Latest News

May 11, 2017

சர்­வ­தேச விசா­ர­ணை­களை ஒருபோதும் அனு­ம­திக்க முடி­யாது
by admin - 0

இறுதி யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் முன்­வைக்கும் கார­ணிகள் நியா­ய­மா­ன­வையேயாகும். எனினும் ஒரு தரப்­பினர் சர்­வ­தேச விசா­ரணை

பொறி­முறை அவ­சி­ய­மென கருத்­துக்­களை முன்­வைக்கின்ற போதிலும் இவர்­களின் கோரிக்­கையை

சாத­க­மாக பயன்­ப­டுத்தி நாட்டில் மீண்டும் குழப்­பங்­களை ஏற்படுத்த புலம்­பெயர் அமைப்­புக்கள் முயற்சிக்கின்றன. எவ­ரையும் தனிப்­பட்ட முறையில் திருப்­திப்­ப­டுத்த சர்­வ­தேச விசா­ர­ணை­களை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது என்று நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

தமிழ் மக்­களின் நியா­ய­மான கோரிக்­கையை கருத்தில் கொண்டு சர்­வ­தேச விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க கருத்­து தெரிவித்துள்ள நிலையிலேயே நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ இவ்­வாறு தெரி­வித்துள்ளார்.

இவ்­வி­டயம் தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

இலங்­கையில் இடம்­பெற்ற இறுதி யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட தரப்பு முன்­வைக்கும் கோரிக்கைகள் நியா­ய­மான கார­ணி­க­ளாகும். யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட, அக­தி­யாக்­கப்­பட்ட மக்கள் மீண்டும் தமது சொந்த பகு­தியில் குடி­ய­மர்த்­தப்­படல் வேண்டும் , காணாமல் ஆக்­கப்­பட்ட மக்கள் தொடர்பில் உண்­மை­களை கண்­ட­றிவதுடன் ஏனைய யுத்த குற்­றங்கள் தொடர்பில் சரி­யான வகையில் அர­சாங்கம் செயற்­பட வேண்டும் என தமிழர் தரப்பு முன்­வைக்கும் கார­ணிகளை நிரா­க­ரிக்க முடி­யாது. அவை ஏற்­று­கொள்­ள­கூ­டிய விட­யங்­க­ளாகும்.

யுத்­தத்தின் பின்னர் தொடர்ச்­சி­யாக இந்த கார­ணிகள் முன்­வைக்­கப்­பட்டு அழுத்தம் கொடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. எனினும் முன்­னைய ஆட்­சியில் நல்­லி­ணக்கம் மற்றும் மீள் குடி­யேற்ற நகர்­வுகள் கவ­னத்தில் கொள்­ளப்­ப­டாத நிலை­மையில் சர்­வ­தேச அழுத்தம் பல­ம­டைய ஆரம்­பித்­தது.

எனினும் நாம் ஆட்­சி­க்கு வந்து இரண்டு ஆண்­டு­களில் நல்­லி­ணக்­கத்தை பலப்­ப­டுத்தும் வேலைத்­திட்­டத்தை பல­மாக முன்­னெ­டுத்து வரு­கின்றோம். கடந்த இரண்டு ஆண்­டு­களில் வடக்கு, கிழக்கு பகு­தி­களில் மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

படை­களின் வசம் இருந்த பொது­மக்­களின் காணிகள் பெரும்­பாலும் விடு­விக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதேபோல் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் பல­மான வகையில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இன ஐக்­கியம், தேசிய ஒரு­மைப்­பாட்டை உரு­வாக்கும் நகர்­வு­க­ளுக்கு அர­சாங்கம் முக்­கி­யத்­துவம் கொடுத்து வரு­கின்­றது.

எனினும் அர­சாங்கம் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்கும் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்ற போதிலும் மறு­புறம் புலம்­பெயர் அழுத்­தங்கள் மற்றும் நாட்டில் சர்­வ­தேச தலை­யீ­டு­களை ஏற்­ப­டுத்தி அதன் மூலம் தமது தேவை­களை நிறை­வேற்றும் வகையில் சில தரப்பினர் செயற்­பட்டு வரு­கின்­றனர்.

இலங்­கையில் ஒரு தரப்­பினர் சர்­வ­தேச தலை­யீ­டுகள், கலப்பு விசா­ரணை பொறி­முறை என்­பன தொடர்பில் கருத்­துக்­களை முன்­வைத்த போதிலும் இவர்­களின் கோரிக்­கையை சாத­க­மாக பயன்­ப­டுத்தி நாட்டில் மீண்டும் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த சர்­வ­தேச தரப்பு அமைப்­புகள் எதிர்­பார்த்து உள்­ளன. அந்த கார­ணி­க­ளுக்கு ஒரு­போதும் எம்மால் இட­ம­ளிக்க முடி­யாது.

இலங்­கையில் இடம்­பெற்ற போர் குற்­றங்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை உள்­ளக விசா­ரணை பொறி­முறை மூலமே மேற்­கொள்­ள­மு­டியும். இந்த விட­யத்தில் சர்­வ­தேச தரப்பை தலை­யிட அனு­ம­திக்க முடி­யாது.

இலங்­கையில் கடந்த காலத்தில் நீதி பொறி­முறை மோச­மா­ன­தாக அமைந்திருந்த போதிலும் தற்போது சுயாதீன சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே உள்ளக விசாரணை பொறிமுறை மூலமாக உண்மைகளை கண்டறிய முடியும். எவரதும் தனிப்பட்ட கருத்துக்களை கவனத்தில் கொண்டும் ஒருசிலரது தேவைக்காக சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என்றார். 
« PREV
NEXT »

No comments