தமிழ் சினிமா நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிசச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அரவது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் 24 மணி நேரத்திற்கு பிறகே சொல்ல முடியும் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நேற்று மாலை தெரிவித்தனர்.
Dropdown Menu
April 17, 2021
ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் தொடங்கியது விவேக்கின் இறுதி ஊர்வலம்.. திரளானோர் பங்கேற்பு!
by
Editor
12:22:00
-
0
தமிழ் சினிமா நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிசச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அரவது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் 24 மணி நேரத்திற்கு பிறகே சொல்ல முடியும் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நேற்று மாலை தெரிவித்தனர்.
January 03, 2021
கடைசி நேரத்தில் சுருக்கை பிடித்துக் கொண்டு திணறிய சித்ரா?வசமாக சிக்கிய ஹேமந்த்!
by
Editor
11:58:00
-
0
சின்னத்திரை பிரபலமான நடிகை சித்ரா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி தவறான முடிவால் உயிரிழந்த சம்பவம் பலரையும் கவலையில் ஆழ்த்தியது.
எனினும், சித்ராவின் உயிரிழப்பு தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் பல தரப்பிலும் இருந்து எழுந்தது.அதிலும், சித்ராவின் முகத்தில் இருந்த தழும்புகள் எப்படி ஏற்பட்டிருக்கும் என்ற கேள்விக்கு இதுவரையில் பல விளக்கங்கள் கொடுக்கப்பட்ட போதிலும் அவற்றை நம்பமுடியவில்லை என்றே கூறலாம்.இந்த நிலையில், சம்பவம் நடந்த ஹோட்டல் அறையில் மருத்துவர்கள் செய்த ஆய்வில் விளக்கப்பட்டது என்ன? ஒருவேளை சித்ரா முயற்சி செய்திருந்தால் அவரின் முகத்தில் எப்படி காயங்கள் ஏற்பட்டிருக்கும்? அவரது சுய முடிவாகவும் இருக்கலாம், அல்லது கொலையாகவும் இருக்கக்கூடும் என மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சித்ராவின் காதல் கணவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தது முதல் 6 நாட்கள் தொடர் விசாரணைக்கு பிறகு ஹேமந்த் கைது செய்யப்பட்டது வரை சித்ராவின் மரணத்தில் கேள்விகள் எழுந்தன.
ஆனால், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சித்ராவின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவ சட்டவியல் மருத்துவர்கள் அதனை, அவரது சுய முடிவில் எடுத்தது என உறுதி செய்தனர்.
கழுத்தில் சுருக்கு எப்படி? மருத்துவர்கள் விளக்கம்
சித்ராவின் கழுத்தில் எந்த தழும்பும் இல்லை, நாக்கு வெளிப்படவில்லை என்ற தூக்கிற்கான விளைவுகள் ஏதும் இல்லாத நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பாக சில கேள்விகள் எழுகின்றன. இந்நிலையில், சித்ராவின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவ குழுவில் இருந்து சிலர் தனியார் செய்தி புலனாய்வு நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலில், ” சம்பவம் நடந்த இரண்டாவது நாளில் சித்ரா உயிரிழந்த அந்த ஹோட்டலுக்கு சென்றோம். அங்கு சித்ரா தங்கியிருந்த அறையை ஆய்வு செய்தோம், அந்த அறையில் தூக்கிட்டுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. சித்ராவுடைய கழுத்தின் முன்புறத்தில் தழும்புகள் இல்லை. ஆனால், கழுத்தின் பின்புறம் துணி இருக்கப்பட்ட காயங்கள் உள்ளன. அவர் கழுத்தில் சுருக்கு போட்டுக்கொண்ட பின்னர் துடித்துக்கொண்டிருந்த வேளையில் தன்னை விடுவிக்க முயற்சித்திருக்கலாம். அப்போது அவருடைய நகங்கள் அவரது முகத்தை கிழித்து காயத்தை ஏற்படுத்தியிருக்கும்” என இவ்வாறு கூறியுள்ளனர்.
இருவரும் குடிப்பார்களாம்.
பொலிசாரின் விசாரணையில் நேரடியாக வெளிவராத சில தகவல்களும் சித்ராவின் தனிப்பட்ட சில பழக்கங்களை தெரியப்படுத்துகிறது. அதாவது, சித்ராவின் உடமைகளை சோதனையிட்டபோது அவரது ஹேண்ட் பேக்கில் 150 கிராம் கஞ்சா இருந்ததாகவும் கூறப்படுகிறது. சித்ராவுக்கு போதை பழக்கம் இருந்ததாகவும் அவர் அடிக்கடி ஹேமந்த்துடன் சேர்ந்து மது குடித்துள்ளார் என்றும் ஏற்கனவே ஹேமந்த்தின் தந்தை ரவிச்சந்திரன் கூறியுள்ளார். ஆனால், சித்ராவின் உயிரிழப்பிற்கும், போதை பழக்கத்துக்கும் எந்த அளவில் சம்மந்தம் உள்ளது என்று தெரியவில்லை
அடிப்படை காரணம் ஹேமந்த்
ஆனால், சித்ராவை சந்தேக கண்ணோட்டத்தால் ஹேமந்த் அடிக்கடி சண்டையிட்டு வந்ததும் அதனால் சித்ரா மன உளைச்சலில் இருந்ததும் பொலிஸார் கொடுத்த முதற்கட்ட தகவல். மேலும், சித்ராவுக்கு இரண்டரை வருடங்களாக உதவியாளராக இருந்து வந்த சலீம் என்பவரும், ஹேமந்த் எப்படியெல்லாம் சித்ராவை கொடுமை படுத்தி வந்தார் என்பதை விளக்கி அந்த தகவலை நிரூபணம் செய்தார். ஹேமந்த் மீது அதீத காதலை வைத்திருந்த சித்ராவை அவர் சந்தேகப்பட்டு சண்டையிட்டதாலும், சம்பவம் நடந்த அன்று ‘செத்து போ’ என்று கூறியதாலும் மேலும், போதை பழக்கத்தின் விளைவாகவும் சித்ரா துணிந்திருக்கலாம் என்றும் முக்கிய தரப்பில் இருந்து வரும் செய்திகள். அத்துடன், சித்ராவை ஹேமந்த் அடித்து துன்புறுத்தி இருக்கலாம் என்றும், அதன்பின் கதவின் பொத்தானை அழுத்திவிட்டு பின்னர் வெளியில் வந்த பிறகு கதவை சாத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சிபிஐக்கு மாறுமா?
இதற்கிடையில், பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக உட்சபச்ச ரசிகர்களை பெற்ற சித்ராவுக்கு மார்க்கெட்டிங் அதிகமானதால் அவர் தனது உழைப்பை நம்பியே ஒரு கோடிக்கும் மேல் கடன் பெற்று வீடு, கார் ஆகியவற்றை வாங்கியுள்ளார். ஆனால், அதற்கு பின்னால் அரசியல் புள்ளிகளை தொடர்புபடுத்தியும் சமூக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. காதல் கணவனின் சித்திரவதையுடன் சேர்ந்து கடன் பிரச்சினையும் சித்ராவின் முடிவிற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. நசரத்பேட்டை போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், மகளின் மரணத்தின் முழு முக்கிய காரணத்தை கண்டுபிடிக்க சிபிஐ விசாரிக்க வேண்டும் என சித்ராவின் தாயார் மனு அளித்துள்ளார்.
இன்றுவரை சித்ராவின் உயிரிழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, உலகளவில் அவருடைய ரசிகர்களையும் பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
October 19, 2020
முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்
by
Editor
11:31:00
-
0
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமான 800 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்பது கோரிக்கை. ஈழத் தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர்; இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருப்பவர் என்பதால் முரளிதரன் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க எதிர்ப்பு எழுந்தது.
முரளியின் முதல் அறிக்கை
இதனை அடுத்து முத்தையா முரளிதரன் முதலில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், தமிழனாக நான் பிறந்தது என் தவறா? ஈழத் தமிழருக்கு நான் இப்போதும் உதவி வருகிறேன் என கூறியிருந்தார். ஆனாலும் உலகத் தமிழர்கள் மத்தியில் முத்தையா முரளிதரனுக்கு கடு எதிர்ப்பு நீடித்தது.
நடிக்க வேண்டாம்முரளி மீண்டும் அறிக்கை
இந்த நிலையில் தம்முடைய வரலாற்று படத்தில் விஜய்சேதுபதி நடிக்க வேண்டாம் என முரளிதரன் ஒரு வேண்டுகோள் விடுத்து இன்று மற்றொரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், விஜய் சேதுபதி அவர்களின் கலைபயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்க் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக் கொள்கிறேன் எனவும் முத்தையா முரளிதரன் கூறியிருந்தார்.
விஜய்சேதுபதிக்கு வேண்டுகோள்விஜய் சேதுபதிக்கு முரளி வேண்டுகோள்
மேலும், எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என்று நடிகர் விஜய்சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை என்றும் முரளி கூறியிருந்தார்.
விஜய் சேதுபதி விலகல்விலகினார் விஜய்சேதுபதி
முத்தையா முரளிதரனின் இந்த வேண்டுகோள் அறிக்கையை தமது ட்விட்டரில் ஷேர் செய்து நன்றி வணக்கம் என்று மட்டும் சூசகமாக பதிவிட்டுள்ளார் நடிகர் விஜய்சேதுபதி. இதனால் முத்தையா முரளிதரன் திரைப்படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலகுவது உறுதியாகி உள்ளது.
July 12, 2020
நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கு கரோனா தொற்று
by
Editor
14:27:00
-
0
July 10, 2020
த்ரிஷாவுக்கு எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன்!
by
Editor
12:45:00
-
0
June 04, 2018
ரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்
by
admin
19:24:00
-
0
ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது.தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில் காலா திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டுமென உலகம் முழுவதிலும் இருக்கும் பல தமிழர் அமைப்புகள் அறிவித்து கொண்டிருக்கின்றன.
இதற்கு நோர்வே, சுவிஸ் நாடுகளுக்கான திரைப்பட விநியோகித்தர்கள் ஏற்றுக்கொண்டு தமது நாடுகளில் காலா திரைப்படத்தை திரையிடவில்லை என அறிவித்துள்ளனர்.
February 25, 2018
பிரபல திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார்.
by
admin
00:15:00
-
0
பிரபல திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த 1967-ஆம் ஆண்டு கந்தன் கருணை படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன இவர் அதன் பின் நடிகர்களான ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் நடித்து தனக்கென்று திரையுலகில் தனி முத்திரை பதித்தார்.
இந்நிலையில் ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.நேற்று இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார்.
இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர்.
ரஜினி, கமல் போன்ற தமிழின் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீதேவி. அவர் நடித்த 16 வயதினிலே முக்கியமானப் படம்.
திருமணத்திற்குப் பிறகு திரைத்துறையை விட்டு விலகிய அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி ஆனார். அவருடைய மரணம் திரையுலகினருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
January 16, 2018
மண்டையோடு நாய் நக்கும்…! காலத்திற்கேற்ற சமூகத்திற்கு அவசியமான பாடல்..!
by
admin
19:29:00
-
0
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதி தப்பிச்சென்றதாக ஒரு செய்தியோடு ஆரம்பிக்கின்றது இந்தப்பாடல்.தமிழர்களின் கலாச்சாரமான “கற்பை” கருவாகக்கொண்டு, நாட்டில் அரங்கேறும் பல தரப்பட்ட சீர்கேடுகளை இந்தப்பாடல் வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றது.
பலரது உள்ளத்தை உலுக்கிப்பதற வைத்த பாடசாலை மாணவியைக் கடத்திக் கற்பழித்துக் கொலை செய்த கொடூர சம்பவத்தின் சூத்திரதாரிக்குத்துணை போன அரசியல் மந்தி(ரி) களின் முகத்திரை இந்தப்பாடல் மூலம் நன்கு கிழித்துத் தொங்கவிடப்பட்டதுடன், மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னரும் அதாவது எதிர்காலத்தில் மீண்டும் தப்பிக்க எத்தனித்தால் என்ன ஆகும் என்பதனை கன கச்சிதமாக பாடலுடன் பாடலாய் நெற்றிப்பொட்டில் சுடுவதைப்போன்று வெளிப்படுத்தியிருக்கின்றது.
“கற்பு” என்பது அழிக்கப்பட்டாலும் சரி அது இழக்கப்பட்டாலும் சரி தமிழினமே அழிந்து விடும் என்ற முதல் ஆரம்ப வரிகளே பாடலுக்கு மகுடம்.
மரண தண்டனைக்கைதியாக நடித்திருப்பவரின் இயல்பான நடிப்பைப்பாராட்டியே ஆக வேண்டும். கதைக்கருவிற்கேற்ற அசத்தல் இசையும் பாடல் வரிகளும் விறு விறுப்பானவை. பல நாள் கடின உழைப்பில் படைக்கப்பட்ட பாடல் என்பது கண்கூடாகத்தெரிகின்றது.பாடலின் இரண்டாவது பகுதியாக காதல் என்னும் போர்வையில் இருவரை ஏமாற்றுகின்றாள் ஒரு பெண். அவளுக்கும் தப்பிச்சென்ற மரண தண்டனைக்கைதிக்கும் ஒரே முடிவினை வழங்குவதாக பாடல் மற்றும் காட்சிகள் மூலம் மிக அருமையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது.
“இது இப்பிடித்தான் நாங்கள் அப்பிடித்தான்”
-அரசி நிலவன்
November 23, 2017
முகமிழந்த எதிலிகள் - குறும்படம் short film
by
admin
23:40:00
-
0
முகமிழந்த எதிலிகள் - குறும்படம்
தமிழுக்கும் தமிழனுக்கும் வரப்போகும் பிரச்சனையை எடுத்துக் கூறும் கதை
July 25, 2017
BIGG BOSS ஓவியா வெற்றிபெறுவது உறுதி.
BIGG BOSS மனித நிஜ உணர்வுகளின் பிம்பம்.
by
admin
06:39:00
-
0
June 18, 2017
புத்தாக்க அரங்க இயக்கத்தின்உயிர்ப்பு தெருவெளி நாடக ஆற்றுகை
by
admin
16:32:00
-
0
June 15, 2017
நடிகரும்,பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
by
admin
09:35:00
-
0
May 03, 2017
வடமராட்சி மாலை சந்தை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயத்திற்கு புதிய பாடல் வெளியீடு
New song
by
admin
17:07:00
-
0
March 21, 2017
தமிழா நீ தமிழா? ஈழத்திலிருந்து தமிழர்களுக்கான ஒரு பாடல்.
by
admin
09:32:00
-
0
தடைகள் பல தாண்டி
படைகள் பல வென்ற
தமிழன் போலவா
இருக்கின்றோம்
சொல்லிசை - கலாமோகன் பகிர்தன்
உரையிசை- த.மதீசன்
வரிகள்- கலாமோகன் பகிர்தன், தி.தர்மலிங்கம்
ஒலிச்சமப்படுத்தல்- ரஞ்சன் கிருஷ்ணா
ஓவியங்கள் - திரோஸ்கி மருது
ஒளித்தொகுப்பு - சசிகரன் யோ
இசை- த.மதீசன்
தயாரிப்பு- பூவன் மீடியா
March 16, 2017
விஜய் மீண்டும் சாதனை! ரசிகர்கள் உற்சாகம்
by
admin
14:22:00
-
0
அதே நேரத்தில் படத்திற்கு சில அரசியல் சிக்கல்கள் இருந்தது எனவும் சொல்லப்படுகிறது. படத்தில் பாடல்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்பது சிலரின் கருத்து.
ஆனாலும் ஏற்கனவே நில்லாயோ பாடல் இணையதளத்தில் 1 கோடி பார்வைகளை தாண்டியது. தற்போது பாப்பா பாப்பா பாடலும் தற்போது 1 கோடி பார்வைகளை தாண்டியுள்ளது.
February 10, 2017
சி3 (சிங்கம்3) விமர்சனம்
by
Editor
13:12:00
-
0
December 20, 2016
இரண்டு இட்லி கூட கிடைக்காமல்..! பட்டினியோடு இறந்த சூப்பர் காமெடி நடிகர்..!!
by
admin
16:52:00
-
0
பல கம்பெனிகள் ஏறி இறங்கியதில் சின்ன சின்ன கேரக்டர்கள் ஓரிரு காட்சிகள் மட்டுமே நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.
சென்னை புறநகரில் ஓலைக் குடிசையில் தான் வாழ்க்கை.. பஸ் பயணம் ஸ்டூடியோவில் சூட்டிங்.. மீண்டும் இரவு நடந்தே தனது வீடு போய் சேருவான்.
1980களில் மெல்ல மெல்ல வெளியே தெரிய ஆரம்பித்தார். காரணம் வித்தியாசமான தோற்றம், சென்னைப் பாஷை..! எஸ் அவர் தான் லூஸ்மோகன்.
ஆர்.சுந்தர்ராஜன் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார். ராமநாராயணன் ரெகுலராக வாய்ப்பு கொடுத்தார்.
சூரக்கோட்டை சிங்க குட்டி படம் இவரை தனித்து அடையாளம் காட்ட லூஸ்மோகன் காலம் உருவானது.
இவர் இல்லாத படங்களே இல்லை.. தனி பாடல் காட்சியே வைத்தார்கள். “கண்ணுன்னா கண்ணு எம்மாம் பெரிய கண்ணு” என்றொரு பாடல் இவரை மேலும் உயர்த்தியது.
1990 முதல் 1999 வரை லூஸ்மோகன் காட்டில் அடைமழை பணமும், புகழும் குவிந்தது. ஏற்கனவே திருமணம் ஆகி பிள்ளைகள் இருந்தார்கள்.
வீடு வாங்கினார், கார் வாங்கினார். ஆசை ஆசையாய் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.
இவர் செய்த மிகப் பெரிய தவறு தனக்கென்று எதுவும் சேர்த்து வைக்காமல் பிள்ளைகள் பெயரில் சொத்துக்கள் வாங்கினார்.
லூஸ்மோகனுக்கு வயதானது. படவாய்ப்புகள் குறைந்தது. வீட்டில் முடங்கிப் போனார். பிள்ளைகளும் ஒரு வாய் சோறு போடவில்லை.
பசி, பட்டினி.. மூப்பு நோயோடு போராடியவர். எனக்கு தினமும் இரண்டு இட்லி கொடுங்கள் என்றார்.
அதுகூட போடவில்லை. பார்த்தார். போலீஸ் கமிஷனர் ஆபீஸ் போனார். பிள்ளைகள் மீது புகார் கொடுத்தார். பெரிய பரபரப்பானது.
November 13, 2016
இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு குறும்படம் “தனியன்
by
admin
11:55:00
-
0
இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு குறும்படம் “தனியன்
ஒரு காலமும் நாங்கள் ஒருவரை பார்த்து குறைத்து எடைபோடவும் கூடாது அதே நேரத்தில் ஒருவரை பற்றி தெரியாமலும் நாங்கள் வீரம் பேசவும் கூடாது. அதேபோல் அவரை பற்றி தெரியாமலும் அவரை தரை குறைவாகவும் பேசக்கூடாது; இது இயல்பான ஒரு முக்கியமான ஒன்றாகும்.
எழுத்து மற்றும் இயக்கம் லீ அவர்கள்
இசை ஜஸ்ரின்
நடித்தவர்கள் ஜீவா, ரமேஸ், ஜஸ்ரின் ஆகியோரின் நடிப்பில் வெளியாகியது இந்தக் குறும்படம்
நாங்கள் ஒருவரை பற்றித் தெரியாமல் எங்களின் சுயவிருப்பங்களுக்காக மது அருந்தி சுயநினைவு இழந்து ஒருவரை தரைகுறைவாக பேசுவது எப்படி ஒரு கேவலமான விடயம் தெரியுமா…?
அதை அழகாக இந்தக் குறும்படத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. அத்தோடு இதில் ஒரு போராளியை நாம் மதிக்க வேண்டும், அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதையும் குறிப்பிட்டுள்ளமை போற்றப்படவேண்டியவை.
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
கண்டிப்பாக இளைய சமூதாயத்தவர்கள் இக் குறும்படத்தைப் பாருங்கள்
நன்றி மீண்டும் சந்திப்போம்
அன்புடன் கஜன்








Social Buttons