Latest News

July 20, 2015

கூட்டமைப்பு தொடர்பினில் வலுக்கும் எதிர்ப்பு
by admin - 0

கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பெண் வேட்பாளர் மதனி ஜெபநேசன் தொடர்பினில் வடமராட்சியினில் பலதரப்புக்களும் கடும் சீற்றமடைந்துள்ளன.

தோல்வி அடைய வேண்டுமென்ற எதிர்பார்ப்பினில் அவர் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வலுவான போட்டியாளர்கள் முன்னதாக தோற்கவேண்டுமென எதிர்பார்த்து அவர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் ஆதவாளர்கள் தரப்பினில்
தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பினில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செல்வராசா கஜேந்திரன் மற்றும் விரிவுரையாளர் இராசகுமாரன் ஆகிய மும்மூர்த்திகள் வடமராட்சியினில் களம் இறக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் வாக்கு வங்கியினை திரட்டும் வலுக்கொண்டவர்களாவர்.

ஆனால் கூட்டமைப்பினில் தோற்றுப்போவது நிச்சயமென தெரிந்து சுமந்திரன் ஒருபுறமிருக்க பருத்தித்துறை நகரசபை தலைவருடன் தொடர்புபடுத்தி சக உறுப்பினர்களால் விமர்சிக்கப்படும் பெண்மணியொருவரை களமிறக்கியிருப்பது சீற்றத்தையே பலரிடமும் ஏற்படுத்தியிருக்கின்றது.

தாம் அவரிற்காக பிரச்சாரம் செய்யவோ வாக்கு வேட்டையாடவோ களமிறங்கப்போவதில்லையென பகிரங்கமாக அவர்கள் விடுத்துள்ள அறிவிப்பு கூட்டமைப்பினரிடையே பலத்த அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. ஏற்கனவே நகரசபை தலைவரான சபா.ரவீந்திரன் மீது பாலியல் துஸ்பிரயோக
குற்றச்சாட்டுக்கள் பல முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments