Latest News

March 29, 2016

மன்னாரில் சைக்கிளில் சென்றபோது இராணுவத்தின் பிடியில் சிக்கியவர் இன்னும் வீடு திரும்பவில்லை
by admin - 0

எங்கள் குடும்ப கஷ்­டத்தின் நிமித்தம் மன்னார் நக­ருக்கு சைக்­கிளில் வியா­பா­ரத்­துக்கு சென்று வீடு திரும்­பிய எனது கணவர் தாரா­புர சந்­தியில் வைத்து இரா­ணு­வத்­தி­னரால் கைது செய்­யப்­பட்டு அழைத்து செல்­லப்­பட்டார். ஆனால் இது­வ­ரைக்கும் வீடு திரும்­பவும் இல்லை எங்கு இருக்­கின்றார் என்ற தக­வல்­களும்் இல்லை என பெண்­ணொ­ருவர் காண­ாமல் போனோர் குறித்து விசா­ரணை நடத்தும் ஆணைக்­குழு முன்­னி­லையில் நேற்று சாட்­சி­ய­ம­ளித்தார்.

நேற்று திங்கட்கிழமை காணாமல் போனோர் தொடர்­பாக விசா­ரணை செய்யும் ஆணைக்­குழு மன்­னாரில் நடத்­திய அமர்வில் சாட்­சி­ய­ம­ளித்த
திரு­மதி இரா­ஜ­ரெட்ணம் லட்­சுமி (வயது 64) மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

தனது சாட்­சி­யத்தில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில் எனது கணவர் சுப்­பையா இரா­ஜ­ரெட்ணம் (அப்­பொ­ழுது அவரின் வயது 45) 18.01.1991 அன்று  எங்கள் குடும்ப கஷ்­டத்தின் நிமித்தம் மன்னார் நக­ருக்கு வியா­பார நோக்­கத்­துக்­காக சைக்­கிளில் சென்று பேசாலை சின்­னக்­க­ரி­சலில் இருக்கும் எங்கள் வீட்­டுக்கு திரும்பிக் கொண்­டி­ருந்­த­போது தாரா­புரம் சந்­தியில் ரோந்தில் நின்ற இரா­ணு­வத்­தி­னரால் பிடிக்­கப்­பட்டார்.

எருக்­க­லம்­பிட்­டி­யி­லுள்ள இரா­ணுவ முகாமைச் சார்ந்த இரா­ணு­வத்­தி­னரே எனது கண­வரை பிடித்­தார்கள் என்­பது எனக்கு நன்கு தெரியும். அதனை கண்ணால் கண்­ட­வர்கள் எனக்கு உடன் தெரி­வித்­தனர்.

ஏனென்றால் எனது கண­வ­ருடன் நான்கு பேர் வந்­தனர். எனது கண­வரை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு ஏனை­யோரை விடு­வித்­துள்­ளனர்
இதைக் கேள்­விப்­பட்டு நான் உடன் தாரா­பு­ரத்­துக்குச் சென்று அங்கு நின்ற இரா­ணு­வத்­தினரிடம் விசா­ரித்­த­போது தாங்கள் பிடிக்­க­வில்­லை­யென தெரி­வித்­தனர்.

இவ்­வாறு தள்­ளாடி. எருக்­க­லம்­பிட்டி ஆகிய இரா­ணுவ முகாம்­க­ளுக்கும் சென்று விசா­ரித்தேன் ஆனால் அவர்கள் இது­வி­ட­ய­மாக அக்­க­றை­யின்றி இங்கு எவரும் பிடிக்கப்படவில்லையென தெரிவித்தனர்.

ஆனால் இதுவரைக்கும் எனது கணவர் எங்கு இருக்கின்றார் என்று தெரியாத நிலை யில் இருக்கின்றேன் என்றார்.
« PREV
NEXT »

No comments