Latest News

March 22, 2016

அதி­கா­ரத்தை பகிர வேண்டாம் வலி­யு­றுத்­து­கின்­றது ஜே.வி.பி
by admin - 0

ஒற்றை ஆட்­சிக்குள் அதி­கா­ரத்தை பகிர்­வ தில் மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கு ஒரு­போதும் உடன்­பா­டில்லை. மக்­க­ளி­டையே சக­ வாழ்வை ஏற்­ப­டுத்த வேண்­டு­மென்­பதே எமது நிலைப்­பா­டாகும். எனவே, ஒற்­றை­யாட்­சிக் குள் அதி­காரப் பகிர்வு வழங்க முற்­படும்.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை எதிர்க்­கின்­றோ­மென ஜே.வி.பி.யின் பொதுச்­செ­ய­லாளர் டில்வின் சில்வா தெரி­வித்தார்.

அதி­கார பகிர்வு தொடர்­பி­லான மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நிலை­பாடு குறித்து வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

எமது நாட்டில் 1987ஆம் ஆண்­டிலும் அதி­கார பகிர்வு வழங்­கப்­பட்­டது. ஆனால் இதனால் வடக்கு மக்­க­ளுக்கு மட்­டு­மல்­லாது வேறு எந்த மாகா­ணங்­க­ளுக்கும் எவ்­வித பலனும் கிடைக்­க­வில்லை. எனவே அதி­கார பகிர்­வினால் பய­னில்லை என்ற படிப்­பினை எமது நாட்டு அர­சியல் தலை­மை­க­ளுக்கு இருக்க வேண்­டி­யது அவ­சியம்.

இந்­நி­லையில் வடக்கு மக்­க­ளுக்கு அதி­காரப் பகிர்­வினால் பெரும்­பலன் கிடைக்­கு­மென எதிர்­பார்ப்­பதும் வேடிக்­கை­யான விட­ய­மாகும். அதி­கார பகிர்வை விடவும் வடக்கு மக்கள் சுதந்­தி­ர­மாக அர­சியல் பிரச்­சி­னைகள் இல்­லாமல் வாழும் சூழலை உரு­வாகிக் கொடுக்க வேண்டும் என்­பதே காலத்தின் தேவை­யாகும்.

யுத்தம் முடி­வுற்று 5 வரு­டங்கள் கடந்த நிலையில் வடக்கு தமிழ் மக்­களின் வாழ்வில் சுபீட்சம் ஏற்­ப­ட­வில்லை. வடக்கு தமிழ் மக்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி எமது நாட்டில் சகல பகு­தி­க­ளிலும் வாழும் தமிழ், சிங்­கள,முஸ்லிம் மக்­க­ளுக்­கான நியா­ய­மான தீர்­வுகள் பெற்­றுக்­கொ­டுக்­க­பட வேண்டும். சக­லரும் சமம் என மதித்து வாழும் சூழலை ஏற்­ப­டுத்­தவே அர­சாங்கம் முற்­பட வேண்டும்.
அதி­கார பகிர்வு விட­யத்தில் தற்­போது மக்கள் அவ­சரம் காட்­டு­தாக தெரி­ய­வில்லை. அர­சியல் தலை­மை­க­ளுக்கு அதி­காரம் பகி­ரப்­பட வேண்டும் என்ற தேவை உள்­ளது. வடக்கில் அர­சியல் செய்­ப­வர்கள் முதலில் மக்கள் தேவை­களை கவ­னிக்க வேண்டும்.

வடக்கில் கரை­யோர பகு­தி­களில் வாழும் மக்­களின் ஜீவ­னோ­பா­ய­மாக மீன்­பிடி தொழில் உள்ள போது அதனை இந்­திய மீன­வர்கள் சூறை­யா­டு­கின்­றனர். மறு­புறம் மக்­க­ளி­டையே பிரி­வி­னை­வாதம் தூண்­டப்­ப­டு­கின்­றது. இதனால் பல சவால்­க­ளுக்கு வடக்கு மக்கள் முகம் கொடுத்­துள்­ளமை வருந்­த­தக்­கது. அதனால் அவர்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­பது குறித்து வடக்கின் மக்கள் பிர­தி­நிகள் கவ­ன­மெ­டுப்­பார்­க­ளாயின் வர­வேற்­கத்­தக்­கது.

இவ்­வா­றி­ருக்க அர­சாங்கம் தற்­போது நாட்டில் சமஷ்டி ஆட்­சிக்கு இட­மில்லை என்ற நிலைப்­பாட்டில் உள்­ளது. ஆனால் அதற்கு மாறாக ஒற்றை ஆட்­சிக்குள் அதி­காரம் பகி­ரப்­படும் என்று கூறு­வ­தையும் எம்மால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

உலக நாடுகள் பலவும் அதி­கார பகிர்­வினால் உள்­நாட்டு சிக்கல்களை தீர்க்க முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்த போதும் மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் இதனை ஏற்காது. எவ்வாறாயினும் எமது நாட்டிற்கு அதிகார பரவலாக்கம் வேண்டாம். மாறாக மக்களிடையே சகவாழ்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்றார்.
« PREV
NEXT »

No comments