யாழ்ப்பாணம் கட்டுவனில் இயங்கிய மாத்தையா குழு என்ற ரௌடிக் கும்பலை பொலிசார் நேற்று மடக்கிப்பிடித்தள்ளனர்.
அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கட்டவனில் நேற்றிரவு மாத்தையா குழு திடீர் தாக்குதலொன்றை நடத்தியிருந்தது.
வீடொன்றிற்குள் புகுந்த மாத்தையா குறூப், இளைஞன் ஒருவரை வாளால் வெட்டி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றது.
இதனையடுத்து, சிறிலங்கா காவற்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் மாத்தையா குறூப் ரௌடிகள் வளைத்துப்பிடிக்கப்பட்டனர்.
மூன்று ரௌடிகள் கைது செய்யப்பட்டனர். எஞ்சியவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
மாத்தை குழு கடந்த பல மாதங்களான இந்த பகுதியில் நாட்டாமை வேலைகளில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.
இவர்களுக்கும் புலிகளின் முன்னாள் மாத்தையா என்பவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment