Latest News

November 18, 2015

தமது விடுதலைக்காக அமையம் ஒன்றை உருவாக்கி, பெரும் கூட்டமாக போராடுமாறு அரசியல் கைதிகள் வலியுறுத்து
by admin - 0

தமது விடுதலைக்காக வடக்கு மாகாண முதலமைச்சரையும் உள்ளடக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சிவில் சமூக மனித உரிமை அமைப்புகள், சட்டவாளர்கள், சர்வ மதத்தலைவர்கள், புலம்பெயர் உறவுகள் ஒன்றுபட்டு, தமது விடுதலைக்காக ஒரு அமையம் ஒன்றை உருவாக்கி, குழுவாக சகல முயற்சிகளிலும் ஈடுபடவேண்டும் என்று அரசியல் கைதிகள் தெரிவித்தனர். 

நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் கடந்த 10 நாள்களாக சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவந்த அரசியல் கைதிகளின் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேற்றுக் காலை சென்று அரசியல் கைதிகளுக்கு, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை.சேனாதிராசா,  ஈ.சரவணபவன்,சிவசக்தி ஆனந்தன்,சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் நீராகாரம் வழங்கினர். இதன்போதே அரசியல் கைதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். 
« PREV
NEXT »

No comments