Latest News

March 11, 2016

'பிர­பா­கரன் உயி­ருடன் ' பொன்­சே­காவின் கூற்றை சாதா­ரணமாக எடுக்க முடி­யாது- ஸ்ரீலங்கா
by admin - 0

தேசியத் தலைவர் உயிருடன் உள்ளார் என்ற சரத் பொன்சேகாவின் கருத்தால் ஸ்ரீலங்காவில் அதிர்ச்சி தீ பரவுயுள்ளது இதனால் ஸ்ரீலங்கா அரசு ஒரு விசாரணை மேற்கொள்ளும் அளவுக்கு சர்ச்சை வெடித்துள்ளது 

இந்த தகவல் பற்றி ஸ்ரீலங்கா அமைச்சர் தெரிவிக்கையில் 


யுத்தம் முடிக்­கப்­பட்ட விதம் மற்றும் இறுதி தரு­ணங்­களில் நடந்­த­தாகக் கூறப்­படும் போர்க்­ குற்­றங்கள் தொடர்பில் வெளிப்­ப­டை­யாகக் கூறு­வ­தற்கு இத்­தனை கால­மாக மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் மறுப்பு தெரி­விக்­கப்­பட்­டு வந்த நிலையில் முன்னாள் இரா­ணு­வத்­த­ள­ப­தியே இறுதி தரு­ணத்தில் குற்­றங்கள் இடம்­பெற்­றன எனவும் வெள்­ளைக்­கொடி விவ­காரம் தொடர்பில் சர்வ­தேச விசா­ரணை வேண்டும் எனவும் கூறு­வ­தனை சாதா­ர­ண­ மாகக் கொள்­ளக்­கூ­டாது. சரத்பொன்­சே­கா வின் கருத்­தினால் திருப்­பு­ முனை ஏற்­பட்­டுள்­ளது என அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரிவித்துள்ளார் .

பிர­பா­கரன் இறுதி நேரத்தில் உயி­ருடன் இருந்­தாரா அல்­லது
கொல்­லப்­பட்­டாரா என்ற உண்­மை­களில் கூட இப்­போது சந்­தேகம் எழுந்­துள்­ளது. பிர­பா­க­ர­னுக்கு உண்­மையில் என்ன நடந்­தது என்ற உண்­மை­களை கண்­ட­றிய வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

போர்க்­குற்ற குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் சர­வ­தேச விசா­ர­ணைகள் அவ­சியம் எனவும் பிர­பா­கரன் இறுதி நேரத்தில் உயி­ருடன் இருந்தார் எனவும் அமைச்சர் சரத் பொன்­சேகா பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­துள்ள நிலையில் இந்த விவ­காரம் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில், இத்­தனை கால­மாக வெளி­வ­ராத உண்­மைகள் இன்று உரிய நபரின் மூல­மாக வெளி­வந்­தி­ருப்­பது முக்­கி­ய­மான திருப்­பு­மு­னை­யாக அமைந்­துள்­ளது. இறுதி யுத்­தத்தை வழி­ந­டத்­திய அப்­போ­தைய இரா­ணுவத் தள­ப­தி­யான சரத் பொன்­சேகா மூல­மாக இவ்­வாறு கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றமை தொடர்பில் அர­சாங்கம் அக்­கறை செலுத்த வேண்டும். விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்­தது ஆரோ­கி­ய­மான விட­ய­மாகும். 

ஆனால் யுத்­தத்தை எவ்­வாறு முடித்­தனர் என்­பதில் தான் சர்­வ­தேச தரப்பில் இருந்து கேள்வி எழுந்­துள்­ளது. இறுதி தரு­ணங்­களில் நடந்­த­தாகக் கூறப்­படும் போர்க்­குற்­றங்கள் தொடர்பில் இத்­தனை கால­மாக மஹிந்த ராஜபக் ஷ தரப்பு மறுப்பு தெரி­வித்து வந்த நிலையில் யுத்­தத்தை முன்­னெ­டுத்து சென்ற தள­ப­தியே இறுதி தரு­ணத்தில் குற்­றங்கள் இடம்­பெற்­றது எனவும் வெள்­ளைக்­கொடி விவ­காரம் தொடர்பில் சர­வ­தேச விசா­ரணை வேண்டும் எனவும் கூறு­வதை சாதா­ர­ண­மாகக் கொள்­ளக்­கூ­டாது.

எவ்­வாறு இருப்­பினும் சர்­வ­தேச தரப்பின் பரிந்­து­ரைகள் தொடர்பில் நாம் கவ­னத்­தில்­கொண்டு செயற்­பட வேண்­டிய கட்­டாயம் உள்­ளது. இறுதி யுத்­தத்தில் மோச­மான வகையில் தவ­றுகள் நடை­பெற்­றி­ருந்தால் உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் யார் என இனங்­கா­ணப்­பட்டு அவர்கள் தொடர்பில் சட்ட நட­டிக்­கைகள் மேற்­கொள்­ள­வேண்டும். இப்­போது சரத் பொன்­சேகா இவ்­வாறு கருத்­து­களை முன்­வைத்­துள்ள நிலையில் இதையும் ஆதா­ர­மாகக் கொண்டு அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை விரை­வாக முன்­னெ­டுக்க வேண்டும்.

அதேபோல் உண்­மையில் இறுதி யுத்­தத்தில் எமது இரா­ணுவம் மனித உரிமை மீறல்­களை மேற்­கொண்­டி­ருந்தால் அவை தொடர்பில் விசா­ரிக்க வேண்டும். இறுதி தரு­ணங்­களில் ஒரு சிலரின் தூண்­டு­தலின் பேரிலோ அல்­லது புக­ழையும் பெய­ரையும் தக்­க­வைக்கும் வகை­யிலோ ஒரு­சிலர் மோச­மான வகையில் செயட்­பட்­டி­ருந்தால், சரத் பொன்­சேகா கூறி­ய­தைபோல் மோச­மான வகையில் இவர்கள் மக்­களை கொன்று குவித்­தி­ருந்தால் அந்த குற்­றங்கள் தொடர்பில் தனிப்­பட்ட விசா­ர­ணை­களை மேற்­கொண்டே தீர­வேண்டும்.
ஒரு­சிலர் செய்­த­தாக கூறப்­படும் தவ­று­க­ளுக்­காக ஒட்­டு­மொத்த இரா­ணு­வத்­தையும் குற்­ற­வா­ளி­க­ளாக நிறுத்த முடி­யாது. 

இரா­ணு­வத்தை தலை­மை­தாங்கும் எவ­ரேனும் தமது தனிப்­பட்ட அதி­கா­ரத்தில் மக்­களை அழித்­தி­ருந்தால் அதை கண்­ட­றிந்து அவர்­களை தண்­டிக்க வேண்­டி­யது எமது கட­மை­யாகும்.

மேலும் பிர­பா­கரன் இறுதி நேரத்தில் உயி­ருடன் இருந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற உண்மைகளில் கூட இப்போது சந்தேகம் எழுந்துள்ளது. எவ்வாறு இருப்பினும் இந்த உண்மைகள் அனைத்தையும் கண்டறிய அரசாங்கம் முன்வரும். அதேபோல் இப்போது வென்றெடுத்துள்ள சமாதானம், நாட்டின் அமைதியான சூழல் மீண்டும் பாதிக்கப்படக்கூடாது. இப்போது வெளிவரும் உண்மைகளினால் மீண்டும் குழப்பகரமான சூழல் ஒன்று உருவாகிவிடக் கூடாது என்றார்
« PREV
NEXT »

No comments