Latest News

March 29, 2016

மஹிந்த ஆத­ர­வா­ளர்­க­ளின்­ க­டும் ­எ­திர்ப்பால் கைவி­டப்­படும் ஆளும்­த­ரப்­பி­ன­ரின்­ கூட்டம் திட்­ட­மிட்ட வகையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக சந்­தேகம்
by admin - 0

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ஆத­ர­வா­ளர்­களின் தொடர்ச்­சி­யான எதிர்ப்­பினால் ஆளும்­ கட்­சியின் அமைச்­சர்கள் உள்­ளிட்ட சுதந்­திரக் கட்­சி­யினர் பங்­கேற்கும் கூட்­டங்கள் இடைநடுவில் கைவி­டப்­படும் சம்­ப­வங்கள் நாட­ளா­விய ரீதியில் இடம்­பெற்று வரு­கின்­றன.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யி­னர்­ நா­ட­ளா­விய ரீதி­யில்­ ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யின்­ அ­ர­சாங்­கத்­திற்கு எதி­ரா­க ­கூட்­டங்­க­ளை­யும் பே­ர­ணி­க­ளை­யும்­ முன்­னெடுத்து வரு­வ­தோடு பாரா­ளு­மன்­றத்­தி­லும்­ கடும் எதிர்ப்­பு­களை தெரி­வித்து வரு­கின்­றனர்.

இவ்­வா­றான நிலையில் ஆளும்­கட்­சி­யின்­ அ­மைச்­சர்­கள்­ உள்­ளிட்ட சுதந்­தி­ரக் ­கட்­சி­யி­னர் ­பங்­கேற்­கும்­ கூட்­டங்­களும் பிர­தேச மட்­டங்­களில் கட்­சி­யின்­ பி­ர­தி­நி­தி­க­ளி­னால்­ முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான கூட்­டங்­க­ளின் ­போது முன்னாள் ­ஜ­னா­தி­ப­தி­யும் ­தற்­போது குரு­நா­கல் ­மா­வட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய மஹிந்த ராஜ­ப­க் ஷ­வின்­ ஆ­த­ரவு தரப்­பி­னர்­ ஆளும் சுதந்­திரக் கட்­சி­யி­ன­ரால் ஒ­ழுங்கு செய்­யப்­ப­டும்­ கூட்­டங்­க­ளுக்கு தேசிய அர­சாங்­கத்­தின் கீழ் அங்­கத்­து­வம் ­பெறும் அமைச்­சர்­க­ளின் ­வ­ரு­கை­க­ளுக்கு கடும்­ எ­திர்ப்­பினை தெரி­வித்து வரு­கின்­றனர்.

திவு­லப்­பிட்­டிய கூட்டம்

கடந்த சனிக்­கி­ழமை திவு­லப்­பிட்­டிய பகு­தி­யில் ­ம­ஹிந்த ராஜ­ப­க் ஷ­வின்­ ஆ­த­ர­வா­ளர்­க­ளின்­க­டும்­ எ­திர்ப்­பி­னால்­ ஆ­ளும்­ கட்­சி­யின்­அ­மைச்­சர்­கள்­ உள்­ளிட்ட சுதந்­தி­ரக் ­கட்­சி­யி­னர்­ பங்­கேற்ற கூட்­டம்­ இ­டை­ ந­டு­வில் ­கை­வி­டப்­பட்­டது. இக்­கூட்­ட­மா­னது முன்­னாள் ­ஜ­னா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டார நாயக்க குமாரதுங்க தலை­மை­யில்­ ந­டை­பெ­ற­வி­ருந்­தது. கட்­சி­யின்­ முக்­கி­யஸ்­தர்­கள்­ சி­லர்­ இக்­கூட்­டத்­தில்­ பங்­கேற்­றி­ருந்த நிலை­யில்­ மக்கள் கூக்­கு­ரல்­ எ­ழுப்பி கடும்­ எ­திர்ப்­பினை வெளி­யிட அங்கு பெரும் ­கு­ழப்­ப ­நிலை ஏற்­பட்­டது.
சந்­தி­ரி­கா­வின் ­மெ­ய்ப் ­பா­து­காப்­பா­ளர்­கள்­ கூட்டம் நடை­பெற முன்­ன­தா­கவே அங்கு வந்­தி­ருந்த நிலை­யில்­ க­டும்­ எ­திர்ப்­புக்­கள்­ க­ாணப்­ப­டு­வது தொடர்­பில்­ அ­வ­ருக்கு அறி­வித்­த­மை­யி­னை­ய­டுத்து சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க கூட்­டத்தை கைவிட்டார்.

இவ்­வா­றான நிலை­யில்­ கட்­சி­யின்­ ஏ­னைய உறுப்­பி­னர்­கள்­ உட்­பட அமைச்­சர்­க­ளின்­ கூட்­ட­மா­னது முன்­னெ­டுக்­கப்­பட்ட வேளை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன உட்­பட சில அமைச்­சர்­க­ளின் ­பெ­யர்­களை தெரி­விக்­கும்­போது காட்­டிக்­கொ­டுப்­போர் ­தொ­டர்­பில்­ கூ­றும் ­க­தை­களை எமக்கு கேட்க முடி­யாது என அதற்­கும் ­மக்­க­ளி­னால்­ கடும் எதிர்ப்­புக்­கள் ­தெ­ரி­விக்­கப்­பட்­டன. இவ்­வா­றான கடும்­ எ­திர்ப்­பு­க­ளுக்கு மத்­தி­யில்­ கூட்­ட­மா­னது கைவி­டப்­பட்­டது.

பெத்­தே­கம கூட்டம் பெத்­தே­கம பிர­தே­சத்தில் பிரதி அமைச்சர் நிசாந்த முத்­து­ஹெட்­டி­க­ம­வினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த கூட்­ட­மொன்றின் போது, மஹிந்த அம­ர­வீ­ர­விற்கு கடு­மை­யான எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.
உரையை கேட்­கு­மாறு நிசாந்த முத்­து­ஹெட்­டி­கம குழு­மி­யி­ருந்த மக்­க­ளிடம் கோரிய போதிலும், அதனை மக்கள் நிரா­க­ரித்­தி­ருந்­தனர்.இதனால் மஹிந்த அம­ர­வீர உரை­யாற்­றா­ம­லேயே மேடையை விட்டு வெளி­யேற நேரிட்­டது.
அமைச்சர் மேடையை விட்டு வெளி­யேறி வாக­னத்தில் ஏறிச் செல்லும் வரையில் கூக்­குரல் எழுப்பி சிலர் கடு­மை­யான எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
கண்டி கூட்டம்
ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் பொதுச் செய­லாளர் மஹிந்த அம­ர­வீர, முன்னாள் பொதுச் செய­லாளர் சுசில் பிரே­ம் ஜ­யந்த ஆகியோர் நேற்று முன்­தி­னம்­ கண்­டியில் பங்­கேற்ற சுதந்­திரக் கட்­சியின் கூட்­டங்­க­ளிலும் மஹிந்த தரப்பு ஆத­ர­வா­ளர்கள் கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்­தனர்.
அமைச்­ச­ருக்கு கூக்­குரல் எழுப்பி கடு­மை­யான எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்­தனர். இவ்­வாறு கிராம மட்­டங்­கள்­ உட்­பட பிர­தேச மட்­டங்­க­ளின்­ கூட்­டங்­க­ளின் ­போது ஆளும் ­கட்­சி­யின்­ அ­மைச்­சர்­கள்­ உட்­பட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு மஹிந்த ஆத­ரவு தரப்­பி­னர்­ க­டும்­எ­திர்ப்­பினை தெரி­வித்து வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

அர­சாங்­கத்­தின் ­நி­லைப்­பாடு ஆளும்கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட சுதந்திரக் கட்சியினர் பங்கேற்கும் கூட்டங்களின் போது திட்டமிட்ட வகையில் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்படுகின்றதா என ஆளும் கட்சியினை சேர்ந்த வர்கள் சந்தேகம் வெளியிட்டுள் ளனர்.

பொது எதிரணியினரின் நிலைப்பாடு நல்லாட்சியினை ஸ்தாபிப்பதாக கோரி மக்களை ஏமாற்றி ஆட்சி பீடத்தை கைப்பற்றிய இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளில் இன்று அனைத்து மக்களும் அதிருப்தியடைந்துள்ளதோடு அரசின் உண்மை நிலையினை புரிந்து கொண்டதன் விளைவாகவே மக்கள் தமது எதிர்ப்புக்களை தெரிவிக்கின்றனர். இந்த அரசாங்க த்தின் தொடர்ச்சியான நாட்டிற்கு எதிரான செயற்பாடுகளுக்கு மக்கள் பதிலடி தருவார்கள் என பொது எதிரணியினை சேர்ந்த உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
« PREV
NEXT »

No comments