Latest News

May 09, 2016

தமிழீழக் கலைஞர் கணேஸ்மாமாவின் 7ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று!
by admin - 0

 கணேஸ் மாமா
தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் முதல் பொதுமக்கள் வரை கணேஸ்மாமா எனச் செல்லமாக அழைக்கப்படும்  தமிழீழத் திரைப்படக்கலைஞர் கணேஸ் மாமாவின் 7 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

தமிழின அழிப்பு யுத்தம் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது ஏவிவிடப்பட்டு யுத்தம் உக்கிரமாக நடைபெற்றபோது கடந்த 09.05.2009 அன்றைய நாள் சிறீலங்காப்படையினரால் ஏவப்பட்ட எறிகணைத் தாக்குதலில் அகப்பட்டு கணேஸ்மாமா முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் தனதுகலைத் திறமைகளினூடாகவும் தனது ஏனைய பங்களிப்புக்களினூடாகவும் தமிழின விடுதலைப் போராட்டத்திற்கு ஆற்றிய பங்களிப்புக் காரணமாக தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டவர் என்பதுடன் இவரது கலையாற்றலை அனைவரும் விரும்பியிருந்தார்கள்.

இவர் "இன்னுமொரு நாடு" உட்பட்ட பல தமிழீழத் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கணேஸ்மாமா எறிகணை வீச்சால் கொல்லப்பட்டாலும் தமிழர் மனங்களில் தற்போதும் நீக்கமற நிறைந்துள்ளார்.
« PREV
NEXT »

No comments