Latest News

April 17, 2017

மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் மீது தாக்குதல் முயற்சி: பட்டதாரிகள் கவலை
by admin - 0

சத்தியாக்கிரக போராட்டம் நடாத்திவரும் பட்டதாரிகள் மீது இரவு வேளையில் தாக்குதல் நடாத்த சிலர் முற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மதுபோதையில் வந்து இருவர் நேற்று இரவு தகாத வார்த்தைகளினால் திட்டிவிட்டு தாக்குவோம் என கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றதாகவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தமது போராட்டத்திற்கு நியாயமான தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியாத சில அரசியல்வாதிகள் தங்களது அடிவருடிகள் மூலம் அச்சுறுத்தல் விடுப்பதாக பட்டதாரிகள் கூறியுள்ளனர்.
« PREV
NEXT »

No comments