Latest News

September 30, 2015

பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க கோரி வவுனியாவில் பேரணி
by Unknown - 0

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கக் கோரி வவுனியாவில் இன்று  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக இருந்து வவுனியா பேரூந்து தரிப்பிடம் வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


குறித்த பேரணியில் ‘ சிறுவர்களை வாழ விடுங்கள்’ ‘பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க அனைவரும் ஒன்றிணையுங்கள்’ என்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் பேரணி இடம்பெற்றது.

வவுனியா பிரதேச செயலாளரினால் ஆரம்பித்து வைக்க்பபட்ட இப்பேரணியில் இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர்கள், வடமாகாணசபை உறுப்பினர் எம். தியாகராசா, திவிநெகும அபிவிரத்தி உத்தியோகத்தாகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



« PREV
NEXT »

No comments