Latest News

June 10, 2015

சவுதியில் கடும் துன்புறுத்தல்களுக்கு உள்ளான இலங்கையர்கள்!
by Unknown - 0

சவுதி அரேபியாவில் வீட்டுப்பணியில் ஈடுபட்ட இலங்கை தம்பதியர் வீட்டு உரிமையாளர்களின் கடும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாக எமது செய்திச் சேவைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் பொலன்னறுவை – கதுறுவெல பிரதேசத்திலிருந்து ஆர்.மல்லிகா மற்றும் அவரது கணவர் குமாரசிறி கமகே ஆகியோர் சவுதி அரேபியாவில் வீட்டுப்பணிக்காக சென்றுள்ளனர்.

கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தினூடாகவே அவர்கள் சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவருக்கும் பாடசாலைகளுக்கு செல்லும் வயதில் பிள்ளைகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து எமது செய்திச் சேவைக்கு தகவல் வழங்கிய ஆர்.மல்லிகா, தம்மையும் தனது கணவனையும் தொழில் வழங்குனர் பாரிய அளவில் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்திவருவதாக தெரிவித்துள்ளார்.

இதுதவிர, பணத்திற்காக வேறு வீடுகளுக்கு தம்மை தொழிலுக்கு அனுப்பவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமது பிரச்சினை தொடர்பாக சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதுவர் காரியாலயத்தில் முறையிட்ட போதும் இதுவரை தமக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என குறித்த பெண்ணின் கணவரான குமாரசிறி கமகே தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments