ஆஜர் ஆனார். விசாரணை நீதிபதி பாரதிதாசனை ஒருமையில் பேசியவர் காவலர் மகாராஜன். இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இன்று நீதிபதிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.


அதேபோல் இன்னொரு பக்கம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். தென்மண்டல ஐஜி முருகன், தூத்துக்குடி எஸ்பி ஜெயகுமார், நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநபு, மூன்று பேரும் காவல் நிலையத்தில் விசாரணை செய்தனர். பல்வேறு ஆதாரங்களை இவர்கள் பெற்றுக்கொண்டனர். அதோடு சிபிசிஐடிக்கு இவர்கள் அளிக்க வேண்டிய முக்கியமான ஆதாரங்களை திரட்டினார்கள்.

இதுவரை நடந்த விசாரணையில் சாட்சி சேகரித்தல், ஆதாரம் திரட்டுதல் பணிகள் முடிந்துள்ளது. குற்றவாளிகள் எல்லோரும் தற்போது வரை உறுதி செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் திரட்டப்பட்டு உள்ளது. சிசிடிவி ஆதாரங்கள் கூட இவர்களுக்கு எதிராக புறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து விசாரணைகளும் முடிந்துள்ள நிலையில் மாஜிஸ்திரட் பாரதிதாசன் விசாரணையை முடித்துக்கொண்டுள்ளார்.





Read More

July 02, 2020

சாத்தான்குளம் பெண் காவலருக்கு ஊதியத்துடன் ஒரு மாதம் விடுப்பு.. ஐஜி முருகன் தகவல்
by Editor - 0

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் இறப்பு விவகாரத்தில் சாட்சி கூறிய பெண் காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு மாத விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐஜி முருகன் தெரிவித்தார்.

சாத்தான்குளத்தில் போலீஸாரால் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 5 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.


தந்தை மகன் இறப்பு விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்தது என்ன என்பது குறித்து மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் பெண் காவலர் ரேவதி நேரடி சாட்சியம் அளித்தார்.

இதையடுத்து தனக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ரேவதி கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவருக்கு உரிய பாதுகாப்பும் ஊதியமும் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Read More

November 28, 2018

செவியை நிறைத்த மாவீரம்
by admin - 0

புனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால் தொட்டு இன்று வரை எம்முள்ளே எரிந்து வரும் நெருப்பிது.. இத்தனை காலமும் தேக்கிவைத்த தமிழரின் உணர்விது.



ஓர் புதினமோ, கட்டுரையோ அல்லது இன்னபிற எழுத்தோ அது என்ன சொல்ல வருகிறது என்பதை தாண்டி அதனுள்ளே என்ன இருக்கிறது என்கிற எதிர்பார்ப்பை கூட்டி வாசகனை தன் பக்கம் ஈர்ப்பதில் பெரும்பங்கு வகிப்பது அதன் தலைப்பு.. “விதையாய் விழுவோம் விடுதலையாய் எழுவோம்” என்கிற இந்த இவ்வெறுட்டின் தலைப்பே சொல்லிவிடுகிறது இதன் உள்ள இருப்பது வெறும் பாடல்கள் மட்டுமல்ல.. விடுதலை முழக்கமும் இதில் இடம்பெற்றிருக்கிறதென்று…




விலை கொடுத்தாலும் கிடைக்காததென்று இந்த உலகில் தனியாய் எதுவும் இல்லை உயிரைத்தவிர.. அந்த உயிரையும் விலையாய் கொடுத்து ஈழமென்ற தாய் நிலத்திற்காகவும், தமிழனின் தன்மான விடிவிற்காகவும் சமராடி உயிர் நீத்த எம் மாவீரைப் போற்றும் விதமாய் வெளிவந்திருக்கும் இந்த இறுவெட்டானது.. விதையாய் வீழ்ந்தாலும் விடுதலையாய் எழுவோம் என்கிற அறைகூவலொன்றை கொஞ்சம் சத்தமாகவே விடுத்திருக்கிறது இந்த உலகத்திற்கு..மாவீரர்களுக்கான புகழாஞ்சலி மற்றும் நம்மை தலைநிமிர்த்திய தலைவனுக்கான வாழ்த்து இதை தாண்டி நிமிராத தமிழனின் முதுகெலும்பை நிமிர்த்தும் நெம்புகோலொன்றும் பாடல்களினூடே இடம்பெற்றிருப்பாதகவே தோன்றுகிறது. இது மிகையான வார்த்தையல்ல, மிகச்சரியான வார்த்தையென்பதை இடம்பெற்றுள்ள பாடல்களை கேட்கும் இனி கேட்கபோகிற செவிகள் உணரும் என்கிற நம்பிகையானது அதிகமாகவே இருக்கிறது விடுதலையை நேசிக்கிற செவியுடைய எனக்கு.





ஒரு உயிர் கருவாகி, உருவாகி, உலகத்தை காண்பதைபோல தான் ஒரு பாடல் உருவாக்கம் பெற்று இசையாகி வெளியீடு செய்யப்படுவதென்பதும்.. மனைவியை மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதித்து விட்டு வாரந்தாவில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து திரியும் கணவனின் உணர்வை போன்றது அது… ஒவ்வொரு பாடலையும் கேட்கும் பொழுது சுகபிரசவம் அடைந்த ஓர் குழந்தையை காண்கிற மகிழ்வை தருகிறது எனக்கு.. பாடல் எழுதிய அத்தனை பேருக்கும் புரட்சிக்கர வாழ்த்துகளும், நெஞ்சார்ந்த வணக்கங்களும்..



நல்லதொரு வரிகளுக்கு உருக்கொடுத்து இசையமைத்த இசையமைப்பாளர் தாமசு இரத்னம் அவர்களுக்கும், குரல்கொடுத்த பாடகர்களுக்கும், இதில் இடம்பெற்ற இசைக்காய் உழைத்த கடைநிலை ஊழியர்கள் அத்தனை பேருக்கும் இசை ரசிகனான எனதின் நெஞ்சார்ந்த நன்றிகள்.. நல்லதொரு இசையை தந்திருக்கிறார்கள் அதற்கு…

பார்க்கும் போதே ஈர்க்கிற வகையில் அட்டைப்படத்தை வடிவமைத்திருக்கிறார் வரைகலைஞர் அண்ணன் இதயதூரிகா.. விடுதலைத்தனலை தூரிகையில் அள்ளியெடுத்து தெளித்திருக்கும் அவரின் நேர்த்திக்கு எனது வாழ்த்துகள்.

மண்ணுக்காய் போராடி உயிர்நீத்து வீரகாவியமாகி காற்றோடு கலந்து இன்று எம் மூச்சோடு நிறைந்தவிட்ட மாவீரர்களை போற்றும் விதமாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த இசைப்பேழைக்காய் உழைத்த உறவுகள் மற்றும் வெளியில் நின்று பணமாகவும் இனமாகவும் தோள்கொடுத்த அனைவருக்கும் தாயக விடுதலையை நேசிக்கின்ற அத்தனைபேருமே நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.. அந்தவகையில் நானும்..



நல்லதோர் இசைப் பேழையொன்றின் மூலமாக மாவீரரின் ஈகைத்தை போற்றும் முகமாய் இந்த இறுவெட்டை வெளீயிடு செய்ய உழைத்த அத்தனைபேருக்கும் நன்றிகள்.

மேற்சொன்னது போல இதில் இடம்பெற்றிருப்பது பாடல்கள் அல்ல.. முள்ளிவாய்க்காலில் முடிந்துபோனதாய் சொன்ன ஒர் இனத்தின் விடுதலை முழக்கம்.. போராட்டத்தின் தொடர்ச்சி.. புரட்சியின் நீட்சி.. கேட்கும் காதுகள் இதை உணரும் என்பது மட்டும் நிச்சயம்.

-சா.அருண் பிரபாகரன்

Read More

September 10, 2018

7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம்.. ஆளுநருக்கு பரிந்துரை!
by admin - 0

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடங்கிய கூட்டத்தில் 7 தமிழர்கள் விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநருக்கு 161வது விதியின் கீழ் பரிந்துரைப்பது என முடிவு செய்யப்பட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கூறி வழக்கை முடித்து வைத்துவிட்டது.

இதையடுத்து 7 பேர் விடுதலை குறித்து , அமைச்சரவையை கூட்டி விவாதித்து, சட்டநிபுணர்களின் ஆலோசனையும் பெற்று 7 பேர் விடுதலை குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதற்கேற்ப எதிர்க்கட்சிகளும் உடனடியாக அமைச்சரவையை கூட்டி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.


இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடங்கியது. இதில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விதி எண் 161-இன்கீழ் அரசு, ஆளுநருக்கு பரிந்துரைப்பதாக அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் தெளிவாக தமிழக அரசுக்கு, இந்த விஷயத்தில் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ளது. எனவே தமிழக அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது. அமைச்சரவை பரிந்துரையை ஆளுநர் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.
Read More

August 07, 2018

காலமானார் கலைஞர் கருணாநிதி
by admin - 0

திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் மறைந்தார். காவேரி மருத்துவமனையில் 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு இன்று சிகிச்சை பலனின்றி கருணாநிதி மறைந்தார்.


இதைத்தொடர்ந்து அவரது உடல் அவர் வாழ்ந்த கோபாலபுரம் வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதனை முன்னிட்டு கருணாநிதியின் சென்னை கோபாலபுரம் வீட்டில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதிக வெளிச்சம் கொண்ட விளக்குகள் கோபாலபுரம் வீட்டின் அருகே கட்டப்பட்டு வருகின்றன. அவரது வீட்டிற்கு இரும்பு நாற்காலிகள் கொண்டு வரப்படுகின்றன.
கருணாநிதியின் கார் ஏற்கனவே அகற்றப்பட்டு விட்டது. இந்நிலையில் வீட்டில் இருந்த பொருட்களும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
Read More

June 29, 2018

வீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்
by admin - 0

தாயகத்தில்  வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு   நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்களுக்கு  துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு



 *இரண்டாவது* *கட்டமாக* இன்று வெள்ளிக்கிழமை (29/06/2018)
 மாலை *3.00 மணிக்கு* 
 *முப்பது துவிச்சக்கர* வண்டிகள் *மட்டக்களப்பில்* உள்ள  முதலைக்குடா கொக்கட்டிச் சோலை என்னும் இடத்தில் 

வீரத்தமிழர் முன்னணியினரால்  உதவி வழங்கல் நிகழ்வு நடைபெற்றுள்ளது. 
*வீ,த.மு* 
 *VTM* 
 *UK* 
  🙏
தொடர்புகளுக்கு வீ,த,முன்னணி ஐக்கியராச்சியம்
 *07436287931/2/3/5*
Charity number 1178947















Read More

May 24, 2018

லண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்
by admin - 0

லண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



தமிழகம் தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதன்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 13 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 








இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் தலைதூக்கியுள்ளனர்.இந்நிலையில், குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் ஒன்று கூடிய தமிழ்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.





முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வாலின் மகனை லண்டன் வாழ் தமிழர்கள் தாக்கியுள்ளார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.http://feeds.feedburner.com/vivasaayi/QMzm



Read More

May 22, 2018

என்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை
by admin - 0

கார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போலீசார் சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர்.
வைத்து போலீசார் சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர்.


இதில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் 17 வயது மாணவி வெனிஸ்டா என்பவரும் பலியாகியுள்ளார். ஸ்டெர்லைட்டை மூடுங்கள் என கோஷமிட்ட அந்த மாணவியின் வாயில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது.


வாயில் பாய்ந்த குண்டு கழுத்தில் புகுந்ததால் ரத்த வெள்ளத்தில் அந்த மாணவி சம்பவ இடத்தில் பலியானார். அவரது வாயில் இருந்து கடைசியாக வெளி வந்த வார்த்தைகள், "எங்களை அழிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடு" என்பதுதான். ஆனால், இதை சொன்ன அந்த மாணவி அழிக்கப்பட்டுள்ளது பெரும் கொடுமை.

இலங்கையில், தமிழ் இளம் பெண்கள் சிங்கள ராணுவத்தால் கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஈடாக உள்ளது பெண்கள் மீதான இந்த தாக்குதல் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

Read More

April 24, 2018

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுவதாக வழக்கறிஞர் ராஜசேகரன் அறிவிப்பு
by admin - 0

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகுவதாக வழக்கறிஞர் ராஜசேகரன் அறிவித்துள்ளார். தமிழக அரசுக்கு எதிராக நீண்டகாலமாக கருத்துகளை தெரிவித்து வந்த கமல்ஹாசன் அண்மையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இதன் கொள்கைகளையும், கொடியையும் மதுரை பொதுக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.

அன்றைய தினமே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பட்டியலும் வெளியிடப்பட்டன. இதில் முன்னாள் காவல் துறை அதிகாரி மவுரியா, அடையாறு மாணவர் நகலக உரிமையாளர் சௌரிராஜன் உள்ளிட்ட பலர் சேர உருதுணையாக இருந்தவர் வழக்கறிஞர் ராஜசேகரன். கருத்து வேறுபாடு காரணமாக வழக்கறிஞர் ராஜசேகரன் கட்சியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைகாட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், கடந்த 6 மாதங்களாக கட்சி உருவாவதற்காக பாடுபட்டேன். ஆனால் அதற்கான அங்கீகாரம் எனக்கு கிடைக்கவில்லை. மேலும் கட்சியில் உரிய மரியாதையும் கிடைக்கவில்லை. என்னுடைய வழக்கறிஞர் தொழிலை சரியாக பார்க்க இயலவில்லை. இத்தகைய காரணங்களால் நான் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று அறிவித்துள்ளார்.


Read More