Latest News

March 04, 2016

நெடுந்­தீவு மாலித் துறை­மு­கத்­தை­விட்டுநெடுந்­தீவு மாலித் துறை­மு­கத்­தை­விட்டு கடற்­ப­டை­யினர் வெளியேற வேண்டும்வெளியேற வேண்டும்
by admin - 0

நெடுந்­தீவுப் பிர­தேச ஒருங்­கி­ணைப்­புக்­குழுக் கூட்டம் நேற்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை சேனா­தி­ராஜா, அங்­கஜன் இரா­ம­நாதன், சிவ­ஞானம் சிறி­தரன் ஆகி­யோரின் இணைத் தலை­மையில் இடம்­பெற்­றது. அத்­துடன் பிர­தேச செயலர் எஸ்.ஜெய­காந்தன், வட­மா­காண சபை உறுப்­பி­னர்­க­ளான விந்தன் கன­க­ரட்ணம், அனந்தி சசி­தரன் ஆகி­யோ­ருடன் கடற்­ப­டை­யினர் பொலிஸார் மற்றும் அரச அதி­கா­ரி­களும் பங்கு கொண்­டனர்.

மேற்­படி இக்­கூட்­டத்தில் பல்­வேறு பிரச்­சி­னைகள் விட­யங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­துடன் சில தீர்­மா­னங்­களும் நிறை­வேற்­றப்­பட்­டன.

அந்த வகையில் நெடுந்­தீவு மாலித்­து­றை­முகம் கடந்த காலங்­களில் நெடுந்­தீவு மக்­களின் கட்­டுப்­பாட்டில் பாவ­னையில் இருந்­துள்­ளது. அதனை தற்­போது கடற்­ப­டை­யினர் அப­க­ரித்து தமது கட்­டுப்­பாட்டில் வைத்­துள்­ளனர். எனவே கடற்­ப­டை­யினர் இத்­து­றை­முக இறங்கு தளத்தை விட்டு வெளியேற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்­தனர். இத் தீர்­மானம் இணைத் தலை­மை­க­ளினால் சபையில் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது.

அத்­துடன் நெடுந்­தீ­வுக்­கான அம்புலன்ஸ் படகுச் சேவை மற்றும் வட­தா­ரகை சேவை என்­பன தனி­யா­ரினால் நடத்­தப்­படல் வேண்டும் என்றும் கோரி அத்­துடன் நிரந்­தர வைத்­தியர் இல்­லாத அவல நிலையை மக்கள் எதிர்­நோக்கி வரு­கின்­றனர். வைத்­தியர் எழுதிக் கொடுக்கும் மருந்து சிட்­டையை வாசிக்கும் அளவில் போதி­ய­ளவு ஆளணி பற்­றாக்­குறை ஏற்­ப­டு­கின்­றது. அத்­துடன் அவ­சர வைத்­தி­ய­சே­வைகள், போதிய வைத்­திய சேவைகள் எது­வு­மின்­றிய நிலையில் மக்கள் பிரச்­சி­னை­களைச் சந்­தித்து வரு­கின்­றனர்.

எனவே நெடுந்­தீவு வைத்­தி­ய­ச­ாலைக்கு போதிய வைத்­திய ஆள­ணி­களை வழங்­கு­வ­துடன் நிரந்­தர வைத்­தி­ய­ராக ஆண் வைத்­தியர் நியமிக்­கப்­படல் வேண்டும் என்றும் மக்­களால் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.

இக்­கோ­ரிக்­கை­யினை ஏற்றுக் கொண்டு ஏக­ம­ன­தாகத் தீர்­மானம் நிறை­வேற்­றிய இணைத் தலை­மைகள் இது தொடர்­பாக மத்­திய அர­சுக்குக் கடிதம் அனுப்­பு­வ­தா­கவும் தெரி­வித்­தனர்.மேலும் விவ­சாயத் திணைக்­களம், நீர்ப்­பா­சனத் திணைக்­களம்., கம­ந­ல­சே­வைகள் திணைக்­களம் என்­பன முறை­யான திட்­டங்கள் எத­னையும் சபையில் முன்­வைக்­க­வில்லை. இதற்­கான நிதி ஒதுக்­கீடு எது­வு­மற்ற நிலையில் செய­லற்ற நிலையில் இம் மூன்று திணைக்­க­ளங்­களும் உள்­ளன. அதே­வேளை விவ­சாயம் கைவி­டப்­பட்ட நிலையில் உள்­ளமை போன்­றன கலந்­து­ரை­யா­டப்­பட்­டன. இந்த மூன்று திணைக்­க­ளங்­களும் தங்கள் திட்­டங்­களை முன்­மொ­ழிய வேண்­டு­மென இணைத்­த­லை­மை­யினால் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் கடல் அரிப்பைத் தடுப்­ப­தற்கு கடல் அரிப்புத் தடுப்­ப­ணைகள் அமைக்­கப்­படல் வேண்­டு­மெனக் கூறிய அதி­கா­ரி­க­ளிடம் நீண்ட காலம் கோரிய நிலையில் இது­வரை எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இதனால் இந்தத் தீவின் குடி­ம­னைகள் கட­லுக்குள் மூழ்கும் அபாயம் ஏற்­பட்­டுள்­ளது. இந்த அபா­யத்­தினைத் தடுக்க கடல் அரிப்பு தடுப்­ப­ணைகள் அமைக்­கப்­படல் வேண்டும் என்றும் வெ ளிச்­சக்­கூடு, வெளிச்­சக்­கூட்டுக் கம்பம் என்­ப­னவும் ஒழுங்கு செய்ய உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மெ­னவும் கோரிக்கை விடுத்­தனர். இது­த­விர இந்­திய மீன­வர்கள் தொடர்­பிலும் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது
« PREV
NEXT »

No comments