நாடாளுமன்றத்தை மிக விரைவில் கலைத்து உடன் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துமாறு ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை கோரவுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
100 நாள் ஆட்சிக்கு என மக்களிடம் ஆணையைப் பெற்றுக் கொண்டு அதனை 200 நாள் வரை நீடிப்பதானது, மக்கள் ஆணையை மீறும் செயலாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஏப்பிரல் மாதம் 23ஆம் திகதி கலைப்பதாக தெரிவித்த நாடாளுமன்றத்தை இப்பொழுதாவது கலையுங்கள்.
இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயல்குழு கூடி விரிவாக ஆராய்ந்து தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், அதனை ஜனாதிபதியிடம் தெரிவிக்கவுள்ளோம் எனவும் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார்.
No comments
Post a Comment