Latest News

January 09, 2016

சரத் பொன்சேகாவின் இணையத்தளம் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்!
by admin - 0

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தலைமையில் ஜனநாயக கட்சியின் இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றுமாலை இடம்பெற்ற இந்த சைபர் தாக்குதல் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயல் என சந்தேகிக்கப்படுகின்றது.
லங்கா இஸட் நியூஸ் என்ற இந்த இணையத்தளத்தின் முகப்பு பகுதிக்கு பிரவேசிக்கும் போது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொடியும் பிரசார வாசகங்களும் காணப்படுகின்றன. மேலும் பின்னணியில் பிரசார இசையையும் கேட்க கூடியதாக இருக்கின்றது என ஜனநாயக கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
சில எதிர்ப்புக் குழுக்கள் இலங்கையின் இணையத்தளங்களுக்கு பிரவேசித்து அவற்றின் மீது சைபர் தாக்குதல்களை நடத்தியிருந்தன. எனினும் இலங்கையின் இணையத்தளம் ஒன்றின் மீது ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளமை இதுவே முதல் முறையாகும்.
ஜனநாயகக் கட்சியின் இணையத்தளம் அண்மைய காலமாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிரான பல கட்டுரைகளை வெளியிட்டிருந்தது. இதுவே சைபர் தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
« PREV
NEXT »

No comments