Latest News

July 08, 2015

பத்து வரு­டங்­க­ளாக குற்­றங்கள் இடம்­பெ­றாத கிராமம் கட­மையில் ஒரே­யொரு பார்­வை­யற்ற பொலிஸ் அதி­காரி
by admin - 0

உலகில் குற்­றங்கள் அதி­க­ரித்­துள்ள நிலையில் பாது­காப்பு பணியில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­ப­வர்­க­ளது தொகை­யிலும் கணி­ச­மான அதி­க­ரிப்பு ஏற்­பட்டு வரு­கி­றது.
ஆனால் தென் சீனாவில் குயி­ஸொயு பிராந்­தி­யத்தில் லன்பா நக­ரி­லுள்ள சி சொங் பொலிஸ் நிலை­யத்தில் பணி­யாற்றும் கிரா­ம­மொன்றைச் சேர்ந்த பார்­வை­யற்ற ஒரே­யொரு பொலிஸ் அதி­காரி, தனது கிரா­மத்தில் கடந்த ஒரு தசாப்த கால­மாக எது­வித குற்­றமும் இடம்­பெ­றாது சட்டம் ஒழுங்கைப் பாது­காத்து வரு­கிறார்.

கண் அழுத்த நோய் மற்றும் கண் புரை நோயால் பாதிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து 2002 ஆம் ஆண்­டி­லி­ருந்து கட்­புலன் ஆற்­றலை இழக்க ஆரம்­பித்த பான் யொங் (43 வயது) என்ற மேற்­படி பொலிஸ் அதி­காரி, தற்­போது வெளிச்­சத்தை மட்­டுமே உணரும் ஆற்­றலைக் கொண்­டுள்ளார்.

அவர் 3 நிர்­வாகக் கிரா­மங்கள் மற்றும் சிறிய கிரா­மங்­களை உள்­ள­டக்­கிய மாவட்­ட­மொன்றின் பாது­காப்­பிற்கு பொறுப்­பா­க­வுள்ளார்.
புகை­யி­ரத நிலை­ய­மொன்றில் அந்த பொலிஸ் நிலையம் செயற்­ப­டு­கின்ற நிலையில், அந்தப் புகை­யி­ரத நிலை­யத்தின் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ராக பான் யொங்கின் மனை­வி­யான தவோ ஹொங்யிங் (46 வயது) பணி­யாற்றி வரு­கிறார்.

அவர் தனது கண­வ­ருக்கு பிராந்தியமெங்கும் தின­சரி பாது­காப்புப் பரி­ சோ­த­னை­களை மேற்­கொள்­வ­தற்கு உதவி வரு­கிறார்.

இந்­நி­லையில் அந்தப் பிர­தே­சத்தில் பான் யொங்கின் மேற்­பார்வை யின் கீழ் கடந்த 10 வருட காலப் பகு­தியில் பொதுப் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் விடுக் கும் சம்பவங்கள் மற்றும் வீதி விபத்துகள் உள்ளடங்கலாக எந்த வொரு குற்றச்செயலும் இடம்பெற வில்லை எனத் தெரிவிக்கப்படுகி றது.
« PREV
NEXT »

No comments