Latest News

May 07, 2016

தமிழர் நலன்சார் வாக்குவங்கியின் சின்னமே 'இரட்டை மெழுகுவர்த்தி'!
by admin - 0

நாம் தமிழர் கட்சியின் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தின் மீது புள்ளடியிடப்படும் ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியமாகும்.

தமிழகத்தில் ஆட்சியதிகாரத்தையே மாற்றும் வலிமைபெற்று விளங்கும் ஈழத்தமிழர் விடயம் எல்லோராலும் கிள்ளுக்கீரையாக பயன்படுத்தப்படுவதற்கு காரணம் ஈழத்தமிழர் விடயம் வாக்கு வங்கியாக நிரூபிக்கப்படமையே ஆகும்.

ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை முன்னிறுத்திய தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி பெறும் வாக்குகளே தமிழக அரசியல் வரலாற்றில் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் கலை-கலாச்சாரம்-பண்பாடு சார்ந்த வாக்குவங்கியாகவும் ஈழ ஆதரவு வாக்குவங்கியாகவும் நிலைபெறும்.

தமிழக அரசியலில் ஒவ்வொரு கட்சியும் தேர்தலின் போதும் கூட்டணி பேரம் பேசுவதும், ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ மற்றக்கட்சிகளை தமது கூட்டணிக்குள் தக்கவைப்பதற்கு பேரம் பேசுவதும் அக்கட்சிகள் வைத்திருக்கும் வாக்குவங்கியின் அடிப்படையில்தானே தவிர கொள்கைசார்ந்தல்ல.

ஏழு கோடிக்கும் அதிகமான தமிழர்களைக் கொண்ட தமிழ்நாட்டில் தமிழர் நலன் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதற்கு தமிழர்களின் பலம் சாதி-மதம்-கட்சி எனப்பிரிக்கப்பட்ட வாக்குவங்கிகளாக பேனப்பட்டுவருவதே காரணமாகும்.

சாதி, மத, கட்சி அடிப்படையில் அவற்றின் நலன்களுக்கு விரோதமாக சிந்திக்கவே பயப்படும் நிலைக்கு அவைசார்ந்த வாக்குவங்கியே காரணமாக இருந்துவருகிறது.

சாதி, மதம், கட்சி ஆகியவற்றிற்கு இருக்கும் இந்தப் பாதுகாப்பு கவசம் இனம் சார்ந்ததாக மாறவேண்டும். அப்போதுதான் தமிழர் நலன்களுக்கு எதிராக சிந்திக்கவே ஆட்சி, அதிகாரத்தில் உள்ளவர்கள் பயப்படும் நிலை உருவாகும்.

முல்லைப்பெரியார் அணை விவகாரம், காவேரி நதி நீர் விவகாரம், மீனவர் விவகாரம், கூடன்குளம் விவகாரம், மீத்தேன் விவகாரம், நியூட்றினோ விவகாரம், தாது மணல் விவகாரம், ஆற்று மணல் விவகாரம் என தமிழக மக்களின் வாழ்வுரிமை சார்ந்த விவகாரங்களிலும்,

ஈழத்தமிழர் விவகாரம், ஏழு தமிழர் விடுதலை ஆகிய உயிர் சார்ந்த விவகாரங்களிலும் தொடர்ந்தும் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டு வருவதற்கு இந்நிலையே காரணமாகும்.

ஆண்ட கட்சி, மீண்டும் ஆளத்துடிக்கும் கட்சி என இரண்டு கட்சிகள் தவிர்த்து தமிழர் உரிமைகளை மீட்டெடுத்து வாழ்வை வளப்படுத்துவோம் எனக்கூறி தம்மை மாற்றுத்தலைமையாக முன்நிறுத்தி அரசியல் பிரவேசம் செய்த மற்றக்கட்சிகளும் கால ஓட்டத்தில் இந்த இரு கட்சிகளின் நிழலில் அரசியல் பயணத்தை தொடர்ந்து அவர்களின் அனைத்து செயற்பாடுகளிலும் பங்காளர்களாகியதுதான் கொடுமை.

அவ்வாறு இந்த இரு கட்சிகளுடன் காலத்திற்கு காலம் மாறி மாறி கூட்டணிசேர்ந்த இந்தக் கட்சிகள்கூட தமிழர் வாழ்வுரிமை சார்ந்த எந்த விடயத்தையும் முன்னிறுத்தி வாக்குறுதிகளைப்பெறாது தொகுதிப்பங்கீடு உள்ளிட்ட தத்தமது அரசியல் சார்ந்த விவகாரங்களையே முன்னிறுத்தி கூட்டணிசேர்வதும் பிரிவதுமாக சந்தர்பவாத அரசியலில் காலங்கடத்தி வருகிறார்கள்.

இவ்வாறாக கடந்த காலத் தேர்தல்கள் கசப்பான அனுபவங்களுடன் கடந்துபோன நிலையில் இம்முறை மாற்றம் என்ற முழக்கம் அதிகமாக எழுப்படும் தேர்தல் களமாக மாறியுள்ளது.

குழப்பகரமான கூட்டணியாக ஒட்டவைக்கப்பட்டிருக்கும் ம.ந.கூட்டணி- தே.மு.தி.க.- த.ம.க. கூட்டணி!

தமிழக மக்களின் வாவுரிமை சார்ந்த விவகாரங்கள், ஈழத்தமிழர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை விட்டுக்கொடுத்து ஒரு கூட்டணியை உருவாக்கி இரு பெரும் கட்சிகளால் கை கழுவிவிடப்பட்ட கட்சிகளையும் சேர்த்து தாம் தான் மாற்று என்று ம.ந.கூட்டணி-தே.மு.தி.க.-த.ம.க. கூட்டணி ஒருபக்கம்.

இவர்கள் மக்களுக்காகவோ கொள்கைக்காகவோ ஒன்றுசேராது முதலில் வெற்றி அதற்கு பிறகுதான் மற்றதெல்லாம் என்ற அடிப்படையில் குழப்பகரமான கூட்டணியாக ஒட்டப்பட்டுள்ளார்கள்.

« PREV
NEXT »

No comments