வவுனியா மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற இரண்டு கொலை சம்பவங்கள் அங்குள்ள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரெலோ உறுப்பினர் எஸ்.வடிவேலு என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் யாரும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை.
பின்னர் 11 வயதான சிறுவன் ஒருவர் வவுனியா - நெலுங்குளம் பகுதியில் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்ய்பபட்டிருந்தார்.
எனினும் இந்த கொலைகள் தொடர்பில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில் இது குறித்து பொது மக்கள் அச்சத்துடன் இருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment