நீர், சுகாதாரம், ஆரோக்கியம் தொடர்பான தெற்காசிய மாணவர் கருத்தரங்கு எதிர்வரும் 16ஆம் திகதி பத்தரமுல்ல ஜனகலா கேந்திரநிலையத்தில் ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டை சுகாதார அமைச்சு- கல்வி அமைச்சு- மற்றும் நீர் வள மற்றும் விநியோக அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.இலங்கையில் நடைபெறுவது ஆறாவது மாநாடு ஆகும்.
இதற்கு முன்னர் நடைபெற்ற 5ஆவது மாநாடு 2013ஆம் ஆண்டு நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்றது. சர்வதேச மற்றும் வலய சுகாதாரம் பற்றிய விபரங்களை இம்மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது.
14-18 வயது வரையான மாணவர்களுக்காக இந்த மாநாடு நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment