Latest News

November 21, 2015

யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் இன்று புகைவண்டியுடன் கார் மோதி விபத்து! ஒருவர் பலி - 3 பேர் காயம்
by admin - 0

யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் இன்று புகைவண்டியுடன் கார் மோதி விபத்து! ஒருவர் பலி - 3 பேர் காயம்


யாழ்.கச்சேரி- நல்லூர் வீதியில் இன்று மதியம் 1. 00 மணியளவில் புகைவண்டியுடன் கார் மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்த புகைவண்டி வருவதை பொருட்படுத்தாமல் கச்சேரி-நல்லூர் வீதியில் உள்ள பாதுகாப்பற்ற புகைவண்டி கடவையை மேற்படி இளைஞர்கள் காரில் கடக்க முற்பட்ட போது விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பொறியியலாளரான எஸ்.சுதாகரன் (வயது41) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் ஆதவன் (வயது28), அரவிந்தன் (வயது28), கம்பதாஸன் (வயது23) என்ற மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்




« PREV
NEXT »

No comments