பள்ளி பருவத்தில் இருந்தே தேசியக் கிரிக்கெட் அணிக்கான வீரர்களை தேடும் பணியை தொடர வேண்டும் என்று இலங்கை வீரர் ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான மஹேல ஜெயவர்த்தனே, தரமான கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் இது தொடர்பாக அவர் கூறுகையில், பள்ளிப் பருவத்தில் இருந்தே கிரிக்கெட்டை வளர்க்க வேண்டும். அதை ஊக்குவிக்க நான் சிறந்த ஒரு திட்டத்தை வழங்கியுள்ளேன்.
அதன்படி செயற்பட்டால் சிறந்த வீரர்களை தெரிவு செய்யலாம். தேசிய அணிக்கான வீரர்களையும் நாம் இனங்கண்டு கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கிரிக்கெட் நிர்வாகம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆனால் கிரிக்கெட்டின் கட்டமைப்பு ஒரு போதும் மாறாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment