Latest News

May 12, 2017

இலங்கைக்கு வந்ததில் மகிழ்ச்சி
by admin - 0

இலங்­கைக்கு விஜயம் செய்ய கிடைத்­தமை மகிழ் ச்சி­ தரும் விட­ய­மாகும். நான் தற்­போது கொழும்பில் இருக்­கின்றேன். இலங்­கைக்கு வந்­ததும் வெசாக் தின மாநாட்டை ஆரம்­பித்து வைப்­பதும் மகிழ்ச்­சிக்­கு­ரிய விட­ய­மாகும் என்று இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்தார். 

 

உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு நேற்று வியா­ழக்­கி­ழமை மாலை இலங்கை வந்­த­டைந்த இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி இலங்கை வந்­தி­றங்­கி­ய­வுடன் மேற்­கண்­ட­வாறு சமூக வலை­த் த­ளத்தில் பதி­விட்­டி­ருந்தார். 

நேற்று மாலை 6.05 மணி­ய­ளவில் கட்­டு­நா­யக்க சர்­ வ­தேச விமான நிலை­யத்தை வந்­த­டைந்த இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியை கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க  கைலாகு கொடுத்து வர­வேற்றார். இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடிக்கு கட்­டு­நா­யக்­கவில் பி்ரதமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் செங்­கம்­பள வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.  

 மேலும் வர­வேற்பு நிகழ்வில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுடன் அமைச்­சர்­க­ளாக மங்­கள சம­ர­வீர நிமால் சிறி­பால டி. சில்வா மலிக் சம­ர­விக்­ரம மற்றும் சஜித் பிரே­ம­தாச ஆகியோர் கலந்­து­கொண்­டனர். . அத்­துடன் இலங்­கைக்­கான இந்­திய உயர்ஸ்­தா­னிகர் தரன்ஜித் சிங் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்­களும் வெ ளிவி­வ­கார அமைச்சின் உயர் அதி­கா­ரி­களும் கட்­டு­நா­யக்­கவில் இடம்­பெற்ற வர­வேற்பு நிகழ்வில் கலந்­து­கொண்­டனர். 

இந்­திய பிர­தமர் மோடி வரு­கை­தந்த எயார் இந்­தியா விமானம் 5.40 மணி­ய­ளவில் தறை­யி­றங்­கி­யது. அதன் பின்னர் 6.5 மணி­ய­ளவில் பாரத பிர­தமர் மோடி விமா­னத்­தி­லி­ருந்து இறங்­கினார். விமா­னத்தில் இருந்து இறங்­கிய இந­திய பிர­த­மரை பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க இரு­கரம் கூப்பி வர­வேற்று அழைத்துச் சென்றார். 

தொடர்ந்து இரண்டு குழந்­தைகள் இந்­திய பிர­த­ம­ருக்கு மலர்­சென்று வழங்கி வர­வேற்­றனர். அதன் பின்னர் நிகழ்வில் பங்­கேற்ற இலங்­கையின் அமைச்­சர்கள் இந்­திய பிர­தமர் மோடிக்கு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அறி­முகம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்­திய பிர­தமர் அதி­திகள் புத்­த­கத்தில் தனது பதிவை இட்டார். 

அத­னை­ய­டுத்து இந்­திய பிர­தமர் மோடியும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் ஒரே வாக­னத்தில் கொழும்பை நோக்கி பய­ணித்­தனர். 

கங்­கா­ராம விஜயம் 

கட்­டு­நா­யக்­க­வி­லி­ருந்து கொழும்பை வந்­த­டைந்த இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் கங்­கா­ராம விஹா­ரைக்கு விஜயம் செய்த நிலையில் இந்­திய பிர­தமர் மோடி அங்கு நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருந்த வெசாக் வல­யத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்­சர்­க­ளான சுவா­மி­நாதன் மங்­கள சம­ர­வீர சாகல ரத்­நா­யக்க விஜே­தாச ராஜ­பக்ஷ உள்­ளிட்ட பல்­வேறு முக்­கி­யஸ்­தர்­களும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். 

வெசாக் வல­யத்தை திறந்து வைத்த இந்­திய பிர­தமர் மோடி பிர­தமர் ரணி­லுடன் இணைந்து மத வழி­பா­டு­க­ளிலும் ஈடு­பட்டார். அத்­துடன் அந்த நிகழ்வில் வர­வேற்­பு­ரையும் இடம்­பெற்­றது. கங்­கா­ராம தேரர்கள் இந்­திய பிர­தமர் மோடியை ஆசிர்­வ­தித்­த­தையும் அவ­தா­னிக்க முடிந்­தது. 

ஜனா­தி­பதி விருந்­து­ப­சாரம் சம்­பந்தன் சி.வி. பங்­கேற்பு  

தொடர்ந்து கொழும்பில் நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஏற்­பாடு செய்­தி­ருந்த இரவு விருந்­து­பார நிகழ்வில் இந்­திய பிர­தமர் கலந்­து­கொண்டார். இந்த விருந்­து­ப­சார நிகழ்வில் அமைச்­சர்கள் இரா­ஜ­தந்­தி­ரிகள் என பல்­வேறு தரப்­பி­னரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். 

 ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் வெ ளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய வடக்கு முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் அமைச்­சர்­க­ளான விஜே­தாச ராஜ­பக்ஷ மலிக் சம­ர­விக்­ரம ரவி கரு­ணா­நா­யக்க நிமால் சிறி­பால டி. சில்வா இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பெளசி உள்­ளிட்ட பலரும் கலந்­து­கொண்­டனர். 

 இதே­வேளை நேற்று இலங்கை வந்­த­டைந்த இந்­திய பிர­தமர் நரேந்­திர இன்று வௌ்ளிக்­கி­ழமை கொழும்­பிலும் கண்­டி­யிலும் அட்­ட­னிலும் பல்­வேறு முக்­கி­யத்­து­வ­மிக்க நிகழ்­வு­களில் கலந்­து­கொள்­ள­வுள்ளார். அத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் மற்றும் தமிழ் முற்­போக்கு கூட்­டணி இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் ஆகி­ய­வற்றின் பிர­தி­நி­திகள் ஆகி­யோரை இந்­திய பிர­தமர் மோடி சந்­தித்து பேச்­சு­ந­டத்­த­வுள்ளார். 

ஐக்­கிய நாடுகள் வெசாக் தின நிகழ்வு   

இன்று வெள்­ளிக்­கி­ழமை கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் ஆரம்­ப­மாகும் ஐக்­கிய நாடுகள் வெசாக் தின நிகழ்வை இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி ஆரம்­பித்து வைக்­க­வுள்ளார். 

இந்த நிகழ்வில் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க புத்­த­சா­சன மற்றும் நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ மற்றும் பௌத்த மத தலை­வர்கள் பலரும் உரை­யாற்­ற­வுள்­ளனர். வெ ளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உள்­ளிட்ட அமைச்­சர்­களும் பிர­தி­ய­மைச்­சர்­களும் இரா­ஜாங்க அமைச்­சர்­களும் உயர்­மட்ட அரச அதி­கா­ரி­களும் வெ ளிநாட்டு தூது­வர்­களும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். 

இந்த ஐக்­கிய நாடுகள் வெசாக்­தின ஆரம்ப நிகழ்வில் 10 மணி­யி­லி­ருந்து 10.20 வரை இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி உரை­யாற்­ற­வுள்ளார். அத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் உரை­யாற்­ற­வுள்­ளனர். வர­வேற்­பு­ரையை புத்­த­சா­சன அமைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ நிகழ்த்­துவார். மேலும் இந்த நிகழ்வில் பௌத்த மத தலை­வர்­களும் படி­ர­தான உரை­யாற்­ற­வுள்­ளனர். 

மலை­யக விஜயம் 

கொழும்பு நிகழ்வை முடித்­துக்­கொண்டு காலை 11.00 மணி­ய­ளவில் மலை­ய­கத்­துக்கு செல்­ல­வுள்ள இந்­திய பிர­தமர் மோடி டிக்­கோயா - கிளங்கன் வைத்­தி­ய­சா­லையை திறந்­து­வைக்­க­வுள்ளார். அதன் பின்னர் அங்கு பொதுக் கூட்டம் ஒன்றும் நடை­பெ­ற­வுள்­ள­துடன் இந்­திய பிர­தமர் அந்தக் கூட்­டத்தில் உரை­யாற்­ற­வுள்ளார். இந்த கூட்­டத்தை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டுகள் பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளன. இந்தக் கூட்­டத்தில் உரை­யாற்­ற­வுள்ள மலை­யக மக்கள் தொடர்பில் இந்­திய அர­சாங்­கத்தின் உத­வித்­திட்­டங்கள் தொடர்பில் அறி­விப்பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

அதனைத் தொடர்ந்து அங்கு அமைச்சர் மனோ கணேசன் தலை­மை­யி­லான தமிழ் முற்­போக்கு கூட்­டணி மற்றும் ஆறு­முகன் தொண்­டமான் தலை­மை­யி­லான இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் ஆகிய கட்­சி­களை சந்­தித்து இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். 

மலை­யக தலை­வர்­க­ளுடன் சந்­திப்பு 

தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி­யு­ட­னான சந்­திப்பின் போது, 2015ஆம் ஆண்டில் முதன் முறை­யாக பிர­தமர் மோடி இலங்கை வந்­த­போது, இடம் பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின் பின்­தொ­டர்ச்சி பற்றி ஆரா­யப்­படும் என அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்­துள்ளார். 

இந்த சந்­திப்­புக்­களை அடுத்து தலதா மாளி­கைக்கு செல்­ல­வுள்ள இந்­திய பிர­தமர் மோடி அங்கு இடம்­பெறும் நிகழ்­வு­களில் பங்­கேற்­க­வுள்ளார். தொடர்ந்து அங்­கி­ருந்­த­வாறு கட்­டு­நா­யக்க வரும் இந்­திய பிர­தமர் மோடி தமிழ்க் கூட்­ட­மைப்பை சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளார். 

சம்­மந்தன் - மோடி சந்­திப்பு 

இதன்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் உள்­ளிட்ட தலை­வர்­களை சந்­தித்துப் மோடி பேச்­சு­ந­டத்­த­வுள்ளார். 

இந்த சந்­திப்­பின்­போது இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு அதில் இந்­தி­யாவின் வகி­பாகம் அர­சியல் தீர்வு தொடர்பில் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்பு உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. 

தமிழ் மக்கள் எவ்­வா­றான அர­சியல் தீர்வை எதிர்­பார்க்­கின்­றனர் என்றும் அது தொடர்­பிலும் இந்­தி­யா­வி­ட­மி­ருந்து எவ்­வா­றான பங்­க­ளிப்பு தேவை என்­பது குறித்தும் இதன்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இந்­திய பிர­தமர் மோடிக்கு விளக்­க­ம­ளிக்கும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

இந்­திய பிர­த­மரின் இலங்கை விஜ­யத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பு­ட­னான சந்­திப்பு மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக கரு­தப்­ப­டு­கின்­றது. 

இதே­வேளை இலங்­கைக்கு வந்­துள்ள இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி இலங்­கை­யுடன் எவ்­வி­தான உடன்­ப­டிக்­கை­க­ளிலும் கைச்­சாத்­தி­ட­மாட்டார் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

ஐ.நா. வெசக் தினம் இதற்கு முன்னர் இரண்டு நாடு­களில் 13 தட­வைகள் இடம்­பெற்­றுள்­ளன. தாய்­லாந்தில் 11 தட­வை­களும் வியட்­னாமில் 2 தட­வை­க­ளு­மாக இடம்­பெற்­றுள்­ள­துடன் மூன்­றா­வது நாடாக இலங்கை அமைந்­துள்­ளது. 1999 ஆம் ஆண்டில் அப்­போ­தைய வெளி­வி­வ­கார அமைச்­ச­ரான ல­க்ஷமன் கதிர்­காமர் பௌத்த மதத்தில் இலங்­கைக்­குள்ள சிறப்­பு­களை எடுத்­து­ரைத்து ஐ.நா.வில் வலி­யு­றுத்­தி­ய­மைக்கு அமை­வாக இந்த வாய்ப்பு கிடைத்­துள்­ளது. 

இலங்­கையில் நடைப்­பெ­று­கின்ற ஐக்­கிய நாடுகள் வெசாக் தினத்தில் கலந்­துக்­கொள்­வ­தாக அமெ­ரிக்கா சீனா மற்றும் ஜப்பான் உள்­ளிட்ட சுமார் 80 திற்கும் மேற்­பட்ட நாடுகள் வரு­கையை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்கம் பத­விக்கு வந்­ததன் பின்னர் 2015 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்­தி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டார். அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் டில்­லியில் நடை­பெற்ற பீம்ஸ்டெக் மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்­காக இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­தி­ருந்தார். 

இலங்­கையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். அதன் பின்னர் தற்போது இலங்கைக்கு வருகின்றார். இடைப்பட்ட காலத்தில் இரண்டு நாடுகளினதும் அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் அவ்வப்போது உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டிருந்தனர். 

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தற்போதைய வர்த்தக கொடுக்கல் வாங்கல் பெறுமதியானது 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இரண்டு நாடுகளுக்கு இடையிலும் பொருளாதார தொழில்நுட்ப உடன்படிக்கையை செய்துகொள்ளும் நோக்கில் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. விரைவில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கடந்த 2000 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது. அந்தவகையில் இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயமானது வரலாற்று முக்கியத்துவமிக்கதாக காணப்படுகின்றது.    

« PREV
NEXT »

No comments