Latest News

April 07, 2016

யுத்த காலத்தில் காணிகளை இழந்தவர்கள் நீதிமன்றத்தை நாடுவதற்கு விசேட ஏற்பாடு ஆட்சியுரிமை சட்டமூலம் சபையில் நிறைவேற்றம்
by admin - 0

யுத்தகாலப்­ப­கு­தியில் காணி உட்­பட அசை­யாத சொத்­துக்­களை இழந்­த­வர்கள், அவற்­றுக்­கான உரி­மை­களை மீளப்­பெற முடி­யா­மல்­போ­ன­வர்கள் அச்­சொத்­துக்­களின் உரி­மை­களை மீளப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான வழக்கைத் தாக்கல் செய்­வ­தற்­கான அனு­ம­தியை ஏற்­ப­டுத்தி விசேட ஏற்­பா­டு­க­ள­டங்­கிய ஆட்­சி­யு­ரிமை சட்­ட­மூலம் நேற்­றுப் ­பு­தன்­கி­ழமை சபையில் நிறை­வேற்­றப்­பட்­டது.

இச்­சட்­டத்தின் பிர­காரம், 1983 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி முதல் யுத்தம் நிறை­வ­டைந்த தின­மான 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி வரை­யி­லான காலப்­ப­கு­திக்குள் தமது காணி­களின் உரி­மையை அனு­ப­விக்க முடி­யாது அவற்றின் உரி­மத்தை இழந்­த­வர்கள் தங்­க­ளுக்­கு­ரிய உரி­மத்தை மீளப் பெற்றுக் கொள்­வ­தற்­காக நீதி­மன்­றத்தை நாட முடியும்.

அத்­துடன் இச்­சட்­டத்தின் ஏற்­பா­டு­க­ளினால் வழங்­கப்­பட்­டுள்ள நன்­மை­களை இரு வருட காலப்­ப­கு­திக்குள் பயன்­ப­டுத்தும் வகையில் அந்த வழக்கு தாக்கல் செய்­யப்­பட வேண்டும் என்றும் அச் சட்­ட­மூ­லத்தில் விதந்­து­ரைக்­கப்­பட்டும் உள்­ளது.

இலங்கை நாட்­டினுள் ஆயு­தந்­தாங்­கிய பயங்­க­ர­வாத குழு­வொன்றின் செயற்­பா­டுகள் கார­ண­மாக நீதி­மன்­றத்தில் தமது உரி­மை­களை நிலை நாட்டுவதற்கு அல்­லது தம்மைப் பாது­காத்து கொள்­வ­தற்கு இய­லா­தி­ருக்­கின்ற ஆட்கள் தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய விசேடசட்ட ஏற்­பா­டுகள் மற்றும் அத­னோடு தொடர்­பு­பட்ட அல்­லது அதற்கு இடை­நேர்­வி­ளை­வான கரு­மங்கள் ஆகி­ய­வற்றை இயலச் செய்­வ­தற்­கு­மா­னதொரு சட்­ட­மே இதுவென இந்த சட்­ட­மூ­லத்­திற்­கான முகப்­பு­ரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட ஏற்­பா­டுகள் அடங்­கிய ஆட்­சி­யு­ரிமை சட்­ட­மூலத்தை நேற்று புதன் கிழமை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்து நீதி அமைச்சர் விஜே­தாஸ ராஜபக்ஷ உரை­யாற்­று­கையில்,

ரோமன்-­டச்சு சட்ட ஏற்­பா­டு­க­ளுக்கு அமை­யவே இவ்­வ­ளவு காலமும் ஆட்­சி­யு­ரிமை சட்டம் இருந்­தது. அதன் ஏற்­பா­டு­களின் பிர­காரம், யாதேனும் ஒரு­வ­ருக்கு உரித்­தான அசையும் அல்­லது அசையா சொத்­துக்கள் பத்து வரு­டங்­க­ளுக்கு மேலாக வேறொ­ரு­வ­ரினால் அனு­ப­விக்­கப்­பட்­டி­ருப்பின், அந்த அனு­ப­விப்பின் பேரில் சம்­பந்­தப்­பட்ட சொத்தின் உரிமம் பத்து வரு­டங்­க­ளுக்கு மேலாக அதை அனு­ப­வித்­த­வ­ருக்கே உரி­ய­தா­கி­வி­டு­கின்­றது.

இந்த சட்­டத்தில் பாரிய குறை­பா­டுகள் இல்­லா­விட்­ட­ாலும் கூட நாட்டில் கடந்த காலங்­களில் நில­விய மோதல் நிலை­மைகள் கார­ண­மாக ஒரு பகுதி மக்­க­ளுக்கு இந்த சட்ட ஏற்­பா­டு­களின் பிர­காரம் அநீதி இழைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

நாட்டில் நில­விய மூன்று தசாப்த கால­மாக நீடித்த யுத்­தத்தின் கார­ண­மாக நபர் ஒருவர் தமது சொத்தின் உரி­மத்தை மீட்டுக் கொள்­வ­தற்­கான கால அவ­காசம் பத்து வரு­டங்கள் என்­பது குறு­கிய காலப்­ப­கு­தி­யா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.
அந்த வகையில், 1983ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் யுத்தம் முடி­வுக்கு வந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­திக்குள் யாதேனும் நப­ரொ­ரு­வ­ரினால் தமது சொத்தை தமது கட்­டுப்­பாட்டில் வைத்­துக்­கொள்­ளவோ அல்­லது அனு­ப­விக்க முடி­யாமல் போயி­ருந்­தாலோ அல்­லது நீதி­மன்­றத்தை நாடி தமது காணி உரி­மத்தை மீள பெற முடி­யாமல் போயி­ருந்­தாலோ அது இந்த நாட்டில் நில­விய மோதல்­க­ளினால் அந்­ந­ப­ருக்கு இழைப்­பட்ட அநீ­தி­யா­கவே அமைந்­தி­ருக்கும்.

இவ்­வா­றான நிலை­மை­க­ளினால் வடக்கு, கிழக்கு மக்­களே அதிகம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், இந்த நிலை­மை­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் தங்­க­ளது காணி­களை மீளப் பெற்றுக் கொள்­வதில் நடை­மு­றைச்­சிக்கல் நில­வு­வதால் அவ்­வா­றான காணி­களின் உரி­மத்தை அவற்றின் உரி­மை­யா­ளர்கள் மீளப் பெற்றுக் கொள்­வ­தற்கு இச்­சட்­ட­மூ­லத்தின் ஊடாக ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன எனச் சுட்­டிக்­காட்­டினார்.

விதைந்­து­ரைப்­புக்கள்

இச்­சட்ட மூலத்தில், இலங்­கையில் ஆயு­தந்­தாங்­கிய பயங்­க­ர­வாத குழு­வொன்றின் செயற்­பா­டுகள் கார­ண­மாக நீதி­மன்­றத்தில் தமது உரி­மை­களை நிலைநாட்டுவதற்கு அல்­லது தம்மைப் பாது­காத்து கொள்­வ­தற்கு இய­லா­தி­ருக்­கின்ற ஆட்கள் தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய விசேட சட்ட ஏற்­பா­டுகள் மற்றும் அத­னோடு தொடர்­பு­பட்ட அல்­லது அதற்கு இடை­நேர்­வி­ளை­வான கரு­மங்கள் ஆகி­ய­வற்றை இயலச் செய்­வ­தற்­கு­மா­தொரு சட்­டமே இதுவாகும்.
ஏதேனும் ஆயுதம் தாங்­கிய பயங்­க­ர­வாத குழு­வொன்றின் செயற்­பா­டுகள் என்­பது, 2005 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பயங்­க­ர­வாதி நிதி­ய­ளிப்பை ஒடுக்­குதல் மீதான சம­வாயச் சட்­டத்தில், பயங்­க­ர­வாதச் செயல் ஒன்­றாக வரை­வி­லக்­க­ணப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள ஏதேனும் செயல் எனப் பொரு­ளாகும் என்றும் சட்­ட­மூ­லத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

காணி உட்­பட ஏதேனும் அசை­வற்ற சொத்தை மீளப் பெறு­வ­தற்­காக தம்­மு­டைய உரி­மை­களைத் தொடர்­வ­தற்கு இய­லா­த­வ­ராக இருந்­த­வ­ரான அனு­கூலம் குறைந்த நப­ரொ­ருவர் இச் சட்டம் நடை­மு­றைக்கு வந்­த­தற்குப் பின்னர் ஒரு வரு­டத்­திற்குள் இச் சட்­டத்­தினால் அளிக்­கப்­பட்ட நன்­மை­களைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு அவர் வழக்­கொன்றை தொடுப்­ப­தற்கு உரித்துடையராதல் வேண்டும்.

அனுகூலம் குறைந்த நபர் என்பது 1983ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதியன்று தொடங்கி 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதியில் முடிவடைந்த காலப்பகுதியின் போது ஏதேனும் ஆயுதந்தாங்கிய பயங்கரவாத குழுவொன்றின் செயற்பாடுகள் காரணமாக நிலவிய சூழ்நிலைகளின் விளைவாக எந்த நபர், அவருடைய உரிமைகளை எந்த நீதிமன்றத்தில் தொடர்வதற்கு அவர் சட்டத்தினால் தேவைப்படுத்தப் பட்டிருந்தாரோ அந்த நீதிமன்றம் ஒன்றில் தமது உரிமைகளைத் தொடருவதற்கு இயலாதவராக இருந்தவரான நபர் ஒருவாராவார் என்று பொருள்படுமென விதைந்துரைக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments