எனது சகோதரனை இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கிய சுகந்ததீபன் என்பவரே கடத்தி சென்று இருக்கலாம் என தான் சந்தேகிப்பதாக சகோதரர் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு சனிக்கிழமை காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அந்த சாட்சியமர்வில் கிருஷ்ணமூர்த்தி குணசீலன் என்பவர் சாட்சியம் அளிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எனது சகோதரனான கிருஷ்ணமூர்த்தி தர்மசீலன் என்பவரை 2008 ம் ஆண்டு 2ம் மாதம் 1ம் திகதி இரவு ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை வீடு புகுந்து அடித்து இரத்தம் சொட்ட சொட்ட இழுத்து சென்றனர்.
சகோதரனை இழுத்து சென்றவேளை சகோதரனின் மனைவி பிள்ளைகள் தடுக்க முற்பட்ட போது அவர்கள் மீது துப்பாக்கி பிடி மற்றும் சப்பாத்து கால்களால் மிக மோசமாக தாக்கினார்கள். அதனால் அவர்களும் கடும் காயத்திற்கு உள்ளாகி இருந்தனர்.
எனது சகோதரனை அடித்து இழுத்து சென்றவர் அக் காலப்பகுதியில் கொக்குவிலை சேர்ந்த சுகந்ததீபன் எனும் நபர் தான் என சந்தேகிக்கின்றேன்.
பின்னர் சுகந்ததீபன் எனும் நபர் 2009ம் ஆண்டு காலப்பகுதியில் இனம் தெரியாத நபர்களால் கொக்குவிலில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.என தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
No comments
Post a Comment