Latest News

June 03, 2015

எங்கள் காணி­களை மீட்­டுத்­தா­ருங்கள் பர­விப்­பாஞ்சான் பிர­தேச மக்கள் கோரிக்கை
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin , நாம் தமிழர்
யுத்­தத்தின் போது கிளி­நொச்சி மாவட்­டத்தில் இருந்து இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­ய­மர்த்தும் நட­வ­டிக்கை கடந்த 2009ஆம் ஆண்டு முதல் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முக­மாலை பகுதி வெடி­பொ­ருட்கள் அகற்­று­வதில் ஏற்­பட்­டுள்ள தாம­தத்­தினால் இப்­ப­கு­தியில் மீள்­கு­டி­ய­மர்­வுக்கு இது­வரை அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

கிளி­நொச்சி மாவட்­டத்தின் பூந­கரி பிர­தேச செயலர் பிரிவின் கீழ் உள்ள இர­ணை­தீவு கரைச்சிப் பிர­தேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பர­விப்­பாஞ்சான் ஆகிய பகு­திகள் தொடர்ந்தும் இரா­ணு­வத்­தி­னரின் ஆக்­கி­ர­மிப்பில் இருப்­பதால் இது­வரை மக்கள் மீள்­கு­டி­ய­மர்­வுக்கு அனு­ம­திக்­கப்­பட­வில்லை.

இவ்­வாறு இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டில் உள்ள பர­விப்­பாஞ்சான் கிரா­மத்தில் உள்ள தமது வாழ்­வி­டங்­களை மீட்­டுத்­த­ரு­மாறு இப்­ப­குதி மக்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு செட்­டி­குளம் மெனிக்பாம் நலன்­பு­ரி­நி­லை­யத்தில் இருந்த தங்­களை தமது சொந்த இடங்­களில் மீள்­கு­டி­யேற்­று­வ­தாக கூறி கடந்த 2010ஆம் ஆண்டின் ஆரம்­பத்தில் அழைத்து வந்து பாட­சாலை நலன்புரி நிலை­யத்தில் தங்க வைத்­தி­ருந்த நிலையில் பாது­காப்பு கார­ணங்கள் கருதி பர­விப்­பாஞ்சான் மீள்­கு­டி­ய­மர்வு ஒரு மாதத்தின் பின்னர் அனு­ம­திக்­கப்­படும் என்­றும்­ அ­து­வரை இந்த பகுதி மக்­களை தற்­கா­லிக இடங்­களில் தங்­கி­யி­ருக்­கு­மாறும் அதி­கா­ரி­களால் தெரி­விக்­கப்­பட்ட நிலையில் குறித்த கிராம மக்கள் தற்­கா­லிக இடங்­களில் தங்­கி­யி­ருந்­தனர்.

ஆனால் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக இக்­கி­ராம மக்கள் தற்­கா­லி­க­மா­கவே உற­வினர் நண்­பர்கள் வீடு­க­ளிலும் வாடகை வீடு­க­ளிலும் வாழ்ந்து வரு­கின்­றனர் என்றும் குறிப்­பாக ஒரு இலட்­சத்­திற்கும் மேற்­பட்ட தொகை­யினை முற்­ப­ண­மா­கவும் மாதாந்தம் பத்­தா­யி­ரத்­திற்கும் மேற்­பட்ட தொகை­யினை மாதாந்த வாட­கை­யா­கவும் செலுத்­தியே ஐந்து ஆண்­டு­க­ளாக தாங்கள் வாழ்ந்து வரு­வ­தா­கவும் தெரி­வித்­துள்ள இப்­ப­குதி மக்கள் தாங்கள் பரம்­பரை பரம்­ப­ரை­யாக வாழ்ந்து வந்­த ­த­மது பூர்­வீக நிலத்தை பெற்­றுத்­த­ரு­மாறு கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

குறித்த பர­விப்­பாஞ்சான் கிரா­மத்­தினைச் சேர்ந்த சுமார் 52 இற்கும் மேற்­பட்ட குடும்­பங்கள் இவ்­வாறு கடந்த ஐந்து வரு­டங்­க­ளாக சொந்த இடங்­களில் வாழ­மு­டி­யாத நிலையில் காணப்படுகின்றன. தமது சொந்தக்காணிகளை பெற்றுத்தருமாறு கோரி முன்னைய அரசாங்கத்திலும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தற்போது ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இவ்வாறு பல தடவைகள் தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments