Latest News

May 10, 2016

வடகொரியா தனது நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படாத வரை அணு ஆயுதத்தை பயன்படுத்தாது
by admin - 0

கொரி­யாவின் இறை­மைக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­ப­டாத வரை அந்­நாடு அணு ஆயு­தத்தை பயன்­ப­டுத்­தாது என அந்­நாட்டின் தலைவர் கிம் யொங் – உன் தெரி­வித்தார்.

அந்­நாடு சர்­வ­தேச உடன்­ப­டிக்­கை­யொன்­றி­லி­ருந்து வில­கிய பின்னர் தனது முத­லா­வது அணு ஆயுதப் பரி­சோ­த­னையை 2006 ஆம் ஆண்டில் மேற்­கொண்­டது.

தொடர்ந்து தென் கொரியா மற்றும் அமெ­ரிக்கா மீது அணு ஆயுதத் தாக்­­கு­தலை நடத்தப் போவ­தாக வட கொரியா திரும்பத் திரும்ப அச்­சு­றுத்தி வந்­தது.

இந்­நி­லையில் வட கொரிய தொழி­லாளர் கட்­சியின் முக்­கி­யத்­துவம் மிக்க கூட்­டத்தில் உரை­யாற்­றிய கிம் யொங் – உன், தென் கொரியா மற்றும் அமெ­ரிக்கா உள்­ள­டங்­க­லான நாடு­க­ளுடன் இயல்­பான உறவைப் பேண விரும்­பு­வ­தாக தெரி­வித்­துள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்க ஊடகம் தெரி விக்­கி­றது.
அத்­துடன் அந்தக் கூட்­டத்தில் கிம் யொங் – உன், நம்­பிக்கை மற்றும் புரிந்­து­ணர்வைக் கட்­டி­யெ­ழுப்பும் வகை யில் தென் கொரி­யா­வுடன் மேலும் பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டி­யுள்­ள­தாக தெரி­வித்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

அத்­துடன் அவர், "பொறுப்­பு­ணர்­வு­டைய அணு ஆயுத வல்­ல­மை­யு­டைய நாடு என்ற வகையில் வட கொரி­யா­வா­னது தனது இறைமை மீறப்­ப­டாத வரை அணு ஆயு­தத்தை பயன்­ப­டுத்­தாது" என தெரி­வித்­தாக அந்­நாட்டு அர­சாங்க ஊட­க­மான கே.சி.என்.ஏ. செய்தி முகவர் நிலையம் தெரி­விக்­கி­றது.
வட கொரியா தனது அணு­சக்தித் தள­மொன்றில் பிறி­தொரு அணு­சக்திப் பரி­சோ­த­னை­களை மேற்­கொள்ளத் தயா­ராகி வரு­வ­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்த நிலை­யி­லேயே இந்த ஆளும் தொழி­லாளர் கட்­சியின் கூட் டம் இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
வடகொரியா

1980 ஆம் ஆண்­டிற்குப் பின்னர் அந்­நாட்டு ஆளும் கட்­சியின் கூட்டம் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும். இந்தக் கூட்டமானது கிம் யொங் – உன்னை அந்நாட்டின் உச்ச நிலைத் தலைவராக உத்தியோக பூர்மாக அங்கீகரிப்பதாக உள்ளது.
« PREV
NEXT »

No comments