Latest News

June 25, 2015

புலிகளின் சர்வதேச வலையமைப்பை அழிக்க அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுக்கின்றதது -மங்கள
by Unknown - 0


விடுதலைப்புலிகளின் சர்வதேச நிதி ஆதார வலையமைப்புக்களை பலவீனப்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டுவருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கையின் முன்னாள் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மங்கள சமரவீர மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளை பலப்படுத்தி, விடுதலைப் புலிகளின் நிதி ஆதார வலையமைப்புகளைப் பலவீனப்படுத்தும் முயற்சியில் புதிய அரசாங்கம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இதற்காக இதற்காக இலங்கையுடன் முன்னர் இணைந்து பணியாற்றிய நாடுகளுடனான இராஜதந்திர உறவுகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.

புலனாய்வுத் தகவல்களை பகிர்ந்து கொள்வதிலும், தீவிரவாத முறியடிப்பு மற்றும் நிதி ஆதார வலையமைப்புகளுக்கு எதிரான எல்லா நிபுணர்களுடனும் அரசாங்க முகவர் அமைப்புகள் நெருங்கிய உறவுகளைப் பேணி வருகின்றன.

அனைத்து வடிவங்களிலுமான தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் உறுதியாக இருக்கும் இலங்கை அரசாங்கத்தின் இந்தக் கொள்கை நிலையானதாக இருக்கும்' என்று மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்காவின் அறிக்கையின் வெளிப்பாட்டுத்தன்மையை நோக்கின் அது மகிந்த ராஜபக்சவின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் மகிந்த தோல்வியடைந்ததாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மகிந்த ராஜபக்ச உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்திருந்தாலும் புலிகளை அவரால் முற்றாக அழிக்க முடியவில்லை என்றும், தற்பொழுது உள்ள அரசாங்கம் சர்வதேச ரீதியில் புலிகளின் வலையமைப்பை பலவீனப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments