Latest News

May 30, 2015

சிறிலங்காவினை அனைத்துலக நீதிமன்றில் பாரப்படுத்துமாறு கோரும் பொதுக்கூட்டம் லண்டன் ஈஸ்தாமில் தொடங்கியது!
by Unknown - 0

சிறிலங்காவினை அனைத்துலக நீதிமன்றில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கத்தினை தீவிரப்படுத்தும் பொருட்டு லண்டன் ஈஸ்தாம் பகுதியில் பொதுக்கூட்டமொன்று தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தியுள்ள இக்கூட்டதில் பத்து லட்சம் கையெழுத்துக்களை இலக்காக கொண்டுள்ள கையெழுத்து இயக்கம் தொடர்பிலும் மற்றம் நடந்து முடிந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக் கூட்டம் தொடர்பிலும் கருத்துப்பரிமாறப்படவுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் சமூக-அரசியல் ஆர்வலர்கள் மற்றும் பலரும் இன் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். இப் பொதுக்கூட்டம் தொடர்பான மேலதீக தகவல்களிற்கு தொடர்ந்தும் எமது இணையத்துடன் இணைந்திருக்கவும்.


















« PREV
NEXT »

No comments