வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால், நாட்டுக்கு மங்களகரமான எதுவும் நடக்கவில்லை என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, மங்கள சமரவீரவினால் நாட்டுக்கு அனர்த்தமே நேர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த வருடத்தின் இறுதியில் இலங்கைக்கு புலம்பெயர் தமிழர்களின் கொண்டாடடம் ஒன்று நடத்தப்பட உள்ளது. இந்த கொண்டாட்டம் நாட்டுக்கு மரண வீடாகி விடுமோ என்பதும் சந்தேகத்திற்குரியது.
மேலும் புலம்பெயர் தமிழர்களின் கொண்டாட்டத்திற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு, இலங்கைக்கு 3.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக பிரசாரம் ஒன்று பரவிவருகிறது.
எந்த அடிப்படையில் அந்த பணத்தை மனித உரிமை ஆணைக்குழு வழங்கியது என்பதும் கேள்விக்குரியது.
புலம்பெயர் தமிழர்களின் கொண்டாட்டம் எந்த நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது என்பது தெளிவுப்படுத்தப்படவில்லை.
நல்லிணக்கத்தை நான் உட்பட எமது கட்சி எதிர்க்கவில்லை. ஆனால், இப்படியான கொண்டாட்டங்கள் சந்தேகத்திற்குரியன.
புலம்பெயர் புலிகள் நாட்டுக்கு ஏற்படுத்திய அழிவு குறித்து இதுவரை மன்னிப்பு கோரவில்லை.
இதனால், புலம்பெயர் தமிழர்களின் கொண்டாட்டம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் நிஷாநடத ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment