Latest News

December 29, 2014

பிஸ்கட்டில் எலும்பு கலப்பு
by admin - 0

உத்தரபிரதேசம் மாநிலம் மொராபத் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான பிஸ்கட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது.

அங்கு இன்று காலை உத்தரபிரதேசத்தின் உணவு மற்றும் வழங்கல் துறை அதிகாரிகள்  பிஸ்கட் தொழிற்சாலையில் அதிரடி சோதனை நடத்தினர்.

பிஸ்கட் தயாரிக்கும் இடங்களில் சோதனை மேற்கொண்ட உணவு வழங்கல் அதிகாரிகள் பிஸ்கட் உற்பத்தியில் எலும்பு துண்டுகளை கலந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் இந்த தொழிற்சாலை உணவு வழங்கல் துறை மீறி செயல்பட்டதாகவும், பிஸ்கட் தொழிற்சாலையில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலைக்கு அமர்த்தபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

« PREV
NEXT »

No comments