Latest News

December 31, 2015

துபாயில் வானுயர் கட்டடம் ஒன்றில் தீ
by Unknown - 0

டுபாய் பர்ஜ் கலீபாவில் அமைந்துள்ள ஆயிரம் அடி உயரமான விடுதி கட்டிடம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய அமீரகத்தில் உள்ள டுபாயில் அடுக்குமாடி ஹொட்டல் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீவிபத்து அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வந்ததன் இடையே டுபாயில் புர்ஜ் கலிஃபா அருகே உள்ள ஹொட்டல் ஒன்றில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.

இந்த விபத்தில் இதுவரை எந்தவித ஆள் அபாயம் குறித்தும் அதிகார பூர்வ தகவல்கள் எதுவும் அரசு மற்றும் ஹொட்டல் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.

புத்தாண்டை கோலாகலத்துடன் கொண்டாடும்பொருட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் குவியும் நாடுகளில் ஒன்று ஐக்கிய அமீரகத்தின் டுபாய் என்பது குறிப்பிடத் தக்கது.

இன் நிலையில் இத் தீ விபத்து ஏற்பட்ட ஹொட்டலின் அருகே அமைந்துள்ள புர்ஜ் கலிஃபாவில் புத்தாண்டை முன்னிட்டு வானவேடிக்கைகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதை கண்டு களிக்கவே 20 லட்சம் பொதுமக்கள் அப்பகுதிக்கு குவியலாம் என அதிகாரிகள் எதிர் பார்த்திருந்தனர். 

மேலும் புர்ஜ் கலிஃபாவில் வானவேடிக்கைகள் நடைபெறுவதற்கு சில மணித்துளிகள் இடைவெளியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வழமையாக எந்த மாறுதலும் இன்றி நடைபெறும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

« PREV
NEXT »

No comments