Latest News

October 27, 2019

87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம் 
by Editor - 0

குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

குழந்தை இருக்கும் குழிக்கு அருகில்

ரிக் இயந்திரம் மூலம் தற்போது அகலமான குழி தோண்டப்படுகிறது

100 அடியை எட்டியதும் உள்ளே இறங்கி குழந்தையை மீட்க ஆறு பேர் கொண்ட குழு குழிக்குள் இறங்க தாயாரான நிலையில்

தற்போதைய நிலவரம் சுரங்கம் வழியே குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

தனி ஒருவனாக சென்று மீட்டுவரத் தயார் என வீரர்களில் ஒருவரான நகைமுகன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி தினமான இன்று உலகத் தமிழர்களின் பிரார்த்தனையாக சிறுவன் சுஜித்தை எப்படியாவது காப்பாற்றப்பட வேண்டும் என்பதாகவே அமைந்துள்ளது.

ஊடகங்கள் ஊடாக உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் சிறுவன் சுஜித் மீட்கப்படும் காட்சிகளை கண் கலங்கியபடி பார்த்து வருகின்றனர்.

எப்டியாவது சுஜித் காப்பாற்றப்பட வேண்டும் என்று தமிழர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்ணீருடன் காத்திருக்கின்றனர் தமிழர்கள்.

சுஜித் என்ற சிறுவன் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்ற பிரார்த்தனை தொடர்கிறது 

« PREV
NEXT »

No comments