இலங்கை தொடர்பில் லண்டனைத் தளமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவை இன்று தென்னாபிரிக்க அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியது.
தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகளுக்கான பிரதியமைச்சர் ( Ms. Nomaindiya C Mfeketo )நொமெய்ன்டியா சி பெகேடாவின் அழைப்பின்பேரில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
தென்னாபிரிக்க குழுவில் உதவி அமைச்சருடன், பிரித்தானியாவுக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ஒபெட் லாபா, ஆசிய மற்றும் மத்திய கிழக்குக்கான உதவிப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அனில் சூக்கல், தென்னாபிரிக்க உதவி ஜனாதிபதியின் ஆலோசகர் நொகுஹான்யா ஜெலெ, தென்னாசிய உதவிப் பணிப்பாளர் டைல்மேன் பேட்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இச்சந்திப்பின் போது ஆட்சி மாற்றத்தின் பின்னரான இலங்கையின் நிலமை தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments
Post a Comment