Latest News

May 30, 2015

கட்சிமாறும் அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட தடை -சு.க., ஐ.தே.க தலைவர்கள் தீர்மானம்
by Unknown - 0

தேர்தலில் போட்டியிடும் நோக்கில் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளில் இருந்து அணி மாறும் எந்த அரசியல்வாதிக்கும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை ஆரம்பிக்கும் நோக்கில் இரண்டு தலைவர்களும் இந்த இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக இணைந்து அமைத்த அரசாங்கத்தின் மூலம் மக்களுக்கு பாரிய பணிகளை செய்ய முடிந் துள்ளதாக இரண்டு கட்சிகளின் பேச்சாளர்கள் சிலர் கூறியுள்ளனர்.

இதனால் அணி மாறுவதற்கு இடமளித்தால், இந்த ஒத்துழைப்புக்கு பங்கம் ஏற்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இரண்டு பிரதான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பலர் கட்சி மாறுவதற்கு தயாராக இருக் கின்றனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கட்சி தாவும் விடயம் தொடர்பில் அறிந்து கொண்டதை அடுத்து இரு கட்சிகளின் தலைவர் களும் இது குறித்து விரிவாக கலந்துரையாடிய பின்னர் மேற்படி இணக்கத்திற்கு வந்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments