பிரித்தானியத் தலைநகர் லண்டனில் மக்களுடனான நேரடிச் சந்திப்பு ஒன்றில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார மைச்சர் திரு.மாணிக்கவாசகர் கலந்துகொண்டிருந்தார்.
இச் சந்திப்பு, வடமேற்கு லண்டன் பகுதியில் உள்ள227, PRESTON ROAD, WEMBLY, HA9 8NFஎன்ற முகவரியில் உள்ள TGTE லண்டன் அலுவலக மண்டபத்தில் 26-06-2015 வெள்ளிக்கிழம்ஐ மாலை 7 மணிக்கு இடம்பெற்றிருந்தது.
சுழன்றடிக்கும் சூறாவளியாய் உலக நாடுகள் எங்கணும் சென்று இலங்கையில் தமிழினத்திற்கு ஏற்பட்ட கொடூரங்களையும், பாரிய இனப்படுகொல்ஐயையும், மனித உரிமை மீறல்களையும் ஆதாரங்களோடு சமர்ப்பித்து தமிழர்களுக்கான நீதிக்கு அவர்களின் ஆதரவை பெற்று வருபவர்.
குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் சார்ந்த எந்த கூட்டமாக இருந்தாலும் பெரும்பாலான அமர்வுகளில் தானும் நேரடியாக சென்று கலந்து கொண்டு தமிழினத்தின் விடுதலைக்காகவும், அனீதி இழைக்கப்பட்ட தமிழினத்திற்கு நீதி கிடைப்பதற்காகவும் இரவு பகலாக ஓய்வின்றி செயற்பட்டுவரும் ஒரு செயல் வீரன்.
ஐ.நா முன்னெடுக்கும் இலங்கை தொடர்பான மனித உரிமை விசாரணை நகர்வுகள் எந்தளவில் உள்ளன, அதனால் தமிழர்கள் அடையக்கூடிய நன்மை, தீமை என்பவற்றை தெரிந்து கொள்ளவும் இவருடனான சந்திப்பு வழி சமைத்திருந்ததுடன், சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியன தொடர்பில் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு நாடு கடந்த தமிழீழ அரசினால் மேற்கொள்ளப்படும் கையெழுத்து போரட்டம் தொடர்பான விளக்க உரையினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வழங்கியிருந்தனர்.









No comments
Post a Comment