மாரியம்மாள் மறைவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரங்கல்
07-11-2015
ஈழத் தமிழ் மக்களையும், ஈழ மண்ணையும் ஆழமாக நேசித்த அன்புத் தாய் மாரியம்மாள்
ஈழத் தமிழ் மக்களின் அன்புக்கும் பெருமதிப்பிற்கும் உரிய அண்ணன் வை.கோபால்சாமி அவர்களின் அன்புத் தாயார் மாரியம்மாள் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைகின்றோம்.
கடந்த மூன்றரை தசாப்தங்களாக ஈழத் தமிழ் மக்கள் மேற்கொண்டுவந்த உரிமைப் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்தற்காக பேரன்னை மாரியம்மாள் தன்னை ஈடுபடுத்தி அற்பணிப்புடன் உழைத்திருந்தார்.
ஈழத்து இளைஞர்களுக்கும் மக்களுக்கும் ஆறுதலளித்துஇ உணவளித்து தங்குமிடம் மருத்துவம் என பல்வேறு வசதிகளை வழங்கி எமது மக்களின் இலட்சியப் போராட்டப்பயணத்தில் தன்னை அற்பணிப்புடன் ஈடுபடுத்தியிருந்தார்.
ஈழத் தமிழ் மக்களதும்இ ஈடு இணையற்ற போராட்டத்தினதும் பேரன்பைப் பெற்ற ஈழத் தமிழ் மக்களின் விடிவுக்காக ஓய்வின்றி புயலாக உழைத்துவரும் வைகோ என்ற பெருமகனைப் பெற்றெடுத்த பெருமைக்குரிய தாயார் இன்று எம்மோடு இல்லை என்ற செய்தி எமது மக்களை தீராத்துயருக்குள் தள்ளியள்ளது.
எமது மக்களையும் போராட்டத்தையும் ஆழமாக நேசித்து அந்த மக்களின் விடுதலையை தனது இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்த அன்னையின் புகழ் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.
அன்புத்தாய் மாரியம்மாள் அவர்களின் இழப்பினால் துயரடைந்து நிற்கின்ற அன்பு அண்ணன் வைகோ அவர்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் ஈழத் தமிழ் மக்கள் சார்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர்
செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
No comments
Post a Comment