Latest News

June 03, 2015

உலக தமிழர் பேரவை – மங்கள லண்டனில் சந்திப்பு
by Unknown - 0

இலங்கை அரசின் பிரதிநிதிகளுக்கும், உலக தமிழர் பேரவைக்கும் இடையில் லண்டனில் நாளைய தினம் (04) இரவு மிக முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இச்சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருப்பதாக நம்பத்தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சந்திப்பில் இலங்கை அரசு சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்கின்றனர்.

உலக தமிழர் பேரவை சார்பில் அவ்வமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனும், தென் ஆபிரிக்க அரச பிரதிநிதிகள் சிலரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிய வருகின்றது.

யுத்தக் குற்றம் தொடர்பிலான ஐ.நா.அறிக்கையின் தன்மை குறித்தே இப் பேச்சுவார்த்தையின்போது ஆராயப்படும் எனவும் அறியக் கிடைக்கிறது.
« PREV
NEXT »

No comments