Latest News

June 06, 2015

திட்டமிட்ட கட்டமைப்பு ரீதியான இனவழிப்பு பாதுகாப்பு அமைச்சு நேரடி சம்பந்தம் அம்பலம்
by admin - 0


வடகிழக்கு தமிழர் பகுதியில் இளைய சமூக வர்க்கத்தை சீரழிக்க அதாவது கட்டமைப்பு ரீதியான இனவழிப்பை மேற்கொள்ள சிங்கள பாதுகாப்பு அமைச்சு நேரடியாக களமிறங்கியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது 

இதனை  முன்னணி வைத்திய நிபுணர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார் 
முன்னைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய தலைமையினில் டெங்கு தடுப்பு நடவடிக்கை எனும் பேரினில் சுகாதார அமைச்சுடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சு ஆரம்பித்திருந்த வேலை திட்டமொன்றின் போது இதனை அறிவித்திருந்ததாக அவர் மேலும் தெரிவத்தார்.

வடக்கு-கிழக்கினில் மீண்டும் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்காதிருக்க போதைபொருள்களை பயன்பாட்டினில் விடுவது அவசியமானதென அப்போது கூறப்பட்டுள்ளது.எனினும் அங்கு பிரசன்னமாகியிருந்த சுகாதார அமைச்சினை சேர்ந்த பெரும்பான்மையின வைத்தியர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன் அது தமது தொழில்முறைமைக்கு ஒப்பில்லாததெனவும் தெரிவத்துள்ளனர். 

எனினும் அதனை கருத்தினில் எடுக்க மறுத்த பாதுகாப்பு அமைச்சினை சேர்ந்தவாகள் ஒரு தகவலிற்காகவே இதனை உங்களிற்கு அறியத்தந்துள்ளதாகவும் தமது முயற்சி மலையகம் மற்றும் கிழக்கினில் பெரு வெற்றிருப்பதாகவும் வடக்கினில் மீண்டுமொரு ஆயுதப்போராட்டம் முளைவிடாதிருக்க  போதைபொருள் பயன்பாட்டை அதிகரிப்பது அத்தியாவசியமொனதென கூறியுள்ளனர்.

ஆட்சி மாற்றம் மற்றும் அண்மைய குடாநாட்டு சம்பவங்களின் தொடர்ச்சியாக தொடர்படைய மூத்த சுகாதார அமைச்சு அதிகாரியொருவர் இதனை தம்மிடம் தெரிவித்திருந்ததாகவும் அவ்வைத்திய நிபுணர் தெரிவித்தார்.
இதனிடையே யாழ்ப்பாணத்தில் இன்று போதைப்பாவனை, வன்முறைகள், வன்புணர்வுகள், ஜனநாயக விரோத நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. 
« PREV
NEXT »

No comments