புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேல் மாகாண சபை உறுப்பினர் நவுசர் பௌசி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
10 இலட்ச ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகள் மற்றும் பத்து இலட்ச ரூபா காசுப்பிணையில் செல்வதற்கு புதுக்கடை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இவருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
2011ஆம் ஆண்டு, கொழும்பு சுதந்திர சதுக்கப் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியமை மற்றும் கொலை அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் நவுசர் பௌசியை கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று பணிப்புரை விடுத்திருந்தார்.
நவுசர் பௌசி, அமைச்சர் ஏ எச் எம் பௌசியின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment