Latest News

April 13, 2017

இராணுவ, பௌத்த அரசியலால் தமிழர் ஏமாற்றமடைந்துள்ளனர்
by Editor - 0

நாட்டில் ஜன­நா­யக ஆட்­சியை நிறுவும் போராட்­டத்தில், ஜன­வரி 2015 இல் இந்த நாட்டின் சர்­வா­தி­காரப் போக்­கற்ற ஓர் ஆட்­சியை நிறுவ இணைந்து கொண்ட தமிழ் மக்கள், இன்று இரா­ணுவ- பௌத்த அர­சியல் இந்த நாட்டில் அதே ஆட்­சியால் ஊக்­கு­விக்­கப்­ப­டு­வ­துடன் மேலும் வளர்க்­கப்­ப­டு­கின்­றது என்­பதைக் கண்டு ஏமாற்­ற­ம­டைந்­துள்­ளனர். அதுவும், நல்­லாட்சிக் கு குரல் கொடுத்து எங்­க­ளது மக்­களின் பேரா­த­ரவைப் பெற்­ற­வர்கள் அந்தக் கொடு­மையில் ஈடு­பட்­டி­ருப்­பது இன்னும் ஏமாற்­றத்தை அளிக்­கின்­றது என்று அகில இலங்கை இந்துமாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் விடுத்துள்ள சித்திரைப் புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள் ளதாவது;

இந்த துர­திஷ்­ட­வ­ச­மான போக்கு, தமிழ் மக்­க­ளுக்கு தங்கள் நாட்டில் இருக்க வேண்­டிய அர­சியல் ஜன­நா­யக உரி­மை­களில் பார­தூ­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தும். இந்த நிலைமை மேலும் தொட­ராமல் நிறுத்­தப்­ப­டா­விட்டால் இன்னும் ஏமாற்­றமும் பார­தூ­ர­மான மோதல் நிலையும் ஏற்­படும். கடந்த அரசின் காலத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் காணி ஆய­தப்­ப­டை­களின் வசம் இருந்­த­தாக அறிக்­கைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இரா­ணு­வத்தால் அங்­கீ­கா­ர­மின்றி சுவீ­க­ரிக்­கப்­பட்ட காணி­களை உரி­மை­யா­ளர்­க­ளுக்கு திருப்பிக் கொடுப்போம் என்ற உறு­தி­மொ­ழியை புதிய ஆட்­சி­யா­ளர்கள் நிறை­வேற்­ற­வில்லை. இது­வரை அத்­த­கைய காணி­களில் சிறு விகி­தமே விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. மக்­களின் போராட்டம் வேண்­டு­கோள்­களை உதா­சீனம் செய்து கோப்­பா­பி­லவு மக்­களின் 482 ஏக்கர் விஸ்­தீ­ரணம் கொண்ட தமிழ் மக்­களின் புர்­வீகக் காணி­களில் இன்னும் இரா­ணுவம் நிலை­கொண்­டி­ருப்­பது இன்னும் ஒரு வேதனை தரும் செய்தி.

ஆய­தப்­ப­டை­களால் மட்­டு­மல்­லாது தொல்­பொருள் ஆராய்ச்சித் திணைக்­க­ளம்­கூட அரசின் அங்­க­மாக எங்கள் மக்­களின் உரி­மை­களை நசுக்க முற்­ப­டு­வது தூர­திஷ்­ட­வ­ச­மாகும். கிழக்கின் கன்­னி­யாவில் இருக்கும் சுடுநீர்க் கிண­றுகள் ஆரம்­ப­கா­லத்­தி­லி­ருந்து எங்கள் இந்து ஆலயம் இருந்த ஒரு புரா­தன புனித தல­மாகும். ஆல­யத்­துக்கு வரும் அடி­யார்கள் இக்­கி­ண­று­களில் குளித்­து­விட்டு ஆல­யத்தைத் தரி­சிப்­பது பல ஆண்­டு­க­ளாக இருந்து வந்த எமது சமய மர­பாகும். ஆனால் இப்­போது அந்த வளாகம் பௌத்த வழி­பாட்­டுத்­த­ல­மாகக் கோல­மி­டப்­பட்­டுள்­ளது. மேலும் சுடுநீர்க் கிண­று­களைப் பார்க்க வரு­ப­வர்கள் பௌத்த ஆல­யத்­துக்கு கட்­டணம் செலுத்த கட்­டா­யப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றார்கள் என முறைப்­பா­டுகள் கிடைத்­தி­ருக்­கின்­றன.

கன்­னியா வாழ் மக்­களின் சுழலும் அர­சாங்கத் திட்­டங்­களால் மாற்­றப்­பட்டு வரு­கின்­றது. சுடுநீர் கிண­று­களை நோக்கி நடக்­கும்­போது சிங்­களக் கடை­களும் சிங்­கள குறி­யீட்டு பல­கை­களும் பௌத்த கொடி­யும்தான் வரு­வோரை வர­வேற்­கின்­றன. மேலும் இந்த இடத்தை ஒரு பௌத்த புமி­யாக எடுத்துக் காட்டும் தொல்­பொருள் ஆராய்ச்சி திணைக்­கள அறி­விப்­புக்­க­ளையும் காணலாம். சிவன் கோயி­லுக்கு பக்­தர்கள் சென்று வழி­ப­ட­மு­டி­யாத நிலை ஏற்­பட்டு அந்த ஆலயம் அழி­வுறும் நிலையில் உள்­ளது.

திரு­கோ­ண­மலை நகரைச் சேர்ந்த மடத்­தடி முத்­து­மா­ரி­யம்மன் ஆலய பரி­பா­ல­னத்­தி­லேயே ஆல­யமும் சுடுநீர்க் கிண­று­களும் இருந்­தன. பின்பு அவை உள்­ளூராட்சி அமைப்பின் கீழ் கொண்டு வரப்­பட்­டன. பௌத்த அமைப்­புக்­களை அரச அமைப்­புகள் ஆயு­தப்­படை மூலம் விஸ்­த­ரிக்­கின்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு இது ஓர் உதா­ரணம். மேலும் இந்த நாட்டின் பஞ்ச ஈஸ்­வர தலங்­களில் ஒன்­றான பழம்­பெரும் புரா­த­னக்­கால இந்து ஆல­ய­மான முனீஸ்­வ­ரத்தில் திருக்­கோ­புரம் கட்­டவும் தொல்­பொருள் ஆராய்ச்சித் திணைக்­களம் முட்­டுக்­கட்டை போட்­டு­வ­ரு­வது இன்னும் ஒரு வேத­னைத்­தரும் உதா­ர­ண­மாகும். இந்தப் போக்கு உடன் நிறுத்­தப்­பட வேண்டும்.

வடக்கு கிழக்கில் மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணிகள் இன்னும் திருப்பிக் கொடுப்­ப­தற்கு போதிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டாது தொடரும் அதே நிலையில் எத்­த­னையோ தமிழ் அர­சியற் கைதிகள் சிறையில் விசா­ர­ணை­யின்றி வாடு­கின்­றனர். தங்­களின் மகன்­க­ளையும் கண­வர்­மார்­க­ளையும் ஆயி­ரக்­க­ணக்­கான தாய்­மா­ரும மனை­வி­மாரும் தேடிக் கொண்­டி­ருக்­கின்­றனர். கிளி­நொச்சி, யாழ்ப்­பாணம், முல்­லைத்­தீவு, வவு­னியா மற்றும் திரு­கோ­ண­மலை ஆகிய மாவட்­டங்­களில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வு­களின் போராட்­டங்கள் இன்னும் தீர்­வின்றித் தொடர்­கின்­றன. இவை எல்­லா­வற்­றையும் கண்­டும்­கா­ணாத போக்கு தொடர்­வதும் மன­வே­த­னைக்­கு­றி­யது.

புத்­த­பி­ரானின் போத­னை­களைக் கூட மறந்து அவர் உரு­வாக்­கிய மதத்தின் பேரால் அர­சியல் நடத்­திக்­கொண்டு வெசாக் பண்­டி­கையை சர்­வ­தேச ரீதியில் நடத்தி தங்கள் தவ­று­களை மூடி­ம­றைக்கும் முயற்­சி­க­ளுக்கு சர்­வ­தேசம் அங்­கீ­காரம் வழங்­கக்­கூ­டாது.

இந்த சூழ்­நி­லை­யில்தான் புது­வ­ருடம் பிறக்­கின்­றது. இணக்­கப்­பாடும் மீள்­பு­ன­ருத்­தா­ர­ணமும் பற்றிக் கதைக்­கப்­பட்­டாலும் போதிய - திருப்­தி­க­ர­மான எந்த நட­வ­டிக்­கையும், அவ்­வ­ழியில் அர­சாங்­கத்­தாலும் அரச நிறு­வ­னங்­க­ளாலும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

தேசி­ய­ஒ­ரு­மைப்­பாடு பற்றி, இணக்­கப்­பாடு் பற்­றி­யெல்லாம் கதைப்­ப­தற்கு முன் எங்கள் மக்கள் தங்கள் சுதந்­தி­ரத்­தையே முதலில் நாடி­நிற்­கின்­றனர். இது அர­சாங்­கத்­திற்குப் புரி­யாத விடயம் அல்ல. ஆனால் அடுத்து அடுத்து இந்த நாட்டை ஆள­வந்­த­வர்கள் புரிந்­தாலும் புரி­ய­த­மா­தி­ரியே நடிப்­ப­துதான் வேதனை.

நாட்டின் சகல பகு­தி­க­ளிலும் வாழும் இந்து மக்களின் உணர்வுகள் இவை. எனவே அவர்களின் அபிலாசைகளை மெச்சி அவர்களுக்குரிய நிவாரணங்களை வழங்குமாறு ஒவ்வொருவரையும் வேண்டுகிறோம். அது நடக்காவிட்டால் புதுவருடத்தினை அவர்கள் கொண்டாடுவதை எதிர்பார்க்க முடியாது.

அதே சமயம் இந்த நாட்டிலும் வௌி நாட்டிலும் வாழ்கின்ற இந்து மக்களிடம் நாம் விடுக்கும் வேண்டுகோள், அவர்கள் எல்லோரையும் பிரார்த்தனையிலீடுபடுமாறும், அவர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்க்கும் பிரச்சினைகள் தீர இறையருள் கிடைக்கும் எனவும் எல்லாம்வல்ல பரம்பொருளைப் பிரார்த்திப்போம்.  
« PREV
NEXT »

No comments