Latest News

July 08, 2015

விடுதலைப் போராளிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு கூட்டமைப்பில் இடமில்லை வருந்தத்தக்க விடயமென்கிறார் புஷ்பகுமார்
by admin - 0

மண்­ணுக்­கா­கவும் மக்­க­ளுக்­கா­கவும் இன்­னு­யிரை தியாகம் செய்த முன்னாள் விடு­தலைப் போரா­ளிகள் அமைப்பின் உறுப்­பி­னர்­க­ளுக்கு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் இட­மில்லை என்­பது வருந்­தத்­தக்­கது. நல்­லாட்சி நடை­பெ­றும்­போது ஜன­நா­யகப் பாதையில் திரும்பும் அவர்­களை ஆத­ரிப்­பது தமிழ் மக்­களின் தலை­யாய கட­மை­யாகும் என கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் கு.புஷ்­ப­குமார் தெரிவித்தார்.

வவு­னி­யாவில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தையில் ஜன­நா­யக போரா­ளிகள் அமைப்­பி­ன­ருக்கு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் இட­மில்லை என கூறப்­பட்ட செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்­கும்­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், நல்­லாட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்ட பின்­னரும் பல முன்னாள் போரா­ளி­க­ளுக்கு நீதி­மன்­றத்தின் ஊடாக தண்­ட­னைகள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன. அண்­மையில் ஜனா­தி­பதி மைத்தி­ரியை கொலை செய்­வ­தற்கு முயற்­சித்­தார்கள் எனும் குற்றச்­சாட்டில் தண்­டனை வழங்­கப்­பட்­டி­ருக்கும் முன்னாள் போரா­ளிகள் இதற்கு சிறந்த உதா­ரணம்.

அவ்­வா­றா­ன­வர்­களின் கைது அல்­லது தண்­டனை போன்­ற­வற்­றுக்கு எதி­ராக குரல் கொடுப்­ப­தற்கு இன்று யாரும் இல்லை. ஜன­நா­யக வழியில் திரும்பும் அவர்­களை ஆத­ரிப்­ப­தற்கும் எவ­ருக்கும் மனம் இடம் கொடுக்­க­வில்லை. அப்­ப­டி­யானால் அவர்­களின் எதிர்­காலம் என்ன என்­பதை அனை­வரும் சிந்­திக்க வேண்டும். தொழில் வாய்ப்­புக்­காக அவர்கள் செல்லும் போது முன்னாள் போராளி எனும் பெயர் சூட்­டப்­பட்டு திருப்பி அனுப்­பப்­ப­டு­கின்­றனர். பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கு செல்லும் போதும் குற்­ற­வா­ளிகள் போல் நடத்­தப்­ப­டு­கின்­றனர். இன்னும் பலர் சிறையில் வாடு­கின்­றனர்.

இவ்­வாறு பல இன்­னல்­களை அவர்கள் எதிர்­நோக்கி வரு­கின்­றனர். அப்­ப­டி­யானால் அவர்­களின் குடும்ப நிலை என்ன என்­ப­தையும் சிந்­தி­யுங்கள். ஆகவே ஜன­நா­யக நீரோட்­டத்தில் இணைந்து அவர்­களின் பிரச்­சி­னை­களை அவர்­களே தீர்த்துக் கொள்ள முன்­வ­ரு­வதில் எவ்­வித தவறும் இல்லை.

ஆகவே மக்­க­ளுக்­காக போரா­டிய ஜனநாயக போராளிகள் அமைப்பு வடக்கில் மட்டுமல்லாமல் கிழக்கிலும் போட்டியிட்டு அவர்களது பிரச்சினைகளுக்கு மாத்திரமன்றி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதை வரவேற்கின்றேன் என்றார்
« PREV
NEXT »

No comments