Latest News

December 11, 2015

தமிழக மழை வெள்ளப்பாதிப்பு பிரித்தானியாவில் விசேட பூஜை
by admin - 0

தமிழ்நாட்டில் வெள்ள அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்த அனைவரது ஆத்மசாந்தி வேண்டியும் வெள்ள அனர்த்தத்தில் சிக்கித் தவிக்கும் மக்களின் இன்னல்கள் தீரவும் பிரித்தானியாவில் உள்ள சைவத் திருக்கோயில் ஆலயங்களிலும் மற்றும் இந்து ஆலயங்களிலும் இன்று வெள்ளிகிழமை நண்பகல் 12 மணிக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.


தமிழகத்தில் நொவெம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களில் பெய்த கடுமையான மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பல நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.


குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், சிதம்பரம், ராமேஸ்வரம் போன்ற மாவட்டகளில் உள்ள நகரங்கள், கிராமங்கள் என்பன மழை வெள்ளத்தில் மூழ்கின.

 

இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடு வாசல்கள், சொத்துக்கள், கால்நடைகள் என்பவற்றை இழந்து நிர்கதியான நிலையில் பரிதவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments