ஶ்ரீலங்கா சுதந்திர தினத்தில் ஶ்ரீலங்கா உயர்தானிகர் அலுவலகம் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை கழுத்ததை வெட்டுவதை போன்ற சைகையை காட்டிய லண்டனில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா தூதுவராலய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரிகேடியர் பெர்னாண்டொ அவர்களுக்கு ஆதரவாக சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
பிரித்தானியாவில் வாழும் தமிழீழ விடுதலை புலிகள் ஆதரவான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே புலம்பெயர் சிங்களவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலை புலிகள் ஆதரவாளர்களின் செயற்பாட்டுகளுக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிங்களவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட ஏனைய அமைப்புகளுக்கு வழங்கப்படாத சலுகைகள், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வழங்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிங்களவர்கள் கோஷமிட்டனர் அதன் போது தமிழீழ ஆதரவாளர்கள் சிலர் தமிழீழ தேசியக்கொடி ஏந்தியவாரு வருகை தந்தனர் அதன் போது சிங்களவர்கள் தமிழர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட இருந்தது இதன் போது காவற்துறையினர் தலையிட்டு தமிழீழ தேசியக்கொடியை ஏந்திய இளைஞர் திரும்பிச்சென்றனர்
No comments
Post a Comment