Latest News

May 10, 2015

இனப்பிரச்சியை தீர்க்க அரசாங்கம் முனையவில்லை - ஐரோப்பிய ஒன்றியம்
by admin - 0

சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைளை தீர்க்க முனைப்பு காட்டவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான தூதுவர் டேவிட் டேய்லி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில், இதனைத் தெரிவித்துள்ளார்.பதிவு இணைய செய்தி 

யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் ஆகின்றன.

இனப்பிரச்சினையை தீர்க்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 இனிவரும் காலத்திலேனும் இனப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். பதிவு இணைய செய்தி  

அதேநேரம் முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்றும், தமிழ் தரப்பினருடன் அரசாங்கம் இதற்காக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments